Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், நம் உடலின் ரசாயன மாற்றங்களும் மற்ற நடவடிக்கைகளும் சீராக நடக்கும். இந்த அளவைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்தச் சூட்டைத் தணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால் உடல் களைப்பாகும். காய்ச்சலின்போது ஏற்படும் அத்தனை அசௌகர்யங்களையும் உடல் உணரும். 98.8 அல்லது 99 டிகிரியை எட்டும்போது உடல்வலி, களைப்பு என எல்லாம் வரும். எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந...
Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், நம் உடலின் ரசாயன மாற்றங்களும் மற்ற நடவடிக்கைகளும் சீராக நடக்கும். இந்த அளவைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்தச் சூட்டைத் தணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால் உடல் களைப்பாகும். காய்ச்சலின்போது ஏற்படும் அத்தனை அசௌகர்யங்களையும் உடல் உணரும். 98.8 அல்லது 99 டிகிரியை எட்டும்போது உடல்வலி, களைப்பு என எல்லாம் வரும். எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந...