Skip to main content

Posts

Showing posts with the label Health News

Doctor Vikatan: குதிகால் வலிக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 49. எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் இடது குதிகாலில் வலி வந்தது. அதற்கு நிறைய ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டேன். ஆனால், சரியாகவில்லை. இப்போது இன்னொரு குதிகாலிலும் வலி ஆரம்பித்திருக்கிறது. ஆங்கில மருந்துகள் தவிர்த்து சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு ஏதேனும் இருக்கிறதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி    அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சித்த மருத்துவத்தில் குதிகால் வலி பிரச்னைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன.  'வாதம் இருந்தால் வலி மிகும்' என்கிறது சித்த மருத்துவம். எனவே, வாதத்தைக் குறைக்க முதலில் பேதி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். உடலின் கழிவுகள் நீங்கினால்தான் உடலியக்கம் சீராகும். வாதம் சரியாகும், வலியும் படிப்படியாகக் குறையும். மலச்சிக்கல் இருந்தாலும் குதிகால் வலி அதிகமாகும். மருத்துவ ஆலோசனையுடன் நிலவாகை, கடுக்காய் போன்ற மருந்துகளை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்ளலாம். வயிறு மந்தமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புளிப்பு, காரம் அதிகமான உணவுகளைத் தவிர்த்து, எளிமையாகச் செரிக்கக...

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கர்ப்பம் கூடாதா, ஐவிஎஃப் சிகிச்சை செய்யக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை.  உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இப்போதுதான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். இந்நிலையில் கோடைக்காலத்தில் ஐவிஎஃப் சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர் ஒருவர் அவளுக்கு அறிவுறுத்தியதாகச் சொல்கிறாள். இது உண்மையா... அதே போல கோடைக்காலத்தில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடும்படியும், ஆடி மாதத்தில் தம்பதியரைப் பிரித்து வைக்கவும் அதுதான் காரணம் என்றும் காலங்காலமாகச் சொல்லப்படுவது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ். பாலியல் மருத்துவர் காமராஜ் கோடைக்காலத்தில் பொதுவாக அதிகம் ஐவிஎஃப் செய்ய மாட்டார்கள். அதில் வெற்றிவிகிதம் குறைவு. ஜனவரி, பிப்ரவரி போன்ற குளிர் காலங்களிலேயே நிறைய ஐவிஎஃப் சிகிச்சைகள் நடக்கும். இதுதான் இன்றைய நிலைமை. ஐவிஎஃப் சராசரியாக கடந்த 30 ஆண்டுகளாகத்தான் செய்யப்பட்டு வருகிறது.  புதிய ஆய்வுகள் நடக்கும்பட்சத்தில் என்னவிதமான தரவுகள் எப்படி வரும் என்பதைப்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோடைக்காலத்தில் குழந்தை பிறந்த...

அட்லாண்டிக்: சொகுசு கப்பலில் 'ஹண்டாவைரஸ்' தாக்குதல் - சிக்கிய 2 இந்தியர்கள்! - என்ன நடந்தது?

'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான 'ஹண்டாவைரஸ்' (Hantavirus) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹான்டா வைரஸ் இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்களோ அல்லது தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்களா என்பதும் மர்மமாகவே ...

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: வயிற்றுப் பிரச்னை முதல், சளி, இருமல் என உடல்நலம் பாதிக்கப்படும்போதெல்லாம் நான் ஆங்கில மருந்துகள் எடுக்க மாட்டேன். சித்த மருந்துகள் எடுத்துச் சரியாக்கிக் கொள்வதுதான் வழக்கம்.  ஆனால், எப்போது சித்த மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலும் எனக்கு மலச்சிக்கல் பிரச்னையும் கூடவே வந்துவிடுகிறது. சித்த மருந்துகள் உடல் சூட்டைக் கிளப்புமா... மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கும் என்பது  தவறான  கருத்து. பெரும்பாலான சித்த மருந்துகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதுதான் உண்மை. சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படுவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். உங்கள் கேள்வியைப் படிக்கும்போது, உங்களுக்கு உடல்நலமில்லாத போதெல்லாம் நீங்களாகவே சித்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவீர்கள் என்று தெரிகிறது. இப்படி முறையான மருத்துவ ஆலோசனை இன்றி, நீங்களாகவே மருந்துகளை எடுத்த...

Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்றன. சம்மரில் கூந்தல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம்... தினமும் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிப்பது சரியானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகியல் ஆலோசகர் கீதா அஷோக். கீதா அஷோக் தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக்கும் படிந்து விடும். மேலும், நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தினசரி வெயிலில் போக வேண்டி இருந்தால் முடிந்த அளவு நல்லெண்ணெய் தடவி ஊற விட்டுக் குளிப்பது சிறந்தது. சூரிய ஒளியால் நம் ஸ்கால்ப் பாதிக்காமல் நல்ல சன் ஸ்க்ரீனாக நல்லெண்ணெய் செயல்படும். இதைத்தான் காலங்காலமாச நாம் செய்து வருகிறோம். எண்ணெய்க் குளியல் வெயில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த கேசப் பராமரிப்பு. அதிக வியர்வை காரணமாக தலையில் ஒருவித வாடை ஏற்படும். எனவே,  தினசரி தலைக்குக் குளிப்பது  நலன் பயக்கும்.    100 மிலி ட...

வெயிலை வெல்லும் வித்தை: தீர்வாகுமா ORS கரைசல்?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நம்மை வாட்டத் தொடங்கும். இதற்காக அவசர கதியில் மருந்தகங்களில் கிடைக்கும் ORS கரைசலையோ அல்லது கடைகளில் விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களையோ நாடுவது எப்போதும் சரியான தீர்வாகாது.   சித்த மருத்துவர் அபிராமி ORS கரைசலை யாரெல்லாம், எப்போது பயன்படுத்த வேண்டும், சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக கோடைக்கால பானங்கள் எவை, சளி மற்றும் சைனஸ் தொல்லை இருப்பவர்கள் வெயிலை எப்படிச் சமாளிப்பது? அத்தனை கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், 'மூலிகைமணி' அபிராமி. ஓஆர்எஸ் என்பது.... ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) என்பது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த ஃபார்முலா. இது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கான சிகிச்சை முறை (Therapeutic). சிலர் தேவையின்றி ஓஆர்எஸ் பவுடரை வாங்கி வைத்துக்கொண்டு குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர், போலியான ஓஆர்எஸ் பவுடர்களை அடிக்கடி குடித்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில் இரண்டுமே ...

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்; ஜூஸ், ஐஸ் வாட்டரால் தணியாத தாகம்... எப்படித்தான் சமாளிப்பது?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருட வெயில் கொடுமையாக வாட்டி வதைக்கிறது. திட உணவுகளைத் தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால், ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம், ஜூஸ் என எதைச் சாப்பிட்டாலும் தாகம் தணிவதில்லை. எப்போதும் தாகமாகவே உணர்கிறேன். இதைச் சமாளிக்க என்னதான் செய்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் வருடந்தோறும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. வட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, இள வயதினர்கூட உயிரிழக்கும் செய்திகளைக் கேள்விப்படுகிறோம். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடலை நீரேற்றத்துடன் (Hydration) வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஐஸ் வாட்டரோ, ஐஸ் க்ரீமோ, தாகம் தணிக்காது. இயற்கை பானங்களே தாகம் தணித்து, உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும். கோடையில் தினமும் ஓர் இளநீர் குடிப்பது சிறந்தது. இதில் நுண் ஊட்டச்சத்துகள் (Micro-nutrients) நிறைந்துள்ளன. வயிற்று எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிக்கும...

