Skip to main content

Posts

Showing posts with the label Lifestyle

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார். திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்... இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை...

Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? 

Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, 'செபோரிக் டெர்மடைடிஸ்' (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது நம் உடல் உற்பத்தி செய்யும் ஒருவித எண்ணெய். இந்த எண்ணெய் நம் உடலில் அதிகமாகச் சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவுப் பழக்கவழக்கங்கள் (அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடியில் எண்ணெய் வைக்கும் பழக்கம் என இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.  நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதுதான் இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதன் விளைவாக முக...

Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்... சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா?

Doctor Vikatan: என் வயது 60. எனக்கு சர்க்கரைநோய் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்க்கரைநோயை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா...  சித்த மருந்துகளில் என்ன, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவீர்களா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சர்க்கரைநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் கண்டறியப்படலாம். 60 வயதில் கண்டறியப்பட்டாலும் சரி அல்லது 30- 40களில் கண்டறியப்பட்டாலும் சரி, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாயமாக ஏதேனும் ஒரு மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும். 60 வயது எனும் போது நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இப்போதுதான் முதல்முறையாக சர்க்கரைநோய்  கண்டறியப்பட்டதா அல்லது பல ஆண்டுகளாக இருந்து இப்போதுதான் அறிகுறிகள் தெரிகின்றனவா என்பதைக் கணித்து மருந்து கொடுப்பது நல்லது. சர்க்கரை நோய்க்கு சாதாரணமாகப் பார்க்கப்படும் உணவுக்கு ம...

Doctor Vikatan: பிரபலங்கள் சொல்லும் 'பீட்ரூட் ஜூஸ்' சீக்ரெட்... கிட்னி ஸ்டோன் வருமா?!

Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் அவர்களது இளமைத் தோற்றத்துக்கான காரணம் என்றும் சொல்வதைப் பார்க்கிறோம். அதே சமயம், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பீட்ரூட் என்பது சத்துகள் நிறைந்த காய்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை யார் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து மிக அதிகம் என்பதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படும். அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும். அதனால் இதயநலன் மேம்படும். மூளையின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. பீட்ரூட்டிற்கு அந்த அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது 'பீட்டலைன்' (Betalain) என்ற சத்து. இது வெறும் நிறமி மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்க...

Doctor Vikatan: ஆஸ்துமா, வீஸிங் அலர்ஜி உள்ளவர்கள் வீட்டுக்குள் ஏர் பியூரிஃபையர் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக ஆஸ்துமா, வீஸிங் அலர்ஜி இருக்கின்றன. மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துகிறேன். இந்நிலையில் வீட்டுக்குள் இண்டோர் செடிகள் வளர்ப்பதும், ஏர் பியூரிஃபையர் கருவி வைப்பதும் காற்றைச் சுத்திகரிக்கும்... அதனால் அலர்ஜி குறையும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி இண்டோர் செடிகள் வளர்ப்பதால் காற்று சுத்தமாகும், அதன் விளைவாக நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும் என்பதெல்லாம் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயம் அல்ல. அறையில் சூழ்ந்திருக்கும் காற்று என்பது அதிகமாக இருக்கும். அந்த அளவு காற்றை செடிகள் வைத்துச் சுத்திகரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. இண்டோர் செடிகள் வளர்ப்பது என்பது பார்வைக்கு அழகாக இருக்கும். புத்துணர்வு தரும். மனதுக்கு நல்ல உணர்வைத் தரும். மற்றபடி, அது அறையின் காற்றைச் சுத்திகரிக்கும் என்றெல்லாம் நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம், அந்தச் செடிகளை வைப்பதால் கெடுதலும் ஏற்படப் போவதில்லை. ஆ...

