Skip to main content

Posts

Showing posts with the label Lifestyle

Doctor Vikatan: எப்போதும் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள்; விரட்டவும் விடுபடவும் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத் மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தேவையற்ற அல்லது எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றினால், அது 'ஓசிடி' எனப்படும் 'அப்சசிவ் கல்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ( Obsessive-Compulsive Disorder) போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது, நாம் எந்தவொரு விஷயத்தைப் பற்றி நினைக்கக்கூடாது அல்லது யோசிக்கக்கூடாது என்று கருதுகிறோமோ, அந்த விஷயம் நம் கட்டுப்பாட்டையும் மீறி மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள் வந்துகொண்டே இருப்பதைத்தான் நாம் விரும்பாத, நம்மை பயமுறுத்தும் எண்ணங்கள் (Intrusive Thoughts) என்கிறோம். உங்களுக்குத் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) இதன் அறிகுறியாகவும் இருக்கலாம். 'நாம் ஏன் உண்மையில் உயிரோடு இருக்கிறோம்?', 'நாம் ஏன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும்?', 'நாம் ஏன...

Doctor Vikatan: உடல்சோர்வு, உடல் வலி... வைட்டமின் டி மாத்திரை எடுத்தால் சரியாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த ஒரு வருடமாக கடுமையான உடல் வலியும், எப்போதும் உடல் சோர்வும் இருப்பதாக உணர்கிறேன். வைட்டமின் டி பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் என்றும், அந்த சப்ளிமென்ட் எடுத்தால் சரியாகி விடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா... இந்தப் பிரச்னைக்கு வேறு தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் சோர்வுக்கும் உடல் வலிக்கும் வைட்டமின் டி (Vitamin D) குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக எத்தனை பேருக்கு ரத்தப் பரிசோதனை (Blood test) செய்து பார்த்தாலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி 3 அளவு 10-லிருந்து 20-க்குள்ளாகத்தான் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது 25-க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. மாத்திரை சாப்பிடுபவர்களுக்கே 35-லிருந்து 40 வரைதான் இருக்கிறது. எனவே, வைட்டமின் டி குறைபாடும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. நாள்பட்ட உடல் வலி மற்றும் சோர்வுக்குப் பி...

Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற்பயிற்சி செய்யாதவர்கள் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பிரச்னைகள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் புரோட்டீன் (புரதச்சத்து) என்பது நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான மேக்ரோ நியூட்ரியன்ட்... அதாவது பேரூட்டச்சத்து. நம் உடலுக்கு மூன்று பேரூட்டச்சத்துகள் மிகவும் முக்கியம். அவை கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து. கார்போஹைட்ரேட் என்பதுதான் நம் உடலுக்கு முதன்மையான எரிபொருள் ஆதாரம் (Primary fuel source) ஆகும். புரதச்சத்து என்பது முக்கியமாக தசைகளை மீட்டெடுப்பதற்கும் (Muscle recovery) தசை வளர்ச்சிக்கும் மிகவும் தேவையானது. நல்ல கொழுப்புகள் (Good fats) என்பவையும்  நம் உடலுக்கு எரிபொருள் ஆதாரம்தான். பொதுவாக நம் இந்திய உணவு முறையை (Indian diet) எடுத்துக்கொண்டால், அதில் கார்போஹைட்ரேட்தான் ...

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே சமயம்,  தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள். ஒருமுறை தைராய்டு மருந்தின் அளவை மாற்றிய பிறகு,  6 முதல் 8 வாரங்களுக்குப் பின் மீண்டும் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஒரு நல்ல நிலைக்கு, அதாவது இயல்பான அளவிற்கு (Normal range) வரும் வரை மருந்தின் அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்...

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, தவறா?  பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பொதுவாக, தீவிரமான காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது என்றால், அந்த நாள்கள் முழுவதும் குளிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.   காய்ச்சல் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களுக்கே  குளிர்ந்த நீரில் குளிக்கும் போது  உடலில்  லேசான நடுக்கம் ஏற்படும். அதுவே காய்ச்சல் இருக்கும்போது குளித்தால், அந்த நடுக்கம் இன்னும் அதிகமாகும். இதனால் உடலின் உட்புற மைய வெப்பநிலை (Core temperature) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடுக்கம் காரணமாக காய்ச்சலின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். தவிர, காய்ச்சல் நேரத்தில் குளிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்தக்கூட...

