Skip to main content

Posts

Showing posts with the label Government and Politics

தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!

தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி . மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது. ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது. தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் ...

``ரூ.2,000 நோட்டுகளை மோடி தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டார்!" - பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர்

2016-ல் பிரதமர் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது அறிவித்தார். அதைத்தொடர்ந்தது, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் மக்களிடம் மிகப் பரவலாகப் புழங்கிவந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே புழக்கத்திலிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. அதோடு, 2,000 ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணத்தை மேலும் பதுக்கிவைக்கவே உதவியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. 2,000 ரூபாய் நோட்டு இப்படியிருக்க 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாகக் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 30-க்குள் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம், டெபாசிட்டும் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி முதலில் ஆதரிக்கவில்லையென்றும், பின்னர் தயக்கத்துடனே அதற்கு ஒப்புக்கொண்டார் எனவும் பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். நிருபே...

ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு... புகைச்சலில் அதிமுக சீனியர்ஸ்?!

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் - ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பலநூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி. இந்த சந்திப்பின்போது, எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், பென்ஜமின், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர். குறிப்பாக, ஆளுநரை சந்திக்க சீனியர்கள் அழைத்து செல்லாதது சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு எதிராக அதிமுக பேரணி இதுகுறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுநரை நேரில் சந்திக்க எடப்பாடியையும் சேர்த்து 10 பேருக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அமைப்பு செயலாளர் என்ற முறையில் பென்ஜமின், பால கங்காவை அழைத்துச் சென்றிருக்க...

``ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக்கொண்டார்களே; அதுவே மகிழ்ச்சி" - ப.சிதம்பரம் ஜாலி டாக்

இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவமனை விரிவாக்க பணியின் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம். ப.சிதம்பரம் அப்போது அவர் பேசுகையில், "கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கிறார்கள். என் பாட்டனார் காலத்தில் சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம் 120 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கிறது. தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், செங்கோட்டை போன்றவைகள் கட்டப்பட்ட காலத்தை விட, அதிநவீன தொழில்நுட்ப வசதி இப்போது இருக்கிறது. தரமான பொருட்களைக் கொண்டு கட்டுவதால்தான் கட்டடங்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன. அரசு ஒப்பந்ததாரர்கள் லாபத்தை ஈட்டலாம் தவறில்லை, ஆனால், தரமான கட்டடங்களை கட்ட வேண்டும்" என்று அரசு ஒப்பந்தரார்களை அதிர வைத்தார். இதை அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் ரசித்தனர். ப.சிதம்பரம் அடுத்து, காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ராஜீவ் காந்தி நினைவு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கறுப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று...

டெல்லி; மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு... ஆளும் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு!

டெல்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு நீடித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீா்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, உயரதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிப்பதற்கு டெல்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மைச் செயலர், உள்துறை அமைச்சா் ஆகியோா் அடங்கிய 'தேசிய தலைநகா் சிவில் சர்வீஸ்' ஆணையத்தை அமைத்து, மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பித்தது. டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசர...

`இங்க கடத்தல் தொழிலா நடக்குது... எவ்வளவு அசிங்கம்?' - கனிமவள லாரிகளை பார்த்து ஆவேசமான அமைச்சர்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அப்போது களியக்காவிளை செக்போஸ்ட் பகுதியில் பத்து சக்கரங்களைக் கொண்ட டாரஸ் லாரிகள் அதிக அளவு கனிமவளங்களுடன் கேரளா நோக்கி பயணிப்பதை கண்டார். உடனே காரில் இருந்து இறங்கி செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸாரிடம், "நீங்க என்ன பண்ணுறீங்க. இதுக்கா உங்களை இங்க உக்கார வைத்திருக்கிறாங்க. தம்பி, எல்லாரையும் தொலைச்சுகட்டிபோடுவேன். எஸ்.பி-யை கூப்பிட்டு எல்லா வண்டிகளையும் லாக் பண்ணுங்க. கனிமவளம் கடத்தும் லாரிகள் நான் ஏர்ப்போட்டுல இருந்து வரும்போது ஐம்பது வண்டிகளை பார்த்தேன். பத்து வீலுக்கு மேற்பட்ட வண்டிகள் போகக்கூடாதுண்ணு அரசு ஆர்டர் போட்டிருப்பது தெரியாதா. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீங்க. இங்க கடத்தல் தொழிலா நடக்குது. எவ்வளவு அசிங்கம். எல்லா லாரிகளையும் ஒதுக்கச்சொல்லி சாவிகளை வாங்குங்க" என ஆவேசமானார். பின்னர் எஸ்.பி-யை தொடர்புகொண்டு பேசினார் அமைச்சர் மனோதங்கராஜ். அப்போது அங்கிருந்த 2 லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு சென்றது தெரியவந்து. அந்த 2 லாரிகள...

