Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமே ஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் குறைவது போன்றவை சீக்கிரமே பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா? மூளையை ஆக்டிவ்வாக வைத்திருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி ப்ரித்திகா சாரி ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தைப் பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதை 'ஸ்ட்ரெஸ்ஃபிட்' என்கிறோம். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிந்தனை தொடங்கி, செரிமானம், இதய நலன் என எல்லாமே அதனால் பாதிக்கப்படும். பிற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் அது காரணமாகலாம். ...
Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமே ஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் குறைவது போன்றவை சீக்கிரமே பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா? மூளையை ஆக்டிவ்வாக வைத்திருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி ப்ரித்திகா சாரி ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தைப் பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதை 'ஸ்ட்ரெஸ்ஃபிட்' என்கிறோம். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிந்தனை தொடங்கி, செரிமானம், இதய நலன் என எல்லாமே அதனால் பாதிக்கப்படும். பிற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் அது காரணமாகலாம். ...