கர்நாடகா : 4 வயது குழந்தையின் மரணத்துக்கு காரணம் மாரடைப்பா? - சோகத்தில் மக்கள்!

நான்கு வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் அருகிலுள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில் வசிப்பவர் பாஜக வட்டாரத் தலைவர் அபிநந்தன். இவரின் 4 வயது மகன் வைஷ்ணவ். வீட்டில் துறுதுறுவென்று இருக்கும் வைஷ்ணவ், கடந்த 16-ஆம் தேதி இரவு நெஞ்சு வலிக்கிறது என்று அழுதிருக்கிறான். செரிமான பிரச்சனையாக இருக்கும் என்று பெற்றோர்கள் வீட்டிலுள்ள மருந்துகளை வைத்து வைத்தியம் செய்துள்ளனர். அப்படியும் வலி தீராமல் வைஷ்ணவ் அழுது துடித்திருக்கிறான். அதனால் பதற்றமான பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளானர். வாகனத்தில் செல்லும்போதே உணர்விழந்துள்ளான். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டான், மாரடைப்பால் இந்த மரணம் நேர்ந்திருக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். வைஷ்ணவ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அவன் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், 4 வயதே ஆன ...

மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்?

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் ( 57) என்பவர் மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சிகளை விற்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்து. இதை எடுத்து மோயிசன் மட்டன் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முறையாகப் பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து அதன் மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி அழித்தோடு கடைக்கு சீல் வைத்தனர். ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாகவும் அந்த ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது.  இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது. கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம். தரமான பருத்தியால் ஆன தளர்வான  உடைகள் (Cotton Trousers)   அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும். தொட...

Doctor Vikatan: ரத்த அழுத்த அளவை வைத்து மாரடைப்பின் அறிகுறியைத் தெரிந்துகொள்ள முடியுமா?

Doctor Vikatan: ரத்த அழுத்தத்தின் அளவை வைத்து மாரடைப்பைத் தெரிந்துகொள்ள முடியுமா... இதயத்தின் எந்த இடத்தில் மாரடைப்பு வந்துள்ளது என்பதை அது காட்டிக் கொடுக்கும் என்கிறார்களே...  அதை எப்படிப் புரிந்துகொள்வது... லோடிங் டோஸ் ( Loading dose) எனப்படும் மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் மாரடைப்புக்கான அசாதாரண அறிகுறிகளை உணரும் பட்சத்தில், பிபி எனப்படும் ரத்த அழுத்த அளவைக் கணக்கிடும்  கருவி வீட்டில் இருந்தால், அதை வைத்து பிபி அளவைச் சரிபார்க்கலாம்.  இப்படி வீட்டிலேயே பிபி மானிட்டர் வைத்துச் சரிபார்க்கும்போது, ரத்த அழுத்தமானது 100-க்கும் கீழே காட்டினால், அது குறைவான ரத்த அழுத்தம் எனக் கணக்கிடப்படும். அந்த நேரத்தில் நைட்ரேட் மாத்திரைகளை எடுக்கக்கூடாது. வலது பக்கத்தில் பாதிப்பா, இடது பக்கத்தில் பாதிப்பா என்பன மருத்துவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள். வலது பக்க இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்...

Doctor Vikatan: சுகர்ஃப்ரீ பிஸ்கட், ஸ்வீட்ஸ்... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Doctor Vikatan: எனக்கு வயது 45. கடந்த 3 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. கடைகளில் விற்கும் சுகர்-ஃப்ரீ (Sugar-free) பிஸ்கட் மற்றும் ஸ்வீட்டுகளை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாமா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீரிழிவு பாதித்தவர்கள், சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது டயட் பிஸ்கட்டுகளைச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை அளவோடு வைத்துக்கொள்வது அவசியம். அதாவது உணவு இடைவேளைகளுக்கு நடுவில் ஏற்படும் பசிக்கு,  இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பிஸ்கட்டுகள் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அதையே உணவாக நினைத்து நிறைய சாப்பிடக் கூடாது. டயட் பிஸ்கட்டுகள் என்றாலும்  முழு உணவுக்கு மாற்றாகச் சாப்பிடக் கூடாது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. வேண்டாம் சுகர் ஃப்ரீ! - எச்சரிக்கும் WHO இனிப்புகளைப் பொறுத்தவரை ஸ்டீவிய...

Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 37. எனக்கு கடந்த ஆறு மாதங்களாக அல்சர் பாதிப்பு இருக்கிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி அதிகரிக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்.... அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் பால் குடித்தால் வலி குறையும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள்  முதலில் நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். அதேபோல், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரை இடைவெளியோடு பருக வேண்டும். அதாவது,  இரண்டிரண்டு டம்ளர்களாக காலை, முற்பகல், பிற்பகல், மாலை எனப் பிரித்துக் குடிக்கலாம்.  அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் காரம், புளிப்பு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேருக்கு இப்போது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இட்லிப் பொடி, ஊறுகாய், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, கிரேவி மற்றும் குருமா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். புளி ச...

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது எந்த மாத்திரையை எவ்வளவு எடுக்க வேண்டும்?

Doctor Vikatan:  மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது  குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.    சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் மாத்திரைகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்...  நைட்ரேட் மாத்திரையை யார், ஏன் தவிர்க்க வேண்டும்... தெளிவாகச் சொல்லவும். -Writer, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் நமக்கு இடது பக்க இதயம் (Left ventricle), வலது பக்க இதயம் (Right ventricle) என இரு பகுதிகள் உள்ளன. அதில், வலது பக்க இதயத்திற்கு மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டால், அவர்களுக்குப் பொதுவாகவே ரத்த அழுத்தமானது மிகக் குறைவாக இருக்கும். வலது பக்க இதய மாரடைப்பின் போது ரத்த அழுத்தம் 100-க்குக் கீழ் இருந்தால், அவர்கள் கண்டிப்பாக நைட்ரேட் (Nitrate) மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. அது மிக ஆபத்தாக முடியலாம். அது மட்டுல்லாமல், பொதுவாக இடது பக்க இதயத்தில் ஏற...

Doctor Vikatan: அசைவம் சாப்பிடாமலும் அதிகரிக்கும் கொழுப்பு... குறைப்பது சாத்தியமா?

Doctor Vikatan: நான் அசைவ உணவுகளே சாப்பிடுவதில்லை.  ஆனாலும் எப்போது பிளட் டெஸ்ட் செய்தாலும் எனக்கு கொழுப்பு (Cholesterol) அதிகமாக இருப்பதாகவே  ரிப்போர்ட்டில் வருகிறது. இதற்கு என்ன காரணம்...  அதிகப்படியான கொழுப்பை எப்படிக் குறைப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர் கொழுப்பு அதிகமாக இருப்பதற்கு அசைவ உணவுப் பழக்கம்தான் காரணமாக இருக்கும் என அர்த்தமில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் கொழுப்பு அதிகமாக இருக்கலாம்.  ரத்தத்தில் உள்ள கொழுப்பில் சுமார் 80% நமது கல்லீரலால் (Liver) சுயமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20% மட்டுமே நாம் சாப்பிடும் உணவிலிருந்து வருகிறது. உங்கள் மரபணு அல்லது பரம்பரையில் (Genetics) யாருக்கேனும் அதிக கொழுப்பு பிரச்னை இருந்தால்,  உங்கள் கல்லீரல் இயற்கையாகவே அதிக கொழுப்பை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது  நம் உடலுக்குத் தேவைக்கு அதிகமான ஆற்றல் கிடைக்கும்போது, உடல் அதை வீணாக்க விரும்பாது. உடல், அதைக் கொழுப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். அதன் தொடர்ச்சியாக ...

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan: பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலேயே  ஆரோக்கியமானதா அல்லது அது ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு பத்திய உணவு கொடுப்பது என்பது நம்மிடையே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கம்தான். ஆனால், பொதுமக்களிடையே 'பத்தியம்' என்றாலே அது சத்துகள் குறைந்த அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடக்கூடிய உணவு என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. உண்மையில், பிரசவத்திற்குப் பிந்தைய உணவியல் என்பது தாயின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு பருவ வயதினருக்கும் தனித்தனி உணவியல் இருப்பது போல, பிரசவித்த பெண்களுக்கும் பிரத்யேக உணவியல் உள்ளது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பிரசவித்த பெண்களுக்குப் பல வகையான லேகியங்கள் (உதாரணத்துக்கு,  பிரசவ லேகியம்) பரிந...

திருநெல்வேலி: களமிறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை! | Photo Album

திருநெல்வேலி: களம் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.!