Skip to main content

Posts

Showing posts with the label Lifestyle

Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாபட்டீஸ் வருவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார் மருத்துவர். குடும்ப பின்னணியில் டயாபட்டீஸ் இல்லாதபோதும் சிலருக்கு இப்படி கர்ப்ப காலத்தில் அந்த பாதிப்பு வர என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவை 'ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்' (gestational diabetes ) என்கிறோம்.  வழக்கமாக இது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதங்களில் வரும்.  கர்ப்பகால நீரிழிவுக்கு முக்கிய காரணமே, கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரிப்பதுதான். உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ (BMI) அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கர்ப்பிணிக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம். Doctor Vikat...

Doctor Vikatan: `2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டும் குணமாகாத வாய்ப்புண்..' - காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் உறவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புண் இருக்கிறது. எல்லாவிதமான மெடிக்கல் செக்கப்பும் செய்து பார்த்துவிட்டார். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் பிரச்னை சரியாகவே இல்லை. இதற்கு இயற்கையான மற்றும் நிரந்தரமான தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.... -இலக்கியா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி வாய்ப்புண் என்பது பரவலாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். சரியான சாப்பாடு சாப்பிடாதது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, வாய் சுகாதாரம் பேணாதது, கூர்மையான பற்கள் இருப்பது போன்றவற்றால் அடிக்கடி வாய்ப்புண்கள் வரலாம். ஆனால், 3 வாரங்களுக்கும் மேல் வாய்ப்புண் இருந்தால், மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா? சத்துக்குறைபாடு, வெற்றிலை-பாக்கு பழக்கம், வாய் துர்நாற்றத்துக்காக எப்போதும் மிட்டாய் போன்ற ஒன்றை மெல்வது, அளவுக்கதிகமாக காபி, டீ குடிப்பது ...

கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்கள்!

கோ டைக்காலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்ப்பூசணியும்(watermelon) , முலாம் பழமும்(muskmelon) தான். தர்பூசணி, முலாம்பழம் போன்றே கொடுக்காய்ப்புளியும் கோடை சீசனீல் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒன்று. கோடையில் தான் இந்த காய்கள் காய்க்கும் சீசனும் கூட. மற்ற நேரங்களில் இவற்றை பார்க்க முடியாது. சென்னைப் போன்ற வட தமிழக பகுதிகளில் இதற்க்கு கொரிக்கலிக்காய் என்ற வேறொரு பெயரும் உண்டு. கொடுக்காய்ப்புளி நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுக்காய்ப்புளியை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றளவும் கிராமப்புறங்களில் கொடுக்காய்ப்புளிக்கு மவுசு அதிகம். பழத்திற்கு‌ பாதுகாப்பாய் வேலி அமைத்ததுபோல மரத்தின் கிளைகள் முழுவதும் முற்கள் படர்ந்திருக்கும். இதன் முற்றிய காய்கள் பச்சை நிறத்திலும் சாப்பிடுவதற்கு துவர்ப்பு சுவையிலும், பழம் அடர் சிவப்பு நிறத்திலும் சாப்பிடுவதற்கு இனிப்பு கலந்த‌ துவர்ப்பு சுவையுடனும் இருக்கும். Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! மனிதன் எதையும் போகிற போக்கில் உண்ண பழகவில்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் மறைந்திருக்கும்....

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன்.  என்றாவது ஒன்றிரண்டு நாள்கள் அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சரியான பழக்கம்தானா... எத்தனை பழங்கள் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார் கோயம்புத்துரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து என சத்துகளின் பெட்டகம் என்றே வாழைப்பழத்தைச் சொல்லலாம். இதிலுள்ள கார்போஹைட்ரேட்டின் மூலம் உடலுக்குத் தேவையான கலோரி கிடைத்துவிடும். வாழைப்பழத்தில் புரதச்சத்து கிடையாது. உடலின் கட்டமைப்புக்கு புரதச்சத்து மிக மிக முக்கியமானது.  உடலின் நோய் எதிர்ப்பாற்றல், திசுக்களைப் பழுதுபார்த்தல், தசை வளர்ச்சி,  எலும்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் புரதச்சத்து மிக அவசியம்.  கொழுப்புச்சத்தானது, உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, கொழுப்பில் கரையும் ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ள உதவும்.  த...

Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும்.  வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென  கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா  அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது.  Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்? பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரன்ட் என்பது வியர்வையின் வாடையை தன் வாடையின் மூலம்  மறைக்கும்.  ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி  வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை  அணியும்போது வியர்வை...

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

அ னைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை. கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந்து அதனால் அவதிப்படுபவர்கள் அதிகம். தோல் மருத்துவர்களிடம் செல்லும் நோயாளிகளில் கணிசமானவர்களுக்குப் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணமே சுத்தமற்ற உள்ளாடைகள்தான். உள்ளாடைகளின் அளவில் ஆரம்பித்து, எப்படி உலர்த்துவது என்பது வரை சொல்கிறார் தோல் மருத்துவர் தீபிகா லுனாவத். உள்ளாடை எந்த உள்ளாடைகள் அணிவது சரி? இடுப்பில் இருந்து சிறிதளவு மட்டுமே நீளும் அளவுக்கு இருக்கும் சாதாரணமான உள்ளாடைகளைத்தான் பலர் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பதிலாக, பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவது நல்லது. சாதாரணமான உள்ளாடையில், தொடைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையே போதிய காற்று வசதி இருக்காது. இதனால், இடுக்குகளில் வியர்வை படிந்து, தோல் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும். அளவில் கவனம் பெரும்பாலானோர் குறிப்பாக, பெண்கள் இறுக்கமாக பிரா அணிகிறார்கள். இது தவறு. இறுக்கம...

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சி றுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல் சிறுநீரகக் கற்கள் உருவாக 8 காரணங்கள்; 1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு. 2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது. 3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது. 4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள். 5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல். 6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது. 7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள். 8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல். ரத்தப் பரிசோதனை எப்படிக் கண்டறிவது? எ ளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில், ...

Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இதுபற்றி விளக்குகிறார் ட்ரைக்காலஜிஸ்ட் தலட் சலீம். Shampoo என்னென்ன ஷாம்புக்கள் உள்ளன? * கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது. * ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது. * ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது. * கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம். * வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும். * மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தல...

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

Doctor Vikatan:  மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்...  சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே... தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி கேள்வியில் உங்களுடைய வயது, உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளனவா, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவரா, உடல் பருமன் கொண்டவரா,  சராசரி எடையுடன் இருப்பவரா என்பன போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அந்தத் தகவல்கள் தெரிந்தால் இன்னும் விளக்கமாக இதற்கு பதில் அளிக்க முடியும். இரவில் தாமதமாகத் தூங்கும் வழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது.  அப்படி தாமதமாகத் தூங்கி, குறைந்த நேரம் தூங்கி எழுபவர்களுக்கு அடுத்த நாள் அந்தத் தூக்கம் தொடர்வதில் ஆச்சர்யமில்லை. கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை வரலாம். பொதுவாக இந்தப் பிரச்னைக்...

Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு எங்கே பயணம் செய்தாலும் வெறும் வயிற்றுடன்தான் செல்ல வேண்டும். கொஞ்சமாக ஏதேனும் சாப்பிட்டாலும் பாதி பயணத்தில் கழிவறைக்கு ஓடும்படியான அவசரநிலை ஏற்படும். இதனால் கழிவறை வசதியில்லாத பயணங்களின் போது பசியோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது.  இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம்,எப்படித் தவிர்ப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி மருத்துவர் பாசுமணி ஐபிஎஸ்  எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome ) பிரச்னையின்  அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையில்,  குடலானது பரபரப்பாக, தேவைக்கதிகமாக இயங்கும். வயிற்றுவலியும், உப்புசமும் அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்காகவும் சிலருக்கு மலச்சிக்கலாகவும் இது வெளிப்படலாம். சிலருக்கு இரண்டும் மாறி மாறி வரும். பயணம் என்றாலே அலர்ஜியை ஏற்படுத்தும் அளவுக்கு இது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. பல கிலோ மீட்டர் பயணம் என்றில்லாமல்,  அரைமணி நேர பயணத்தில்கூட...

Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!

மு ட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார். Face pack Beauty: அழகே தக்காளி; கருமை போக்கி முகத்தை பளிச் ஆக்கும் தக்காளி! ''முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! உணவுப் பொருள்களான முட்டை, சர்க்...

Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?

Doctor Vikatan: விரதம் இருப்பது என்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லது செய்யுமா அல்லது உடலை பலவீனமாக்குமா? விரதமிருப்பதால் உடல் டீடாக்ஸ் செய்யப்படும் என்பது உண்மையா? விரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போது எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி விரதமிருப்பது என்பது நிச்சயம் உடலை டீடாக்ஸ் செய்யும் விஷயம்தான். 15 நாள்களுக்கொரு முறை விரதமிருக்கலாம்.  அவரவர் வயது, உடலுழைப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து விரதமிருக்கும் நேரத்தை, தன்மையைத் தேர்ந்தெடுக்கலாம். Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு? இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம்.  விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லத...

Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்?

ப லர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவது வைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது. இதுபற்றி சொல்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலமுருகன். Ears ''காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும். இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம். மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், வெதுவெதுப்பான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள். இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காத...

Doctor Vikatan: 30 வயதில் திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி; சாதாரண பாதிப்பா, பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 31 வயதுதான் ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவன் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் நினைவில்லை என்றான்.  அவனுக்கு குடிப்பழக்கம் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து நார்மலாகிவிட்டான் என்றாலும் அந்தச் சம்பவம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இந்த இளம்வயதில் இப்படி திடீரென ஞாபக மறதி வருமா... அதற்கு என்ன காரணமாக இருக்கும்...  இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் உங்கள் நண்பருக்கு ஏற்பட்ட திடீர் ஞாபக மறதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  மறதியின் தீவிரம் எப்படியிருந்தது என்பதை வைத்துதான் அது குறித்து விளக்கமளிக்க முடியும். பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இப்படி திடீரென மறதி ஏற்படுவதும், பிறகு சரியாவதும் நடந்திருக்கும். உங்கள் நண்பர் ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாரா என்று பாருங்கள்.  உதாரணத்துக்கு, டிப்ரெஷன், பதற்றம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்...

இளமையைக் காக்கும் தேங்காய் எண்ணெய்; எப்படிப் பயன்படுத்துவது?

`தே ங்காய் எண்ணெய்யா... அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். 'உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?' என்று மருத்துவர்களிடம் கேட்டால், 'இல்லை' என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய். இதுபற்றி விளக்கமாக சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா. தேங்காய் எண்ணெய் *தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது. *தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத...

Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?

Doctor Vikatan:  பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்களே, அது சரியானதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நட்ஸில் கலோரிகள் மிகவும் அதிகம். உதாரணத்துக்கு, 100 கிராம் பாதாமில் 655 கலோரிகள் உள்ளன. சுமார் 20 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 687 கலோரிகள் உள்ளன. 15 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம்  பிஸ்தாவில் 626 கலோரிகளும், 19 கிராம் புரதமும் உள்ளன. நட்ஸை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்வதுதான் சரியானது. பாதாமை பொறுத்தவரை அதன் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதுதான் சரியானது....

Health: வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு!

ப னைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதுபற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம். பனங்கற்கண்டு * பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். இதை இரவில் தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும். வாய்வுத்தொல்லையும் நீங்கும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தாகமும் தணியும். * முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக...

``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்திருக்கிறார். நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. Ambulance: ``சட்டைக்கூட இல்லாமல்.." சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! - யார் இவர்? இது குறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், "மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அனைத்தையும் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்...