``தமிழக முதல்வருக்கு கர்நாடகாவில் அவமரியாதை; சங்கடமாக இருக்கிறது!" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு தொகுதியில் அரசு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆளும்கட்சி பல்வேறு பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் வருகின்ற 22-ஆம் தேதி(இன்று) எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம். திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதில் முதலமைச்சரின் மருமகன் சம்பந்தப்பட்டுள்ளார் என முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த ஆடியோவில் வெளியாகிருந்தது. செய்தியாளர் சந்திப்பு அன்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மதுக்கடைகளை மூடச்சொன்னார்கள். தி.மு.கவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் ஆளுநரை சந்தித்து எங்களுக்கு எதிராக மனு கொடுத்தார்கள். ஆனால் இன்று அமைதியாக உள்ளார்கள். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்துள்ளதில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பணமதிப்பிழப்பை திடீரென கொண்டு வந்தனர். ஆனால், தற்போது கால அவகாசம் கொடுத்துள்ளனர். எனவே மத்திய அரசின் இந்த விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடைய...

கார்ட்டூன்

சேர்... ஷேர்...

"நாங்கள் காந்தி வழி வந்தவர்கள், ஒருபோதும் கோட்சேவை ஆதரிக்க மாட்டோம்!" - த.மா.கா யுவராஜ் ஓப்பன் டாக்

கள்ளச்சாராயம் விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாகியிருக்கும் நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். இது குறித்தும், தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும் அந்தக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்... "கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாகியிருப்பதால், தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக திடீரென மதுவுக்கு எதிராக த.மா.கா கிளர்ந்தெழுந்து, கையெழுத்து இயக்கம் செய்வதாக விமர்சனம் எழுந்திருக்கிறதே?" "தற்போதைய தி.மு.க முழுக்க முழுக்க மதுவை மட்டுமே நம்பியே அரசை நடத்துகிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் திறக்கிறது. தற்போது கள்ளச்சாராய விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுக்கால தமிழக வரலாற்றில் இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்கள் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுப்பது அரசுக்கு அவமானமில்லையா... பூரண மதுவிலக்குதான் தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கை. ஆனால், அதை ஒரேநாளில் அமல்படுத்திவிடமுடியாது என்பதால் இயக்கமாக முன்னெடுக்க த.மா.கா முயல்கிற...

Tamil News Live Today : `சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை...' - வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்; காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். `சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை...' - வானிலை ஆய்வு மையம் தகவல் மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

ஆவடி போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது ஏன்... புதிய கமிஷனராக அருண் டிக் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

தமிழகத்தில் ஒரே நாளில்  ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக ஆவடி மாநகரத்தின் முதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து , திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி-யாக ஆல்பர்ட் ஜான், சென்னை பூக்கடை துணை கமிஷனராக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்.பி-யாக ஹர்ஸ் சிங், சென்னை மாநகர நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக சீனிவாசன், ஈரோடு மாவட்ட எஸ்.பி-யாக ஜவகர், க்யூ பிரிவு எஸ்.பி-யாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். போலீஸ் காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி சரவணன், சென்னை போக்குவரத்து வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக ராஜேஷ் கண்ணன், மாநில குற்ற ஆவணகாப்பக எஸ்.பி-யாக கலைச்செல்வன், வேலூர் எஸ்.பி-யாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி-யாக சாய் பிரனீத், மதுரை தெற்கு துணை ஆணையராக காத்திருப்போர் பட்டியலிலிருந்த பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சி.பி.ச...

Tamil News Live Today: கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா! கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் தேர்வு செய்தது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்று கொள்கின்றனர். சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். கடந்த முறை சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்ற அதே கண்டீரவா மைதானத்தில் இம்முறையும் விழா நடைபெறுகிறது. இதற்காக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, பதவியேற்புக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிவக்குமார், சித்தராமையா மேலும், முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவுடன், 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 20 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், 8 பேர் மட்டுமே இறுதி செய்யப்பட்டதாக பெங்களூருவில் இர...

