Skip to main content

Posts

Showing posts with the label Health News

Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?

Doctor Vikatan: சமீபகாலமாக நிறைய வீடியோக்களில், ரீல்ஸில் மஞ்சள் கிழங்கை வைத்துச் செய்கிற உணவுகளைப் பார்க்கிறோம். ஃப்ரெஷ்ஷான மஞ்சளை வைத்து ஊறுகாய் முதல் ஜூஸ் வரை ஏதேதோ தயாரிக்கிறார்கள். மஞ்சளை தூளாக உபயோகிக்கிறபோது மிகச் சிறிய அளவுதான் உபயோகிக்கிறோம். அப்படியிருக்கையில் மஞ்சள் கிழங்கை இவ்வளவு அதிகமாக உபயோகிக்கலாமா.... எந்த மஞ்சளை, எப்படி உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் காலங்காலமாக சமையலில் மஞ்சளை எப்படிப் பயன்படுத்துவோமோ, அப்படிப் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கும்போது எப்படிச் சேர்ப்போமோ, அதுவே போதுமானதுதான். பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். 'தங்கப்பால்'  (கோல்டன் மில்க்) எனப்படும் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாகிவிட்டது. இப்படியும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். மஞ்சளில் ஊறுகாய் தயாரிப்பது பல மாநிலங்களிலும் வழக்கத்தில் இருக்கிறது. சமீபகாலமாக அது மிகவும் டிரெண்டாகி வருகிறது. ஊறுகாய் என்கிற ...

Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனையும்..!

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் என பல்வேறு வகையான ஸ்கின் கேர் முறைகளை பின்பற்றி வருகிறோம். இந்த நிலையில், நாங்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களையும் விட்டுவைப்பதில்லை என்பதற்கு ஏற்ப சீனாவில் ஒரு புதிய ஸ்கின் கேர் முறை முறை ட்ரெண்டாகி வருகிறது. அது தாமரை இலை மாஸ்க். தாமரை இலைகளை முகத்தின் மேல் போட்டுக் கொள்வதால் முகம் பொலிவுடன் இருப்பதாக கூறுகின்றனர். Lotus face mask தாமரை இலைகளை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தலாமா; தாமரை இலை முகப்பொலிவை பாதுகாக்கும் இயல்பு கொண்டவையா என, சென்னையைச் சேர்ந்த ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் தலத் சலீம் அவர்களிடம் கேட்டோம். தாமரை இலையின் மருத்துவ குணங்கள்... ''தாமரை இலைகளை உபயோகிப்பதற்கு முன்னால் அதனுடைய மருத்துவக்குணங்களைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதில் பாலிஃபீனால், ஃபிளேவனாய்டு நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் அதிகம் இருப்பதால், முகத்தில் இறந்த செல்...

Doctor Vikatan: தலைவலிக்கு எடுக்கும் மாத்திரையே தலைவலியைத் தூண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக ஒற்றைத் தலைவலி இருக்கிறது. எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ, அப்போதெல்லாம் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டால்தான் வலி குறையும். இப்போது சில நாள்களாக மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு வலி இன்னும் அதிகமாவது போல உணர்கிறேன். இதை எப்படிப் புரிந்துகொள்வது... மாத்திரை இல்லாமல் வலியை எப்படிச் சமாளிப்பது? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஞானசண்முகம் தலைவலியைத் தாங்க முடியாத நிலையில்தான் பெயின் கில்லர் எனப்படுகிற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த வலி நிவாரணிகள் அளவுக்கு அதிகமாகும்போது அவையே தலைவலியை ஏற்படுத்தலாம். இத்தகைய வலியை 'மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக்' (Medication overuse headache) என்கிறோம். பெயின் கில்லர் மருந்துகள் என நாம் பொதுவாகக் குறிப்பிடுபவை, பாராசிட்டமால் மற்றும் என்எஸ்ஏஐடி (NSAIDs) மருந்துகள்தான். இவற்றை அடிக்கடியும் அதிக அளவிலும் பயன்படுத்தும்போது அவையே வலியைத் தூண்டும் காரணிகளாக மாறலாம். அதாவது இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக வலி குறைவதுபோல உணர்வார்க...

Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?

தே சிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக்கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக்கின்றன. சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். lotus seeds ஊட்டச்சத்தின் அளவு 100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும்...

Doctor Vikatan: முளைகட்டிய பயறு, வேகவைத்தது... எது பெஸ்ட்? எப்படி சாப்பிடணும்?