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதும் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் சீக்கிரம் வறட்சி (Dehydration) அடையும் என்பதால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் வெப்பம் உச்சத்தில் இருப்பதால், நம் உடலின் வெப்பநிலையைச் சரியான அளவில் வைத்திருக்க நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: Weight Loss முயற்சி... சம்மரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? கோடைக்காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற சீசன் பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா மற்றும் காரம் அதிகமுள்ள உணவுகளைக் கண்டிப...

Doctor Vikatan: அளவுக்கதிக வெயில்... சூரிய வெளிச்சம் கண்களில் பட்டால் பார்வை பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: வெயில் காலத்தில் கண்களுக்கு கட்டாயம் கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா... சூரிய ஒளி கண்களில் நேரடியாகப் பட்டால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா? சாதாரண கண்ணாடி போதுமா, கூலிங் கிளாஸ்தான் அணிய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய்ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் அதிகப்படியான வெயில் கண்களைப் பல வழிகளில் பாதிக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV rays) கண்களை பாதித்து பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமான பாதிப்பு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை (Cataracts). புறஊதா கதிர்கள் கண்களில் கண்புரை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. அடுத்து, புறஊதாக் கதிர்கள்,  விழித்திரையின் (Retina) மையப்பகுதியான மேகுலாவை  சேதப்படுத்தலாம். அதனால் வரும் பாதிப்பை  மேகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration) என்கிறோம்.  விழித்திரையில் உள்ள நரம்புத் திசுக்களை பாதிப்பதால் சோலார் ரெட்டினோபதி (Solar Retinopathy) என்ற பிரச்னை வரலாம்.  சூரியனின் புறஊதாக் கதிர்கள், கண்களின் வெளிப்புறப் பகுதியையும் பாதிக்கலாம். அந்த வகையில்,  ...

Doctor Vikatan: கோடைக்காலம்: கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா அதீத வெயில்?

Doctor Vikatan: என் தோழி கர்ப்பமாக இருக்கிறாள்.  கர்ப்பம் உறுதியான நாள் முதல் வீட்டைவிட்டே வெளியே வர மறுக்கிறாள். வெயிலின் தாக்கம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என உறுதியாக நம்புகிறாள்.  அவளது பயம் அனாவசியமானதுதானே.... வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக வழிகாட்டல் ஏதும் உண்டா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி கோடைக்காலத்தில் எல்லோருக்குமான பொதுவான அறிவுரையாகச் சொல்லப்படுவதுதான் கர்ப்பிணிகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. அது டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது. மிக அதிக வெப்பமான சூழலுக்கு வெளிப்படும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் விளைவாக தலைச்சுற்றல், வாந்தி, களைப்பாக உணர்வது போன்ற அறிகுறிகள் வரலாம். இதைத் தவிர்க்க அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 3 லிட்டராவது குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள், இளநீர், மோர் போன்று குடித்து உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும். வெப்ப அலை வீசும்போதும...

Doctor Vikatan: கோடையின் தாக்கம்... முதியவர்கள் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!

Doctor Vikatan: இந்த வருடம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இள வயதினரே இதைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில், முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்வது... அவர்களுக்கான பிரத்யேக வழிகாட்டல், மருத்துவ ஆலோசனைகள் ஏதும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் இந்த ஆண்டு குளிர்காலம் எந்த அளவிற்குக் கடுமையாக இருந்ததோ, அதே அளவிற்கு கோடைக்கால வெப்பமும் மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஏப்ரல் மாத வெயிலே உணர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மிகவும் கொடுமையாக இருப்பதை நாம் அனுபவித்து வருகிறோம். இந்தக் கோடைகாலம் அனைவருக்குமே சவாலானதுதான் என்றாலும், முதியவர்களுக்கு இது  இன்னும் அதிக சவாலானதாக இருக்கும். அவர்கள் மிகுந்த கவனத்தோடு இந்த நாள்களைக் கடக்க வேண்டும்.  மிக முக்கியமாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதியவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பேருந்து அல்லது ஆட்டோ போன்ற திறந...

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்... குளிர்ந்த நீரில் குளித்தால் Heart Attack வருமா?

Doctor Vikatan: வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியைத் தந்தது. அதாவது, குளிர்ச்சியான அல்லது அதிக சூடான நீரில் குளிக்கும்போது, சிலருக்கு அது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம் என்றும், குளியலறையில் நிகழும் மாரடைப்புகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது. தலையில் நேரடியாகத் தண்ணீரை ஊற்றுவது ஆபத்தை அதிகரிக்கும் என்றும், முதலில் கால்கள், பிறகு உடல், இறுதியில் தலை எனக் குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுவது இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? குளிர்ந்த நீரில் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மிகவும் அதிகமான வெப்பநிலை மாற்றங்களுக்குத் திடீரென ஆட்படுவது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை (strain) ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குளிக்கும்போது எப்போதாவது ஒருமுறை இப்ப...

ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்துவரின் Pro Tips!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசல் வெப்ப அலையினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் இலவசமாக வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்த நிலையங்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண் வெப்ப அலை - முன்னெச்சரிக்கை வெப்ப அத...

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது? -எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர்களில் உள்ள பிளேடுகள் மாற்றக்கூடியவை அல்ல. இவை சருமத்தின் அடியில் ஊடுருவிச் செல்பவையும் (Non-invasive) அல்ல. முடியின் நீளத்தை மட்டுமே குறைக்கக்கூடியவை. ஷேவிங் செய்யப் பயன்படும் பிளேடுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாற்றப்படுபவை. ஆனால், டிரிம்மர்கள் அப்படிப்பட்டவை அல்ல. சலூன்களில் உங்களுக்குப் பயன்படுத்தும் டிரிம்மர்களை முறையாகச் சுத்தம் செய்கிறார்களா (Sanitization) என்று கவனியுங்கள். டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யுங்கள்.  ஒருவேளை கழற்றி மாட்டக்கூடிய  மாடல் என்றால், கத்தரிக்கோல்களைச் சுத்தப்படுத்துவத...

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து. அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா... ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ? சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம். சித்த மருத்துவர் சங்கீதா ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா? காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம...

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத். மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது.  மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரு...

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடும். கொடுக்காதே...' என்கிறார் என் அம்மா. என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தைகள் உள்ள பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குப் பிற காய்கறிகளின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துகள் உடலில் சேராது.  உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத...

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.  சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருக்கிறது. ரத்த அழுத்தம் மிகவும் குறையும் நேரங்களில் மட்டும் மோர் அல்லது எலுமிச்சைப்பழச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம். அதனால் ரத்த அழுத்தம் சீராகும். ஆனால், அதையே எப்போதும் செய்வது சரியானதல்ல. தினசரித் தேவையைவிட எப்போதும் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல.  சாதாரணமாக ஒரு நாளைக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராம் என்றால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 7.5 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  தூள் உப்பிற்கு (Table Salt) பதிலாக ...

Doctor Vikatan: அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ  அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவையா?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் உடலில் அடிபடும் போது, அந்தப் பகுதியில் உள்ள சருமம், அதற்குக் கீழுள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு போன்ற உடற்கூறியல் அமைப்புகள் (Anatomical structures) பாதிக்கப்படுகின்றன. அடிபட்டவுடன் இந்த அமைப்புகள் சிதைவடையக்கூடும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கும். சருமத்துக்கு அடியில் கசியும் ரத்தம், மற்ற இடங்களுக்குப் பரவ முடியாமல் ஓரிடத்தில் தேங்கும்போது வீக்கம் உண்டாகிறது. ரத்தம் மட்டுமன்றி, செல்களுக்கு இடையே உள்ள நீர் (Intercellular fluid), சிதைந்த செல் சுவர்கள் வழியாக வெளியேறி செல்களுக்குள் (Intracellular fluid) சேர்வதாலும் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் என்பது அடிபட்ட காயம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்ட...

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக் உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம். ...