Skip to main content

Posts

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்... வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.    மருத்துவர் கே. பாஸ்கர் ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள   குணப்படுத்தக்கூடிய காரணங்கள்,  குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள்  என  அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், தைராய்டு பிரச்னைகள், தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும் நோய்கள் (autoimmune conditions),  மூச்சுத்திணறல் நோய்க்குறி (sleep apnea syndrome ),  நீரிழிவு நோய்,  கார்ட்டிசால் குறைபாடுகள்,  காசநோய் (TB) போன்ற தொற்றுகள் இன்னும் இப்படிப் பல. அடிப்படையான ரத்தப்பரிசோதனைகள் மூலம் பிரச்னை என்ன என்பதை நாம் கண்டறியலாம...
Recent posts

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்... வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.    மருத்துவர் கே. பாஸ்கர் ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள   குணப்படுத்தக்கூடிய காரணங்கள்,  குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள்  என  அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், தைராய்டு பிரச்னைகள், தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும் நோய்கள் (autoimmune conditions),  மூச்சுத்திணறல் நோய்க்குறி (sleep apnea syndrome ),  நீரிழிவு நோய்,  கார்ட்டிசால் குறைபாடுகள்,  காசநோய் (TB) போன்ற தொற்றுகள் இன்னும் இப்படிப் பல. அடிப்படையான ரத்தப்பரிசோதனைகள் மூலம் பிரச்னை என்ன என்பதை நாம் கண்டறியலாம...

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல்.... ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா?

Doctor Vikatan: வீட்டில் ஒருவருக்கு நிமோனியா (Pneumonia) காய்ச்சல்  வந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுமா...  பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா. நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா. வீட்டில் ஒருவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அது நிச்சயம் பரவும். இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பாக்டீரியாவும் சரி, வைரஸ்களும் எளிதில் பரவக்கூடியவை (highly contagious). பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ, அவர்களுடைய சுவாசத் துளிகள் (respiratory droplets) காற்றில் பரவுகின்றன. அதன் மூலம் அந்தக் கிருமிகளும் காற்றில் பரவுகின்றன. அதனால், அது எளிதாக மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் பரவக்கூடும்.  அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கப்புகள் (cups), பாத்திரங்கள் (utensils) அல்லது அவர்கள் பயன்படுத்தும் டிஷ்யூ (tissues) மூலமாகவும் இந்தத் தொற்றுகள் (infections) பரவுவதற்கு வாய்ப...

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல்.... ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா?

Doctor Vikatan: வீட்டில் ஒருவருக்கு நிமோனியா (Pneumonia) காய்ச்சல்  வந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுமா...  பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா. நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வந்தனா. வீட்டில் ஒருவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அது நிச்சயம் பரவும். இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பாக்டீரியாவும் சரி, வைரஸ்களும் எளிதில் பரவக்கூடியவை (highly contagious). பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ, அவர்களுடைய சுவாசத் துளிகள் (respiratory droplets) காற்றில் பரவுகின்றன. அதன் மூலம் அந்தக் கிருமிகளும் காற்றில் பரவுகின்றன. அதனால், அது எளிதாக மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் பரவக்கூடும்.  அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கப்புகள் (cups), பாத்திரங்கள் (utensils) அல்லது அவர்கள் பயன்படுத்தும் டிஷ்யூ (tissues) மூலமாகவும் இந்தத் தொற்றுகள் (infections) பரவுவதற்கு வாய்ப...

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா. “தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர். இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும். சித்த மருத்துவர் சங்கீதா மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும். உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும். இதனால் கொப்பளங்கள் ஏற்படுக...

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா. “தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர். இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும். சித்த மருத்துவர் சங்கீதா மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும். உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும். இதனால் கொப்பளங்கள் ஏற்படுக...

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது. அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள்  நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது.  அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமா...