Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன? - மல்லிகா அன்பழகன். சென்னை பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு. மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும். இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம்...
Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன? - மல்லிகா அன்பழகன். சென்னை பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு. மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும். இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம்...