Skip to main content

Doctor Vikatan: பிரபலங்கள் சொல்லும் 'பீட்ரூட் ஜூஸ்' சீக்ரெட்... கிட்னி ஸ்டோன் வருமா?!

Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் அவர்களது இளமைத் தோற்றத்துக்கான காரணம் என்றும் சொல்வதைப் பார்க்கிறோம். அதே சமயம், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

பீட்ரூட் என்பது சத்துகள் நிறைந்த காய்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை யார் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து மிக அதிகம் என்பதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படும். அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும். அதனால் இதயநலன் மேம்படும். மூளையின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. பீட்ரூட்டிற்கு அந்த அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது 'பீட்டலைன்' (Betalain) என்ற சத்து. இது வெறும் நிறமி மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான பாதுகாப்புக் கவசம். இதற்கு ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் உண்டு. 

நமது உடல் இயந்திரம் இயங்கும்போது, செல்கள் சில சேதங்களைச் சந்திக்கும் இதை 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' என்பார்கள். நம் செல்கள் சிதைவடையாமல் தடுக்கும் வேலையை இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செய்கின்றன.  உடலில் ஏற்படும் உள் காயங்கள் மற்றும் வீக்கங்களைக் குறைக்கும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்களையும் கொண்டது பீட்ரூட்.

சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என விரும்புவோருக்கு பீட்ரூட் ஜூஸ் நிச்சயம் உதவும்.

சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என விரும்புவோருக்கு பீட்ரூட் ஜூஸ் நிச்சயம் உதவும். விளையாட்டுத்துறையில் ஈடுபடுவோருக்கு உடல் திறனை அதிகரிக்கவும் பீட்ரூட் ஜூஸ் உதவுவதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாடுவதற்கு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு 2-3 மணி நேரம் முன்னதாக பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். காலையில் ஒரு டம்ளர் அளவுக்குக் குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது, சிறுநீரின் நிறம் லேசான சிவப்பாக மாறுவது இயல்புதான். எனவே, அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அதே சமயம், அளவுக்கதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது. தவிர, வயிற்று உப்புசம், வாய்வுத் தொந்தரவு போன்றவையும் வரலாம். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், பீட்ரூட் ஜூஸை தவிர்ப்பது அவசியம். 

எனவே, பிரபலங்களும் சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்ஸர்களும் சொல்வதைக் கேட்டு, எந்தச் சிகிச்சையையும் உணவுப்பழக்கத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், மருத்துவ ஆலோசனையோடு பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...