Skip to main content

Posts

Showing posts with the label Lifestyle

மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது வீட்டிற்கு வெளியில் நின்ற தெருநாய் ஒன்றுக்கு சிறுமி பிஸ்கெட் கொடுத்தார். அந்நேரம் சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவளது தாத்தா டாக்டரிடம் அழைத்துச்சென்றார். ஆனால் ஊசி போட்டுக்கொள்ள பயந்து அச்சிறுமி ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதன்பிறகு நாய் கடித்த புண் ஆறிவிட்டது. அதன் பிறகு அவர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமியின் நிலை திடீரென மோசமடைந்தது. அவரது கண்கள் சிவப்பானது. உடனே சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நாய் அவரை அங்கிருந்து மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாக இருந்ததால் நாய்கடிக்கு சிறுமி இறக்க நேரிட்டது. மாநகராட்சி...

Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ரத்தச் சர்க்கரை அளவும் கூடிவிட்டது. அவல் சாப்பிட்டால் எடை குறையாது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்வது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் அவல் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். சாதாரண அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அல்லது அவல் ஓரளவிற்குச் சிறந்தது என்றாலும், இதிலும் குறிப்பிடத்தக்க அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத...

பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn "சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்! எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர். மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்! உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு...

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது. கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும். தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது. கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இ...

சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் 'எம்.வி.கான் 2026' (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க 'எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஃப்.டி.ஐ (CFTI) சென்னை பிரிவின் இயக்குனர் திரு. முரளி கே. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார். டாக்டர் ஏ.வி. அனூப் டாக்டர் ஏ.வி. அனூப்பின் நெகிழ்ச்சியான ஏற்புரை: விருதினைப் பெற்றுக்கொண்டு டாக்டர் ஏ.வி. அனூப் பேசியதாவது "கடந்த மாதம் டாக்டர் விஜய் விஸ்வநாதன் என்னை அழைத்து, இந்த நீரிழிவு மாநாட்டில் எனக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுவதாகக் கூறியபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்...

Doctor Vikatan: தூக்கமின்மையால் சருமம் அதிக வறட்சியாக மாறுமா?

Doctor Vikatan: எனக்கு மாதத்தில் அதிகபட்சமாக பத்து நாள்கள்தான் சருமம் நன்றாக இருக்கிறது. மற்ற நாள்களில் அதிக வறட்சி அல்லது பருக்கள் அல்லது பொலிவே இல்லாதது என எனக்கே என் சருமத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சருமம் இப்படி மாறிக்கொண்டே இருக்குமா... சரியாகத் தூங்காவிட்டால் சருமம் வறட்சியாக மாறும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சீதோஷ்ண நிலைக்க்கேற்ப நம் சருமம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது வெயில் காலத்தில் சருமம் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் இருப்பதை உணர்ந்திருப்போம். அது மட்டுமல்ல, முந்தைய நாள் இரவு என்ன சாப்பிட்டோம், எவ்வளவு தண்ணீர் குடித்தோம், எத்தனை மணி நேரம் தூங்கினோம் என்பதெல்லாம்கூட சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தாலும் அது உங்கள் சருமத்தை பயங்கரமாக பாதிக்கும். மணப்பெண்ணாக இருப்பார்... விடிந்தால் திருமணம் என்ற நிலையில், காலையில் அவரது கன்னத்திலோ, நெற்றியிலோ திடீரென ஒரு பரு கிளம்பியிருக்கும். காரணம், ஸ்ட்ரெஸ். இன்டர்வியூவுக்கு செல்லும் நாள் அல்லது தேர்வெழ...

Doctor Vikatan: வெயிட்லாஸ்... அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சமூக ஊடங்களில் உடல் எடையைக் குறைக்கும் வெயிட்லாஸ் மாத்திரைகள், மருந்துகள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் என்றும் சொல்கிறார்கள். அவற்றை மருத்துவ ஆலோசனையின்றி நாமாக வாங்கிப் பயன்படுத்தலாமா.... எவ்வளவு எடை குறையும்? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் இந்தியாவில் CDSCO (Central Drugs Standard Control Organisation) அமைப்பால் உடல் எடையைக் குறைக்க ஆர்லிஸ்டாட் (Orlistat),  செமாக்ளுடைடு (Semaglutide) மற்றும் டிர்ஸெபடைடு (Tirzepatide) என  இதுவரை மூன்று மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  இவற்றில் ஆர்லிஸ்டாட் என்பது இந்தியாவில் 2007-ம் ஆண்டிலிருந்தே மாத்திரை வடிவில் பயன்பாட்டில் உள்ளது. செமாக்ளுடைடு மற்றும் டிர்செபடைடு (Tirzepatide) ஆகிய இரண்டும் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இ...

Doctor Vikatan: AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளுமா?