Doctor Vikatan: முளைகட்டிய பயறு.... வேகவைத்த பயறு... இரண்டில் எதில் சத்துகள் அதிகம்.... முளைகட்டிய பயறு சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வருமா... எந்தெந்தப் பயறுகளை முளைகட்டிச் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் வேகவைத்த பயறு வகைகளைவிட, ஊறவைத்து, முளைகட்டிய பயறு வகைகளே சிறந்தவை. முளைகட்டும்போது அவற்றில் ஈஸ்ட்ரோஜென் என்கிற என்ஸைம் அதிகரிக்கிறது. பயறுக்கே உரித்தான வாயுவை உண்டாக்கும் தன்மையும் முளைகட்டுவதால் நீங்கிவிடும்.  பயறு வகைகளை முளைகட்டச் செய்வதால் அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் ஏ,  சி மற்றும் ஈ சத்துகள் சற்று அதிகமாகக் கிடைக்கும். முளைகட்டிய பயறில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் செரிமானமாகிவிடும். பயறை சாதாரணமாகச் சாப்பிடும்போது செரிமான பிரச்னையை எதிர்கொள்வோருக்குக்கூட, அவற்றை முளைகட்டச் செய்து சாப்பிடும்போது செரிமான பிரச்னை வருவதில்லை. எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு முளைகட்டிய பயறு வகைகள் சிறந்த சாய்ஸ். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிற...

இளமையான சருமம் முதல் மூட்டுகளுக்கு பலம் வரை.. எல்லாம் தரும் எலும்பு சூப்!

எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பின் மருத்துவப்பலன்கள் குறித்து சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். சூப் எலும்பு சூப் வெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்... எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது. மூட்டுகளைப் பாதுகாக்கும் உடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்ப...

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட்  வைக்கப்பட்டுள்ளது.  2023-ல் பக்கவாதம் வந்து வலது கையும் காலும் பாதித்தது. இப்போது சர்க்கரை கன்ட்ரோலில் உள்ளது. முன்புபோல் சரியாக நடக்க முடியவில்லை.  வலது கையால் ஒன்றும் செய்ய முடியாது. தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். எட்டு மாதங்கள் பிசியோதிராபி செய்து வந்தேன். ஆனால், இன்னமும் வலது கை விரல்களால் எதையும் பிடிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? -raja (aburaeesa@gmail.com), விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன் பொதுவாகவே, வலது பக்கம் ஸ்ட்ரோக் பாதிக்கும்போது, பேச்சும், கையின் இயக்கமும் பாதிக்கப்படும். உங்களுக்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் தீவிரம் எப்படிப்பட்டது, எவ்வளவு நேரம் கழித்து உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது, எத்தனை நாள்கள் கழித்து நீங்கள் குணமாகத் தொடங்கினீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தும் உங்கள் உடல்நிலையில...

Doctor Vikatan: மெனோபாஸில் எலும்புகள் பலவீனம்.. கால்சியம் மாத்திரையால் கிட்னி ஸ்டோன் வருமா?

Doctor Vikatan: என் வயது 49. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. கை, கால்களில் வலியையும், பலவீனத்தையும் உணர்கிறேன். மருத்துவர் கால்சியம் மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஆனால், கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், கிட்னியில் கல் வரும் என்கிறாள் என் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு  500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும். மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும்  ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக...

Health: முதிர்ந்த கீரையைவிட 40 மடங்கு அதிக சத்துகள் கொண்ட மைக்ரோ கீரைகள்!

ஊ ட்டச்சத்து மூலம் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில், குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் சமீபமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட், பர்கர், பீட்சா எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ கீரைகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பேசுகிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். மைக்ரோ கீரைகள் மைக்ரோ கீரை என்றால் என்ன? காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும் ஒன்றல்ல. முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாத...

Doctor Vikatan: டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்; யாரெல்லாம் சாப்பிடலாம்.. நன்மைகள் என்ன?