Doctor Vikatan: தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கான மாத்திரைகள்... தொடர்ந்து எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: தூக்க மாத்திரைகள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் திடீரென நிறுத்தக்கூடாது, டோஸேஜைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பிறகுதான் நிறுத்த வேண்டும் எனச் சிலரும், அந்த மாத்திரைகளை ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும் எனச் சிலரும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநலம் என்பது ஒரு காலத்தில் மந்திரம், சாபம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. மனநோய் என்பதும் உடல் நோய்களைப் போலவே மாத்திரைகளால் குணப்படுத்தக்கூடியதுதான் எனப் புரியவைக்க, 1950-களில்  மனநல மருத்துவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது.  தற்போது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற நிலையில் உலகம் தவிக்கிறது. மனநோய்களுக்கான மாத்திரைகள் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன உடல் நோய்களுக்கான மாத்திரைகளைப் போலவே மனநல மாத்திரைகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏனென்றால், மன நோய்களுக்கான மாத்திரைகள் நோயாளிகளை...

Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் வயது 45. நான் பல வருடங்களாகக் குப்புறப் படுத்துத் தூங்கியே பழகியவன். சமீபகாலமாக எனக்கு முதுகுவலி இருக்கிறது. படுக்கும் பொசிஷன் சரியில்லை என்றால் முதுகுவலி வரும் என்கிறான் என் நண்பன். குப்புறப்படுத்தால் முதுகுவலி வருமா.... மல்லாந்த நிலை, ஒருக்களித்த நிலை, குப்புறப் படுப்பது... எந்தப் பொசிஷனில் தூங்குவது சரியானது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் மக்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் மல்லாந்த நிலையிலேயே படுத்துத் தூங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இப்படித் தூங்கும்போது முதுகெலும்புக்கும் நல்ல ரெஸ்ட் கிடைக்கிறது. சுமார் 60 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும், சுமார் 16 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. ஒருக்களித்துத் தூங்கும்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் என்பதால் இது ஓர் ஆரோக்கியமான தூங்கும் முறையாகச் சொல்லப்படுகிறது. ஒருக்களித்துத் தூங்குபவர்கள்...

Doctor Vikatan: வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா?

Doctor Vikatan: வலியினால் ஒருவருக்கு  தற்காலிக மயக்கம்  ஏற்படுமா... சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டு வந்த என் உறவினர், வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவர் திடீரென மயக்கமாகிவிட்டார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, வலியால் ஏற்பட்ட தற்காலிக மயக்கம்தான் என்றார்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் மருத்துவ ரீதியாக இதை 'வாசோவாகல் சின்கோப்' (Vasovagal Syncope) அல்லது 'பெயின் இன்டியூஸ்டு சின்கோப்' (Pain-induced Syncope) என்று சொல்வோம். அதாவது, உடலில் ஏற்படும் அதீத வலியினால் உண்டாகும் தற்காலிக மயக்க நிலை இது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்பட...

Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?

Doctor Vikatan:  என்  கணவருக்கு கடந்த 4 வருடங்களாக  சர்க்கரைநோய் இருக்கிறது.  இந்நிலையில் நான்  கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார்களே... அது உண்மையா.... அதனால்  குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி   நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு. நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன.  விந்தணுக்களின் அடர்த்தி குறைவது, அவ...

Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?

Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக  நிலவேம்புக் குடிநீர்  எடுத்துக்கொள்கிறோம்.  இதனால்  வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது.   நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர்  நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன.  நோயைத் தடுத்துவிடும் என்ற  எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.  மிளகும் பூண்டும்  நிலவேம்...

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்... இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா.... ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய நோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாகச் சந்தோஷமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. கார்டிசால், அட்ரீனலின், நார்-அட்ரீனலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைகின்றன. சிம்பதெடிக் சிஸ்டம் (Sympathetic system) அமைதியாகி, பாராசிம்பதெடிக் சிஸ்டம் (Parasympathetic system) வலுவடைகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், இதயத் துடிப்பு சீராகும். Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா? மகிழ்ச்சியானவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் நல்ல முறையில் அமையும். உடற்பயிற்சி மற்றும் இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளால் ஏற்படும் மனமகிழ்ச்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அதிக சந்தோஷத்தைத் தாங்க முட...

Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா?