Doctor Vikatan: ரத்த தானம் பற்றிய பொதுவான தகவல்கள் நிறைய கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு, O பிரிவு கொண்டவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கலாம் என்றும் AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் என்றும் சொல்கிறார்களே, அது உண்மையா...? ஒருவருக்குத் தவறுதலாக வேறு வகை ரத்தம் ஏற்றப்பட்டால் அது ஆபத்தில் முடியுமா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா. ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை. ரத்த வகைகளை ஏ ( A), பி ( B), ஓ ( O) மற்றும் ஆர்ஹெச் (Rh) போன்றவற்றை வைத்து வகைப்படுத்துகிறோம். இந்த ஒவ்வொன்றிலும் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் பிரிவாக இருக்கலாம். இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில் காணப்படும் மற்றொரு ரத்தப் பிரிவு பாம்பே பிளட் குரூப் ( Bombay blood group).  Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?! ரத்த செல்லானது ஏ ஆன்டிஜென்னை வெளிப்படுத்தின...

இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- மருத்துவரின் பகிர்வு!

ஹரியானா மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை பொது சுகாதாரத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் இதய நோய்கள் என்பது முதியவர்களுக்கான பாதிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், ஹரியானாவின் இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய சூழல் தலைகீழாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மருத்துவர் சொக்கலிங்கம் இது தொடர்பாக மூத்த இதயநல மருத்துவர் வி.சொக்கலிங்கத்திடம் விரிவான உரையாடலை நிகழ்த்தினோம். அதன் சுருக்கத் தொகுப்பைப் பார்க்கலாம்... ``ஹரியானா அரசின் தகவல்படி பார்த்தால், இளமையில் வரும் இதய நோய் என்பது கொரோனா தொற்றுக்குப் பிறகே அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பலரும் நினைப்பது போல, கோவிட் தொற்றுக்கோ அல்லது கோவிட் தடுப்பூசிக்கோ மாரடைப்புடன் நேரடித் தொடர்பு கிடையாது. கோவிட் என்பது ஒரு சுவாசப் பை சார்ந்த (Respiratory) வைரஸ். ...

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும். சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நா...

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன. சில நேரங்களில் பற்களும் படுவதுண்டு. காயம் ஆழமாக இருந்தால் டிடி ஊசி போட்டுக்கொள்கிறான். இல்லாவிட்டால் விட்டுவிடுகிறான். எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி போட வேண்டும்? அடிக்கடி போடுவதால் ஆபத்தில்லையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம். ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை, உடலில் IgG வகை ஆன்டிபாடிகள் எந்த அளவு உள்ளன என்பதைப் பொறுத்தே பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்ட பிறகு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன. நாய் மற்றும் பூனைக்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்க...

பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று.  அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.  மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன.  அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும்...

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை... உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை.  இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஒரே ஓர் உணவுப்பொருளை மட்டும் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரத்தை அதிகரித்துவிட முடியாது. குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு (Optimal Growth) நல்ல ஊட்டச்சத்து மிக அவசியமானது. உயரம் என்பது மரபியல் (Genetics) சார்ந்த விஷயமாக இருந்தாலும், அதனுடன் வேறு சில காரணிகளும் இணையும்போது ஒருவரின் முழுமையான வளர்ச்சி சாத்தியப்படுகிறது. அந்த வகையில் சரியான ஊட்டச்சத்து (Proper Nutrition), போதுமான தூக்கம், உடல் செயல்பாடுகள் / உடற்பயிற்சி போன்றவையும் உயரத்தைத் தீர்மானிப்பவை. குழந்தைகளின்  வளர்ச்சியில் புரதச்சத்து (Protein) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்பு, தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம். இது ...

Doctor Vikatan: சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. உடலின் சில பகுதிகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மச்சங்கள் வருகின்றன. இப்படி உடலில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள் ஆபத்தானவையா... இவற்றை அகற்ற வேண்டியது அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா உங்கள் உடலில் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ள சிவப்பு மச்சம், ஆங்கிலத்தில் 'ஹிமான்ஜியோமா' (Hemangioma)  என அழைக்கப்படும். அத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரெனத் தோன்றும் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் (Capillaries) கசிவு அல்லது ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் சிறிய மாற்றத்தினால்தான் (Anastomosis formation) இப்படி சிவப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இவை பொதுவாக உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்பதால், இவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் சிலருக்கு இவை தோற்றத்தில் ஒருவித தொந்தரவை ஏற்படுத்தலாம். அதாவது மச்சத்தின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது பார்ப்பதற்கு உங்களுக்கு அசௌகர்யமாக இரு...

‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்! ஏன் ஏற்படுகிறது?

திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டம், விளையாட்டுப் போட்டி, கல்ச்சுரல்ஸ், நீண்ட நாள் திட்டமிட்டு சென்ற சுற்றுலா போன்றவை முடிந்ததும் பலருக்கும் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். 'அட! அதுக்குள்ள முடிஞ்சு போச்சே' என்பது போல உணர்வு ஏற்படும். பரபரப்பாக இருந்த வாழ்க்கை திடீரென்று அமைதி, அமைதி....அமைதியோ அமைதியாகிவிட்டதைப் போல தோன்றும். இதனை Post-Event Blues என்கிறது உளவியல். கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம் "நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிந்த பிறகு ஏற்படும் சோகம்தான் இது. பொதுவாக, அந்த நிகழ்வு முடிந்ததும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது இது போன்ற உணர்வு ஏற்படும். அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது, அந்நிகழ்வுக்காக தயாராகும்போது இருந்த அதீத உற்சாகம், எனர்ஜி, ஒரு சந்தோஷமான ஸ்ட்ரெஸ், பரபரப்பு ஆகியவை சட்டென்று நீங்கிவிடுவதால் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால். "சோகமான மனநிலை, மனஅழுத்தம், எரிச்சலுணர்வு, களைப்பு, சோர்வு போன்றவைதான் இதன் அறிகுறிகள். ஒரு நல்ல வ...

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில்  பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார்.  இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும் சொல்கிறார்.  இன்று நிறைய பேர் இந்த intermittent fasting பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையிலேயே பலன் தருமா... அதில் எத்தனை மணி நேர இடைவெளி விட வேண்டும்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் விரதம் என்பது காலங்காலமாக நம் மரபில் இருக்கும் விஷயம்தான். ரிஷிகளும் முனிவர்களும் பின்பற்றியதுதான். பாரம்பர்யமாக இருக்கும் விரதத்திலேயே, விரதமிருப்பதற்கு முதல் நாள் இரவு, மிதமான உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு. இப்படி விரதம் குறித்து பாரம்பர்யமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன. நம் செல்கள...

நீலகிரி: விபத்தில் மூளைச் சாவடைந்த 22 வயது இளைஞர்; உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் – விஜயகுமாரி. இந்தத் தம்பதிக்கு மோனிஷா என்கிற மகளும், மோனிக்ராஜ் என்ற மகனும் இருந்தனர். 22 வயதான மோனிக்ராஜ் விவசாயம் செய்து வந்தார். நீலகிரி இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி விவசாயத்திற்காக நீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்மோட்டரில் சிக்கி விபத்து  ஏற்பட்டது. இதில் அவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் இருந்தபோதிலும் மோனிக் ராஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 13-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் மோனிக் ராஜின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவ...

Doctor Vikatan: கொஞ்சமே சாப்பிட்டாலும் குறையாத உடல் பருமன்... எடையைக் குறைக்க என்னதான் வழி?

Doctor Vikatan: என் வயது 43. எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. என்ன முயற்சிகள் செய்தாலும் எடையைக் குறைக்கவே முடியவில்லை. நான் அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள நபரும் இல்லை. மிகக் குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனாலும் உடல் பருமன் குறைவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்... எடையைக் குறைக்க என்னதான் செய்வது? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் உங்களைப் போல குறைவாகச் சாப்பிட்டாலும் சிலருக்கு எடை அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.. குறைவாகச் சாப்பிட்டாலும் அதை எரிக்கும் அளவுக்கு வொர்க் அவுட் செய்ய முடியாவிட்டால், அதையும் 'ஜங்க் ஃபுட்' கணக்கில்தான் கொள்ள வேண்டும். பேசல் மெட்டபாலிக் ரேட் ( BMR) என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. ஒருவருடைய கிட்னி, மூளை, இதயம் என ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்ய  குறிப்பிட்ட அளவு ஆற்றல் அவசியம். அதற்கான கலோரிகளைக் கணக்கிடுவதுதான் பி.எம்.ஆர். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,600 கலோரிகள் தேவைப்...

Doctor Vikatan: பலரும் பின்பற்றும் No-Sugar Diet... ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துமா, உடல் நடுங்குமா?

Doctor Vikatan: பலரும் காபி, டீ உள்பட எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை என்றும் 'நோ சுகர்' டயட்டுக்கு மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என கடந்த ஒரு வாரமாக எதிலுமே சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், எனக்கு ஒரு வாரமாக மன அழுத்தமும் எரிச்சலும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். தவிர, கை, கால்களில் ஒருவித நடுக்கத்தையும் உணர்கிறேன். சர்க்கரையை நிறுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் டயட்டீஷியன் அம்பிகா சேகர் ``No-Sugar Diet எனப்படும் இனிப்பை முற்றிலும் தவிர்க்கும் உணவுமுறையில் நாம் சர்க்கரையை மட்டுமே தவிர்க்கிறோம். மற்றபடி உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துகள் (கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை) மற்ற உணவுகளின் மூலம் உடலுக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல சர்க்கரையைத் தவிர்ப்பதால் கை, கால்களில் நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், உடலில் சர்க்கரை அளவு மிகக் குறைவாகும் போது, 'ஹைப்போகிளைசீமியா' (Hypoglycemia) என்ற நிலையில் அல்லது போது...