Doctor Vikatan: முன்பெல்லாம் பெரிய கடைகளில், பணக்காரர்கள் வாங்கும் பழங்களில் ஒன்றாக இருந்தது டிராகன் ஃப்ரூட். இன்று அது சாலையோரக் கடைகளில், தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்... யாரெல்லாம் சாப்பிடலாம்... அதை எப்படிச் சாப்பிட வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரான ப்ரீத்தா சங்கீத். பொதுவாக, நம் உடலில் 'ஃப்ரீ ரேடிக்கல்ஸ்'  (Free Radicals) எனப்படும்  தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளும், அவற்றை நடுநிலையாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் மூலக்கூறுகளும் இயற்கையாகவே இருக்கும். இந்த இரண்டும் சரியான சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது.  உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸின் அளவு அதிகமாகி, அவற்றை நடுநிலையாக்கத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் அளவு குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலையே  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்.  டிராகன் ஃப்ரூட்  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். தவிர, இதற்கு ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை  குறைத்து, நமது உடலை நோய்கள் மற்று...

Flower Tea: பூக்களில் தேநீர்; எதில் என்ன மருத்துவப்பலன்? - சொல்கிறார் சித்த மருத்துவர்!

பூக்களில் தேநீர் போடுவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பூக்கள் டீ பேக் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. என்னென்ன பூக்களை பயன்படுத்தலாம்; எப்படி பயன்படுத்த வேண்டும்; அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பனப் பற்றி திருவள்ளூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். சுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம். ''சித்த மருத்துவத்தில் பலவிதமான பூக்களை பயன்படுத்தி கஷாயமாகத் தயாரித்து பருகி வந்துள்ளனர். அதை இன்று ஃபிளவர் டீயாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பூவுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை. செம்பருத்தி Flower Tea துவர்ப்பு சுவையுடைய செம்பருத்தி வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை உடையது.  உடல் சூட்டை தணிக்கும். செம்பருத்திப் பூவை பயன்படுத்தி தொடர்ந்து தேநீர் வைத்து குடித்துவர பித்ததினால் ஏற்படும் உடல் உபாதைகள் குறையும். உஷ்ணத்தினால் ஏற்படும் முகப்பருக்கள், வியர்க்குரு போன்றவற்றையும் குறைக்கும் தன்மையுடையது செம்பருத்தி தேநீர்.  செம்பருத்திப் பூவில் உள்ள கிளைக்கோஸைடுகள் இதய ஆரோக...

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான் அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் என்பது தவறான கருத்து. அரிசி உணவுகளிலும் கோதுமை உணவுகளிலும் சம அளவு சர்க்கரைச்சத்து தான் இருக்கும்.  எனவே, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் அதே வாய்ப்பு, கோதுமை உணவுகளைச் சாப்பிடுவதிலும் இருக்கிறது. நீரிழிவு பாதித்தவர்கள் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அடுத்தது உணவின் அளவும் முக்கியம். உதாரணத்துக்கு, சப்பாத்தி என எடுத்துக்கொண்டாலும், அவரவர் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். சப்பாத்தி நல்லது என்ற எண்ணத்தில் ஆறு, ஏழு என்று சாப்பிட்டால், அது நிச்சயம் ரத்தச் சர்க்கரை அளவை ...

Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?

''ஆ ண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான். Andropause பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம்'' என்கிற நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், `ஆண்ட்ரோபாஸ்’ அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கினார். அறிகுறிகள் * உடல் சோர்வு * எலும்புகள் தொடர்ப...

Doctor Vikatan: தயிரையும் மீனையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுவது ஏன்?

Doctor Vikatan: என் மகனுக்கு எல்லா உணவுகளோடும் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது வழக்கம். சைவ உணவுகளுக்கு ஓகே... ஆனால், மீன் போன்ற அசைவ உணவுகளை தயிருடன் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... அதேபோல இரவில் தயிர் சாப்பிடுவது சரியானதா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் தயிர் என்பது பொதுவாக சற்று மந்தத்தை உருவாக்கக்கூடிய உணவு. அதாவது செரிமானத்தை மந்தமாக்கும் உணவு. தயிர் சாப்பிடும்போது, கூடவே, மீன் அல்லது புரதச்சத்துள்ள உணவுகளை எடுக்கும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் போகவும வாய்ப்பு உண்டு.  தயிருடன் மீன் மட்டுமல்ல, கடல் உணவுகள் எதையுமே எடுத்துக்கொள்வது சரியல்ல. தயிருடன் மீன் சேர்த்துச் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. குறிப்பாக, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. தயிரில் உள்ள வேதிப்பொருள்களும், மீனில் உள்ள சத்துகளும் எதிர்வின...

Music Therapy: இசையே மருந்து; மியூசிக் தெரபி யாருக்கெல்லாம் நன்மை செய்யும்?