Doctor Vikatan: உப்பை அறவே தவிர்க்கும் உணவுப்பழக்கத்தை இன்று பலர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படி அறவே உப்பைத் தவிர்ப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே போல சர்க்கரையை அறவே தவிர்க்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதா.... சர்க்கரையைத் தவிர்த்த ஒரே வாரத்தில் சருமம் முதல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆரோக்கியமான நபர், சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் உணவில் உப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், அது உடலில் எலக்ட்ரோலைட் சமமின்மையை (Electrolyte imbalance) உண்டாக்கிவிடும். நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் மிக முக்கியமான காரணிகளாக உள்ளன. உடலில் சமநிலை குறையும்போது முதலில் தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படும்; கை, கால்கள் மரத்துப்போனது போன்ற உணர்வு உண்டாகும். சோடியம் அளவு குறையும்போது உடல் மிகவும் சோர்வடைந்து, சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போகும்...

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துதானே... கர்ப்பத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் தொடர்ச்சியான கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) என்பது ஒரு பெண்ணுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு அதாவது அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு, மருத்துவர் தேவைப்பட்டால்  ஹெப்பாரின் (Heparin) எனப்படும் பிளட் தின்னர்  ஊசிகளைப் பரிந்துரைக்கலாம். கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. த்ரோம்போஃபிலியா (Thrombophi...

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப்  பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும் அரிதாக சிலருக்கு இப்படி வரும் என்றும் சொன்னார்கள்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் ``மருத்துவ ரீதியாக இது உண்மையான பக்கவாதம் (True Stroke) அல்ல. உடலில் ஏற்படும் அதீத வலி அல்லது அதிர்ச்சியின் காரணமாக, மூளைக்குச் செல்லும் தற்காலிகச் சமிக்ஞைகளில் ஏற்படும் மாற்றத்தால் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தோன்றுவதையே இப்படிச் சொல்கிறார்கள்.   இந்த அறிகுறிகளை 'ஸ்ட்ரோக் மிமிக்கர்ஸ்' என்று சொல்வோம். கடுமையான வலி (Intense pain) சில நேரங்களில் குமட்டல், வாந்தி அல்லது மயக்க நிலையைக்கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் போன்ற அறிகுறிகள் (Stroke-like symptoms) கூடத் தோன்றலாம்.   வலி கொஞ்சம் குறைந்தவுடன் இந்த அறிகுறிகள் சரியாகிவிடு...

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் துர்கா தேவி. uncontrolled diabetes "கடந்த 8 ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர், நெஞ்சு வலி அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தார். மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இதயத்தின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால், ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை உள்ளிட்ட இந்தியாவில் பல பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. சர்க்கரைநோய் நம் நாட்டில் 7.7 முதல் 10.1 கோடி பேர் வரை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளம் வயதினருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்ச...

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர். ஹேர் டைக்கும், கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கும் தொடர்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் வயதாவதை நம்மால் தடுக்க முடியாது, வயது ஏற ஏற நம் தலைமுடியும் நரைப்பது இயல்புதான். இப்போதெல்லாம் சராசரிக்கும் முன்பே, இவ்வளவு ஏன், டீன் ஏஜிலேயே நரை முடி பிரச்னை பலருக்கும் ஆரம்பித்துவிடுகிறது. இள வயதிலேயே டை உபயோகிக்க ஆரம்பித்து விடுவதையும் பார்க்கிறோம். பொதுவாக, நீண்டகாலமாக ஹேர்டை (Hair dye) பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம். டை  பயன்படுத்துவதில் பொதுவாகக் காணப்படும்  பக்கவிளைவுகளில், கண்களில் ஏற்படும் அலர்ஜி முக்கியமானது. இந்த டையில் பிபிடி என்று சொல்லப்படும் P-Phenylenediamine (பி-ஃபினைலீன்டையமின்) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டையினால் ஏற்படும் அலர்ஜிக்கு முக்கிய காரணம். இ...

தங்கம் மட்டும் போதுமா? மாதம் ₹5,000 SIP மூலம் ₹1 கோடி சேர்க்கும் 'ஸ்மார்ட்' வழி! - தெரிஞ்சிக்கோங்க!

வீட்டு பட்ஜெட்ல நூறு ரூபாயை மிச்சம் பிடிக்க, நாலு கடை ஏறி இறங்குறீங்க. அப்பாவை, கணவரை, பிள்ளைகளைப் பார்த்துக்கறீங்க. ஆனா, ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க... "நாளைக்கு எனக்குன்னு ஒரு அவசரத் தேவை வந்தா, நான் யார் கையை எதிர்பார்க்கணும்?" இந்தக் கேள்வி மனசுல வந்தாலே ஒரு பயம் வருதுல்ல? ஆனா, இந்தப் பயம் இருந்தும், நம்மில் பல பெண்கள் ஏன் சொந்தக் காலில் நிற்கத் தயங்குறோம் தெரியுமா? மனசுக்குள்ள ஊறிப்போன சில தவறான சமாதானங்கள் தான் காரணம். "முதலீடு செய்ய எனக்குப் பெரிய படிப்பு வேணுமோ?", "இதெல்லாம் என் கணவர்/அப்பா பார்த்துப்பாங்க, நமக்கு எதுக்கு?", "நமக்குத் தங்கம் தான் பாதுகாப்பு, அது போதும்" என்று நம்மை நாமே முடக்கிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?  "பணம் சம்பாதிக்கத்தான் கணவர் தேவைப்படலாம்; பணத்தை வளர்க்க (Invest) ஒரு பெண்ணின் புத்திசாலித்தனமே போதும்!" தங்கம் vs பங்குச் சந்தை: ஒரு அதிர்ச்சியான உண்மை! (Gold vs Equity) நம்ம ஊர்ல பெண்களுக்குத் தெரிஞ்ச ஒரே முதலீடு தங்கம். "தங்கம் என்னைக்கும் கைவிடாது"னு நம்புறோம். ஆனா, கடந்த 20 ...

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்பிலிருந்து நிவாரணம் தருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி சால்ட் தெரபி  (Salt therapy)  என நீங்கள் கேட்டிருப்பது உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பது பற்றியதா அல்லது வேறு ஏதேனுமா என்பது தெளிவாக இல்லை. உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் சளி, இருமல் மட்டுப்படும், சரியாகி விடும் என்ற நம்பிக்கையும்  அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட  நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே  உப்பானது,  மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில்...

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்... வலி... தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது... அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 'The Lancet' இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained அந்த இதழில் வெளியாகி உள்ள தகவல்... "பாராசிட்டமாலை முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு செய்ததில் கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம், மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை" கடந்த ஆண்டு, ட்ரம்ப் இந்தக் கூற்றை கூறியதில் உலகம் முழுவதும்‌ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த...

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. மாதவிடாய் நின்று 4 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென ப்ளீடிங் ஆனது. மாதவிடாய் நின்றுபோன பிறகு இப்படி ப்ளீடிங் ஆனால், அது புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள் பலரும். அது உண்மையா... நான் புற்றுநோய்க்கான டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங் சாதாரணமானதல்ல. ஆனாலும் மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங், புற்றுநோயல்லாத காரணத்தாலேயே வருகிறது என்பது நல்ல செய்தி. 10 சதவிகிதப் பெண்களுக்கு புற்றுநோய் காரணமாகவும் இந்த ப்ளீடிங் ஆகலாம்.  மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு முற்றிலும் நின்றுபோவதால் வெஜைனா பகுதியிலுள்ள சருமம் சுருங்கிவிடும். அந்த இடத்தின் அதீத வறட்சி காரணமாக ப்ளீடிங் ஆவது சாதாரணமாக நடப்பதுதான்.  கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான செர்விக்ஸ் அல்லது கர்ப்பப்பையின் உள்பகுதியிலுள்ள எண்டோமெட்ரியம் ஆகிய பகுதிகளில் தொற்று ஏற்படுவதால...