Skip to main content

Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் வயது 45. நான் பல வருடங்களாகக் குப்புறப் படுத்துத் தூங்கியே பழகியவன். சமீபகாலமாக எனக்கு முதுகுவலி இருக்கிறது. படுக்கும் பொசிஷன் சரியில்லை என்றால் முதுகுவலி வரும் என்கிறான் என் நண்பன்.

குப்புறப்படுத்தால் முதுகுவலி வருமா.... மல்லாந்த நிலை, ஒருக்களித்த நிலை, குப்புறப் படுப்பது... எந்தப் பொசிஷனில் தூங்குவது சரியானது?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

மக்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் மல்லாந்த நிலையிலேயே படுத்துத் தூங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இப்படித் தூங்கும்போது முதுகெலும்புக்கும் நல்ல ரெஸ்ட் கிடைக்கிறது.

சுமார் 60 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும், சுமார் 16 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. ஒருக்களித்துத் தூங்கும்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் என்பதால் இது ஓர் ஆரோக்கியமான தூங்கும் முறையாகச் சொல்லப்படுகிறது.

ஒருக்களித்துத் தூங்குபவர்கள், தோள்கள் மற்றும் இடுப்புப் பகுதிக்குச் சரியான அழுத்தம் தரும் மென்மையான மெத்தையைத் தேர்வு செய்ய வேண்டும். 

தூங்கும் முறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நல்ல தலையணை உபயோகிப்பதும் முக்கியம். ரொம்பவும் தடிமனாக இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணையைத் தேர்ந்தெடுங்கள்.

மெத்தையானது, உங்கள் முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை உறுத்தாதபடி, மிகவும் கடினமாக இல்லாததாகப் பார்த்துக் கொள்ளுங்கள். 'மெமரி ஃபோம்' (Memory foam) மற்றும் ஹைபிரிட் மெத்தை (Hybrid bed) வகைகள் சிறப்பாக இருக்கும்.

ரொம்பவும் தடிமனாக இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணையைத் தேர்ந்தெடுங்கள்.

குப்புறப்படுத்துத் தூங்குவது கழுத்துக்கு நல்லதில்லை.  பலகாலமாகப் குப்புறப்படுத்தே தூங்கிப் பழகியவர்கள், மிக மெல்லிய தலையணையைப் பயன்படுத்த வேண்டும். தலையணை இல்லாமல் தூங்குவது அதைவிடவும் சிறப்பு. 

குப்புறப்படுத்துத் தூங்குகிறவர்களுக்கு முதுகுவலி வரும் வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உறங்குபவர்களுக்கு முதுகெலும்பு தொய்வடையாமல் தடுக்க உறுதியான மெத்தை தேவைப்படும். 'இன்னர் ஸ்பிரிங் ஃபோம்' (Inner spring  foam) வகை மெத்தையைப் பயன்படுத்த வேண்டும். 

ஆனால், உங்கள் முதுகுவலிக்குக் குப்புறப்படுத்துத் தூங்குவதுதான் காரணம் என நீங்களாக நினைத்துக்கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலிக்கு வேறு காரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...