ப ல வடிவங்களில், பல மொழிகளில் நம்மை ஈர்க்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இசை. இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பல தீர்க்கும் ஒரு சிகிச்சை முறையாகவும் இசை விளங்குகிறது. `மியூசிக் தெரபி’ எனப்படும் அந்தச் சிகிச்சையில், இசையே மருந்து. கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் இந்தச் சிகிச்சை முறை பற்றி சொல்கிறார் மனநல மருத்துவர் சங்கீதா. Music Therapy மியூசிக் தெரபி இன்றைய மருத்துவ உலகில், நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகளுக்கு மாற்றாக மெல்லிய, நல்ல இசையை வழங்கி சிகிச்சை அளிக்கிறது மியூசிக் தெரபி. உளவியல் அடிப்படையில் ஒருவரை அவரது நோயின் ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இந்தச் சிகிச்சையின் சிறப்பு. மியூசிக் தெரபியை உளவியல் மற்றும் இசை குறித்த விஷயங்களில் வல்லுநராக இருக்கும் ஒருவராலேயே செய்ய முடியும். யாருக்கு தெரபி? உளவியல் மற்றும் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கு மியூசிக் தெரபி தரப்படுகிறது. ஓ.சி.டி (Obsessive compulsive disorder (OCD) எனப்படும் மன சுழற்சி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எண்ணங்களில் இருந்து விடுபடவும், அவர்களது எண்ண ஓட்டத்தைத் திசை திருப்பவும் `மியூசிக் தெரபி’ அளி...

Doctor Vikatan: டயாபட்டீஸ்-மாத்திரை, இன்சுலின் எடுக்கத் தொடங்கினால், ஆயுள் முழுக்க தொடரவேண்டுமா?

Doctor Vikatan:  டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா... மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம்.  ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.  அதுவே உணவுப்பழக்கத்தைச் சரியாகப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், அவர்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரை அளவுகளைக் குறைத்துவிடலாம். சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர்ந்தாக வேண்டும் எ...

Awareness: பிறந்த குழந்தையைப் பார்க்கப் போறீங்களா? இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

உ ங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குழந்தையைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொடர் இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டாம். குழந்தை பெ ர்ஃப்யூம், சென்ட், சிகரெட், மது ஆகியவற்றை குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது தவிர்க்கவேண்டும். கு ழந்தை பிறந்து 24 மணி நேரம் கழித்த பிறகு பார்க்கச் செல்வது நல்லது. இதனால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். 15 நிமிடத்துக்குள் குழந்தையைப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து விடுங்கள். நீண்ட நேரம் இருப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும். அ திக சத்தத்துடன் பேசுவது, அரட்டை அடிப்பது போன்றவற்றைக் குழந்தை முன் செய்யக்கூடாது. ஆ சையாகக் குழந்தையை அழுத்திக் கிள்ளுவது, முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். நெ ட் (வலைப்பின்னல்), கற்கள், மணிகள் வைத்த ஆடைகளைக் குழந்தைக்குப் பரிசாகத் தரவேண்டாம். பருத்தி ஆடைகளை வாங்கித் தரலாம். தாய்ப்பால் I சித்திரிப்பு படம் கு ழந்தைக்கு, தாயார் பால் கொடுக்கும் நேரமாக இருந்தால், சிறிது நேரம் வெளியே காத்திருந்த பின் குழ...

Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' - புதிய கண்டுபிடிப்பு!

இந்தியாவிலேயே முதல்முறையாக நாக்பூரில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பினை நீக்குவதற்காக புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேசர் சிகிச்சை என பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அதிக வலிமை கொண்ட வெளிச்சத்தினை கேத்திட்டர் மூலமாக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, அங்கு உள்ள அடைப்புகளை ரத்த குழாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு நீக்க முடியும். இதயம் பொதுவாக இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்டண்ட் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை மேற்கொள்வர். அவற்றிற்கு மாற்றுவழியாகவே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லேசர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது ஒருவகை அறுவை சிகிச்சையாகும். இதன் மூலம் சக்தி வாய்ந்த லேசரினை வைத்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை ஆவியாக மாற்றி அவற்றை நீக்கிவிடுவார்கள். இதுவரை 55 நோயாளிகளுக்கு இந்த முறை அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஸ்டண்ட் வைக்க வேண்டிய தேவை இருக்காது. மிகவும் பாதிக்கப்பட்ட நோயா...