Skip to main content

Posts

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Salt) மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள ராஜன் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஓ.ஆர்.எஸ்‌‌ கலவை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருவதால், உள்ளுர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இது குறித்து தெரிவித்த நோயாளிகள் சிலர், "வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லை என இரண்டு நாள்களாக எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு தினங்களாக வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறோம்" என்றனர். இது குறித்து தெரிவித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிய...
Recent posts

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Salt) மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள ராஜன் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஓ.ஆர்.எஸ்‌‌ கலவை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருவதால், உள்ளுர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இது குறித்து தெரிவித்த நோயாளிகள் சிலர், "வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லை என இரண்டு நாள்களாக எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு தினங்களாக வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறோம்" என்றனர். இது குறித்து தெரிவித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிய...

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்...

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்...

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   மருத்துவர் கே. பாஸ்கர் தூக்கத்தில் ஏதோ ஒரு பெரிய பாதாளத்தில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு பயத்தில் தூக்கம் கலையலாம். இதை 'ஹிப்னிக் ஜெர்க்' (hypnic jerk) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இதனால் தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தப் பிரச்னை நூற்றில் 60, 70 பேருக்கு இருப்பதுதான். இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கத் தேவையில்லை. Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா? தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இர...

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   மருத்துவர் கே. பாஸ்கர் தூக்கத்தில் ஏதோ ஒரு பெரிய பாதாளத்தில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு பயத்தில் தூக்கம் கலையலாம். இதை 'ஹிப்னிக் ஜெர்க்' (hypnic jerk) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இதனால் தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தப் பிரச்னை நூற்றில் 60, 70 பேருக்கு இருப்பதுதான். இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கத் தேவையில்லை. Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா? தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இர...

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan: த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பார்க்க வேண்டாம் என்பது போல டிஸ்கிளெய்மர் போடுவதைப் பார்த்திருக்கிறோம். த்ரில்லர் காட்சிகளைப் பார்ப்பதால் ஒருவருக்கு அபார்ஷன் ஆக வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் அபார்ஷன் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, மரபணு தொடர்பான காரணங்கள்... அபார்ஷன் ஆவதற்கு 50 முதல் 70 சதவிகிதம் இந்தக் காரணங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. முதல் டிரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் முதல் முப்பருவத்தில் (7 முதல் 8 வாரங்களில்) இதனாலேயே அபார்ஷன் ஏற்படுகிறது. அடுத்த முக்கிய காரணம், ஹார்மோன் சமநிலையின்மை. உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, சர்க்கரைநோய் இருந்தாலோ, தீவிர பிசிஓஎஸ் பாதிப்புடன் கருத்தரித்திருந்தாலோ... அந்த நிலைகளில் அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். க...