Skip to main content

Posts

Showing posts with the label Health News

``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்திருக்கிறார். நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. Ambulance: ``சட்டைக்கூட இல்லாமல்.." சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! - யார் இவர்? இது குறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், "மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அனைத்தையும் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்...

Doctor Vikatan: பிரேக்அப் ஆன காதல்; நிச்சயமான திருமணம்... வெஜைனாவுக்கான சர்ஜரி அவசியமா?

Doctor Vikatan:  என் தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.  அவளுக்கு இதற்கு முன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்து, வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கடந்தகால  தாம்பத்திய அனுபவம் கணவருக்குத் தெரியாமலிருக்க, வெஜைனாவில் செய்யப்படுகிற அறுவைசிகிச்சை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறாள். அந்தச் சிகிச்சை அவசியமா...? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஹைமன் என்பது பெண்ணின் பிறப்புறுப்பின், அதாவது வெஜைனாவின்  நுழைவாயிலில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற தோல் திசு. இது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெஜைனாவின் திறப்பை  மூடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சவ்வு வித்தியாசமான வடிவம் மற்றும் தடிமனில் இருக்கும். ஹைமன் கிழிந்தாலோ அல்லது விரிவடைந்தாலோ வலி அல்லது லேசான ரத்தப்ப...

Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் வேலைக்குச் செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலே எனக்கு தலைவலிக்கிறது. இதற்கு என்ன காரணம்... தவிர்ப்பது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெயிலில் அலைந்துவிட்டு இருப்பிடம் திரும்பும்போது சில விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் வெளிச்சூழலின்  வெப்பநிலை அதிகரிக்கும், இன்னொரு பக்கம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்நிலையில்  உடலின் ரத்தக்குழாய்களின் தன்மையில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே அடிக்கடி தலைவலி  வரும் தன்மை  கொண்டவர்களுக்கு இந்தச் சூழலில் தலைவலியின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். Summer: வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? காரணம் சொல்லும் நிபுணர்! வெயிலில் போய்விட்டு வரும்போது தலைவலி ஏற்பட பரவலான இன்னொரு காரணம், டீஹைட்ரேஷன் எனப்படும் ந...

Summer: வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? காரணம் சொல்லும் நிபுணர்!

வெ யிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள். நம்மில் பெரும்பாலானோர் சுத்தமாக இருப்பதையே விரும்புகிறோம். வியர்வை, துர்நாற்றம் போன்றவை சுற்றி இருப்பவர்களுக்குச் செய்தி அனுப்பாமல் இருக்க, வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். சங்கிலி போல உருவாகும் இந்தச் சங்கதிகள்தான் வெயில் நமக்குத் தரும் எரிச்சலூட்டும் தண்டனைகள். வெயில் “வெயிலினால் உடல்ரீதியாக ஏற்படும் டீஹைட்ரேஷன் (உடல் வறட்சி) போன்ற பிரச்னைகளைத் தாண்டி மனரீதியாகவும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும்’’ என்கிற தகவலுடன் ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. வெயிலுக்கும் மனநிலைக்குமான தொடர்பு பற்றி அவர் பகிரும் தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு! ‘‘மேலை நாடுகளில், பருவ காலங்களுக்கும் மனித மனநிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் உண்டு. முக்கியமாக, உஷ்ணமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது ஒருவித எரிச்சலுடனே நாம் எல்லாக் காரியங்களையும் அணுகுவோம்....

Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!

வே லை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது. சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்காக, வீட்டிலேயே செய்ய முடிந்த வீக் எண்ட் அழகு பராமரிப்பு டிப்ஸ் தருகிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த். இந்த வார இறுதியில் இதை ட்ரை செய்து பாருங்களேன். எண்ணெய்க் குளியல் தலைக்குப் பாதாம் ஆயில் பாத்! சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு மட்டும் ஒரே நாள் லீவு கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி ஊற விடுங்கள். பப்பாளி ஃபேஷியல்! தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் கால் மணி நேரம் தடவி ஊற விடுங்கள். ஃபேஷியல் & பேக் பாசிப்பருப்பு பேக்! உங்கள் சருமம் வறண்டது என்றால், பப்பாளியுடன், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பால் ஏடு கலந்து பேக்காக போட்டுகொண்டு 15 நிமிடம் ஊற விடுங்கள். பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ...

Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. சில நேரங்களில் நிற்கும்போது ஒருவித மயக்கம் வருகிறது. பிறகு உட்கார்ந்தாலோ, நடந்தாலோ தானாக சரியாகிவிடுகிறது. இது என்ன பிரச்னை, இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      ஸ்பூர்த்தி அருண் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம்.  அவற்றில் மிக முக்கியமான காரணம், வெயிலின் தாக்கம். சென்னை மாதிரியான பகுதிகளில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பலருக்கும் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி ஏற்படும்.  உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருகிறது என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். நீங்கள் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா, பலவீனமாக உணர்கிறீர்களா, பேலன்ஸ் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.  உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும் நிலையில் உங்களுக்குத் தலைச்சுற்...

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை... இரண்டுக்கும் தொடர்பு உண்டா?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்    கேச பராமரிப்பு மருத்துவர் தலத் சலீம் 'ஏன் முடி உதிருது...' என்ற கேள்விக்கு 'கவலை... அதான்' என்றாராம் ஒருவர். 'அப்படி என்ன கவலை...' என்று கேட்டதற்கு, 'முடி உதிருதேன்னுதான்...' என்றாராம் பதிலுக்கு. முடி உதிர்வு பற்றிய பிரபலமான ஜோக் இது. நகைச்சுவையாகத் தெரிந்தாலும் இது உண்மையும்கூட. முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதலிடம் மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு.  மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னையை 'அலோபேஷியா அரியேட்டா', 'டெலோஜன் எஃப்ளுவியம்' மற்றும் 'ட்ரைக்கோ டில்லோமேனியா' என  மூன்றாக வகைப்படுத்தலாம். முதல் வகையான 'அலோபேஷியா அர...

`கண் வறட்சி முதல் வன்முறை வரை.. மொபைல் போனின் நெகட்டிவ் பக்கங்கள்!' - பெற்றோர்களே கவனம்!

டெ க்னாலஜி வளர்ந்துகொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கையிலும் முழு நேரமும் மொபைல் போன் இருக்கிறது. பெற்றோர்களுடனும், சக குழந்தைகளுடனும் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு முழு நேரமும் டிவி, மொபைல் போன் என்றே அவர்களின் நாள்கள் நகர்கிறது. சாப்பிடும்போதும், தூங்கும் நேரங்களிலும்கூட அவர்கள் இந்த மொபைல் போனை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதனால் கண் பிரச்னை, தூக்கப் பிரச்னை என பல பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். மொபைல் கண் பிரச்னைகள் குழந்தைகள் மொபைலை அதிகமாகப் பயன்படுத்துவதால் கண் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. 20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து 20 cm தொலைவில் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது கண் பார்வைத் திறன் குறையும் வாய்ப்பு இருக்கும். இதனால் கண்ணாடி போடும் தேவை வரும். கண் சோர்வும் ஏற்படும். குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணை அதிகம் சிமிட்டிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கலாம். இதற்குக் காரணம், தொடர்ந்து ஒரே பொருளை அதிக நேரம் பார்க்கும்போது ...

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள் கால்சியம் தேவைக்கு பாலையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ் பாலில் புரதம், கால்சியம் உண்டு என்றாலும் அதை எல்லோருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது.  பால் மற்றும் பால் பொருள்கள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான். சமீப காலமாக நிறைய பேருக்கு பால் அலர்ஜி ஏற்படுவதைப் பார்க்கிறோம். 'லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' (Lactose intolerance) எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும். தனக்கு அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு பிரச்னைகள்தான் தொடரும். அதேபோல எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே நாங்கள் அறிவுறுத்துவோம். ...

தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!

''கா லேஜ் படிக்கிற பசங்க மீசை, தாடி வளரவும் நெற்றியில் வரும் வழுக்கையைச் சரி செய்யவும் டெர்மா ரோலர் பயன்படுத்துறாங்க. அதுவும், மருத்துவரைச் சென்று பார்க்காமல் வீட்டிலேயே இந்த டெர்மா ரோலரைப் பயன்படுத்திட்டு வராங்க'' என்கிற தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகரிடம், இதை யார், எப்படி பயன்படுத்துவது என்பன குறித்து கேட்டோம். டெர்மா ரோலர் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்! முடி உதிர்தலுக்கோ அல்லது தாடி, மீசை வளரவோ டெர்மா ரோலரைப் பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எந்த அளவுக்கு முடி உதிர்தல் இருக்கிறது; எந்தக் காரணத்தால் முடி உதிர்கிறது; எதனால் தாடி, மீசை வளராமல் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, உங்களுக்கு இருக்கும் பிரச்னைக்கு டெர்மா ரோலர் பலன் தருமா என்பதை ஒரு தோல் மருத்துவரிடம் சென்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ரீல்ஸ்களில் பார்த்துவிட்டு ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கிடையாது. மருத்துவரைச் சென்று பார்க்கும்போதுதான் அவர்கள் டெர்மா ரோலரை எப்படி, எந்த அதிர்வெண்ணில் பயன்படுத்த வேண்டும் என்பத...

Health: சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா?

ச ரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளே நுழையக் கூட முடியாத நிலை, வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரைத் தள்ளிப்போடுகின்றனர். எல்லா வேலையும் முடிந்தபிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் அது இருக்கிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்கிறார் சிறுநீரக நிபுணர் பாரி. சிறுநீரகம் சிறுநீர்ப்பை எப்படி வேலை பார்க்கிறது? அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ளது. இது ரப்பர் பந்துபோல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாகச் சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது. `யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாகச் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்... பொதுவாக ...

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாக வெளியேறும். இதனால் மாணவர்கள் மத்தியில் தர்மசங்கடமாக உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு பயந்து பல நாள்கள் சாப்பிடுவதையே தவிர்க்கிறேன். அடிக்கடி சோடா குடிக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தரக்கூடியதா அல்லது மூட நம்பிக்கையா என்றும் தெரியவில்லை. ஏப்பம் என்கிற பிரச்னைக்கு என்ன காரணம்.. அதை நிரந்தரமாக குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி மருத்துவர் பாசுமணி வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இரைப்பை பகுதியில் சிறிது காற்று இருப்பது தெரியும். அதேபோல சிறுகுடலிலும் சிறிது காற்று இருக்கும். பேசும்போதும், தண்ணீர் குடிக்கும்போது நாம் காற்றை விழுங்குவோம். சாப்பிடும்போது பேசுவது, இடையிடையே தண்ணீர் குடிப்பது, டி.வியோ செல்போனோ பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, வேகவேகமாக விழுங்குவது போன்ற பழக்கம் உள்ளவர்கள், தேவைக்கு அ...

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 24 வயதாகிறது. பூப்பெய்தியது முதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். இந்நிலையில் திடீரென மூன்று மாதங்களாக அவளுக்கு பீரியட்ஸ் வரவில்லை. திருமண நேரத்தில் இப்படி ஆனது கவலையாக இருக்கிறது. அவளுக்கு மாத்திரைகள் கொடுத்து பீரியட்ஸை வரவழைக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் இயல்பாக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, திடீரென வராமல் போவதை 'செகண்டரி அமெனோரியா' (Secondary amenorrhea) என்கிறோம். ஒரு பெண்ணுக்கு திடீரென பீரியட்ஸ் வராமல்போகும்போது எழும் முதல் கேள்வி.... அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது. 17-18 வயது தொடங்கி, 46-47 வயது வரையிலான பெண்களுக்கு இந்தக் கேள்வி எழுவது சகஜம்.  உங்கள் மகள் விஷயத்தில் இந்தக் கேள்வி தேவையற்றது என்று எடுத்துக்கொள்வோம். 25 முதல் 45 வயதுப் பெண்களுக்கு திடீரென ஏற்படும் எடை அதிகரிப்பு, முகத்தில், கை,...

பூனைக்கடி ரேபிஸ் நோயாக மாறிய கொடுமை; வேதனையில் இளைஞர் விபரீத முடிவு.. மருத்துவமனையில் சோகம்

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் - விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. பூனை உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பாலமுருகனுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். கடந்த வாரம், அடிக்கடி தலைவலிப்பதாக பாலமுருகன் கூறியுள்ளார். குடிக்கும் தண்ணீரை பார்த்தும், காற்று வீசும்போதும் பயந்து நடுங்கியுள்ளார். இதனையடுத்து அவரை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரேபி்ஸ் அறிகுறி இருப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொ...

8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்!

உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் மருத்துவர் ஜெயராமன். தூக்கம் தூக்கமென்றாலே 8 மணி நேரம்தானா..? ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம். பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் குறையும். வயதாக ஆக இது 4 மணி நேரமாகக்கூடக் குறையும். நபருக்கு நபர் மாறுபடுகிற தூக்க நேரமும் இருக்கிறது. சிலர் 6 மணி நேரம் தூங்கினாலும் மறுநாள் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் இன்னும் ஒரு மணி நேரம் தூங்கினால் ஃபிரெஷ்ஷாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அதனால், 8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம். இதனுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டியோ அல்லது ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ தூங்குவது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. இருட்டான ...

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடிப்பது சூட்டைக் கிளப்புமா?

Doctor Vikatan: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் முன்கூட்டியே நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் எடுத்துக்கொள்வது எல்லாம் உதவுமா அல்லது கோடையில் இவற்றை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்குமா... பொதுவாகவே வெயில் காலத்தில் இதுபோன்ற கஷாயங்கள் எடுக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி    அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி கபசுர குடிநீரையோ, நிலவேம்பு குடிநீரையோ நோய்த்தடுப்பு மருந்தாக முன்கூட்டியே எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அவற்றை எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். கபசுர குடிநீரோ, நிலவேம்பு குடிநீரோ... ஹெல்த் டிரிங்க்ஸ் இல்லை. அதாவது கோடைக்காலத்தில் இதுபோன்ற தடுப்பு மருந்துகளை பானகம் மாதிரி குடிக்கக்கூடாது. மற்றபடி, கொரோனா என்றில்லை, வேறு எந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், காய்ச்சல் வந்தாலும் இவற்றை முன்கூட்டியே எடுத்துக்கொள்வது நிச்சயம் பலன் அளிக்கும், நோய் வராமல் தடுக்கும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்க...

Health: அம்மை நோய்; அதிக பாதிப்பு யாருக்கு? அறிகுறி, உணவு, சிகிச்சைகள் என்ன? கம்ப்ளீட் தகவல்கள்!

கோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் பி.செந்தூர் நம்பி. அம்மை ''அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமும் நம் சமூகத்தில் சிலரிடம் இருக்கிறது. அம்மை வந்தால் குளிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இது தெய்வ குத்தத்தால் ஏற்படுவது இல்லை... வைரஸ் கிருமியின் வரவால் ஏற்படுகிறது. Health: வெள்ளரி, கொய்யாவில் உப்பு, மிளகாய்த்தூள் தூவி சாப்பிடலாமா? ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பெரியம்மை நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பெரியம்மைக்குத் தடுப்பூசி வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த வைரஸ் கிருமியை மிகவும் பாதுகாப்பாக ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர். தற்போது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது சிக்கன்பாக்ஸ் (Chickenpox) எனப்படும் சின்னம்மை. இது ஒரு தொற்றுநோய். யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொ...