Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கிறார்கள் இன்னும் சிலர். கற்றாழைச் சாற்றை எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி கற்றாழைச் சாறு குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதைச் சரியாக, முறையாகச் செய்து குடிக்கிறோமா என்பதுதான் இதில் முக்கியம். கடைகளில் வாங்கிக் குடிப்பதானால், அது சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்த பிறகு குடிக்க வேண்டும். கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது. கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை...
Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கிறார்கள் இன்னும் சிலர். கற்றாழைச் சாற்றை எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி கற்றாழைச் சாறு குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதைச் சரியாக, முறையாகச் செய்து குடிக்கிறோமா என்பதுதான் இதில் முக்கியம். கடைகளில் வாங்கிக் குடிப்பதானால், அது சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்த பிறகு குடிக்க வேண்டும். கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது. கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை...