Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக மாறிவிடுவாள். இது சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறியா அல்லது அவளுக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் போகாது. திடீரென உற்சாகம் கொள்ளும். அடுத்து அது மட்டுப்படும். தொடர்ந்து அதற்கு நேரெதிராக ஏதோ ஒரு கவலை வரும். மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள். மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அத...