ஒன் பை டூ: போதைப்பொருள் விவகாரம்: அமைச்சர் பொன்முடி சொன்னது சரியா?

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களே குட்கா விவகாரத்தில் சிக்கி, அந்த வழக்கு இன்றுவரை நிலுவையிலிருக்கிறது. அதுமட்டுமன்றி போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவேண்டிய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளே போதைப்பொருள் விற்பனைக்கு உறுதுணையாக இருந்ததற்காக இன்னமும் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க இப்படியென்றால், அவர்களுடன் கூட்டணியிலிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, விமான நிலையங்கள் தொடங்கி துறைமுகங்கள் வரைக்கும் தனியாருக்குத் தாரை வார்த்ததன் மூலம், அவற்றையெல்லாம் தடையில்லாமல் போதைப்பொருளைக் கொண்டுவருவதற்கான நுழைவாயில்களாக்கிவிட்டது. தனியார் வசமிருக்கும் அந்தத் துறைமுகங்களில் எத்தனை ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பிடிபடுகின்றன என்பதை நாம் தினமும் செய்திகளில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்... அ.தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் கும்பல்கள் தமிழ்நாடு முழுக்க வேரூன்றி, கிளை பரப்பி பெருமரமாகிவிட்டன. அந்த மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எறியும் வேலையைத் தளபதி ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். கஞ்சா வேட்ட...

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 14 பேர் பரிதாபாக உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரனை, பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் நேரில் ஆறுதல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கட்டுக்கடங்காத விஷச்சாராயம்... கட்டுப்படுத்துவதில் ஸ்டாலின் அரசுக்குப் பெருந்தோல்வியா? - ஓர் அலசல் அரசியல் ரீதியாக இவ...

காங்கிரஸின் தேசிய முகமாக பிரியங்கா காந்தி... எழுந்த கோரிக்கை; காத்திருக்கும் தலைமை - பின்னணி என்ன?!

நேரு குடும்பத்தினர் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்... காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆகையால்தான், சீதாராம் கேசரியை தலைவர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தது. சோனியா காந்தி தலைமையில்தான், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி ஆனால், வயோதிகம் காரணமாக கட்சி நடவடிக்கைகளை சோனியா காந்தி குறைத்துக்கொண்டதாலும், தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததாலும், மல்லிகார்ஜுன கார்கே தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரான பிறகு, இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, தற்போது கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்களே இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட...

மும்பை தாக்குதல்: சிறையிலிருக்கும் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு அரங்கேற்றிய தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் மும்பையில் இறங்கிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்ணில் படும் அப்பாவி மக்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். மும்பை தீவிரவாத தாக்குதல் சற்றும் எதிர்பாரா இந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்துப் போராடிய தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மும்பை போலீஸார் மூன்று நாள்களில் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதியும் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். இந்த நிலையில் மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கச் சிறையிலிருக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக இந்த தீவிரவாத தாக்குதலில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக இந்திய முன்வைத்த கோரிக்கைய...

Tamil News Today Live: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு வீரர் இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டது. பின்னர் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் ...

``கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அமைதி காப்பது ஏன்?!” - சாடும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி  அதிமுகவின் மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் நேற்று (17-05-2023) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் போலி மதுபானங்களை தயாரிக்க, தமிழகத்தின் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு எரி சாராயம் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தி.மு.க துணையோடு பல திமுக உறுப்பினர்கள் தமிழகத்திற்கு போலி மதுபானம் கடத்தல்  தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அ.தி.மு.க சார்பில் தொடர் குற்றச்சாட்டை கூறி வருகிறோம். புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் புதுச்சேரி கலால் துறை மூலம் ஒரு சில வழக்குகள் பதியப்பட்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? அதன் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கூலி தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதேபோல புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவாவின் தொகுதியான வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் மதுபான...

கள்ளச்சாராய விவகாரம்: ``தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுவை அரசுதான் பொறுப்பு!” - நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுவையில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லரை விற்பனை செய்த இருவர், அதனை புதுவையைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை புதுவையில் இருந்து கடத்தி சென்று தமிழகத்தில் விற்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான முழு பொறுப்பையும் புதுவை அரசு ஏற்க வேண்டும். கலால் துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதுவையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய பேர்வழிகளுக்கு புதுவை அரசு உடந்தையாக உள்ளது. காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால் துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து, முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதாக பகிரங...