தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசல் வெப்ப அலையினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் இலவசமாக வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்த நிலையங்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண் வெப்ப அலை - முன்னெச்சரிக்கை வெப்ப அத...
Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது? -எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர்களில் உள்ள பிளேடுகள் மாற்றக்கூடியவை அல்ல. இவை சருமத்தின் அடியில் ஊடுருவிச் செல்பவையும் (Non-invasive) அல்ல. முடியின் நீளத்தை மட்டுமே குறைக்கக்கூடியவை. ஷேவிங் செய்யப் பயன்படும் பிளேடுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாற்றப்படுபவை. ஆனால், டிரிம்மர்கள் அப்படிப்பட்டவை அல்ல. சலூன்களில் உங்களுக்குப் பயன்படுத்தும் டிரிம்மர்களை முறையாகச் சுத்தம் செய்கிறார்களா (Sanitization) என்று கவனியுங்கள். டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யுங்கள். ஒருவேளை கழற்றி மாட்டக்கூடிய மாடல் என்றால், கத்தரிக்கோல்களைச் சுத்தப்படுத்துவத...