Skip to main content

Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்... சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா?

Doctor Vikatan: என் வயது 60. எனக்கு சர்க்கரைநோய் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்க்கரைநோயை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா...  சித்த மருந்துகளில் என்ன, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவீர்களா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சர்க்கரைநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் கண்டறியப்படலாம். 60 வயதில் கண்டறியப்பட்டாலும் சரி அல்லது 30- 40களில் கண்டறியப்பட்டாலும் சரி, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாயமாக ஏதேனும் ஒரு மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும்.

60 வயது எனும் போது நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இப்போதுதான் முதல்முறையாக சர்க்கரைநோய்  கண்டறியப்பட்டதா அல்லது பல ஆண்டுகளாக இருந்து இப்போதுதான் அறிகுறிகள் தெரிகின்றனவா என்பதைக் கணித்து மருந்து கொடுப்பது நல்லது.

சர்க்கரை நோய்க்கு சாதாரணமாகப் பார்க்கப்படும் உணவுக்கு முன் (Before), பின் (After) ரத்தப் பரிசோதனைகளுடன், ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்றுமாத கால சராசரியையும் பார்த்துவிட்டு மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. 

ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்றுமாத கால சராசரியையும் பார்த்துவிட்டு மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

60 வயது என்பதால் சித்த மருத்துவமும், நவீன மருத்துவமும் இணைந்த  ஒருங்கிணைந்த மருத்துவத்தைத் தொடங்குவது இப்போதைக்கு நல்லது.

சர்க்கரை அளவு 200 அல்லது 250 தான் இருக்கிறது என்றால் தாராளமாக சித்த மருந்துகளை எடுக்கலாம். சித்த மருந்துகளை எடுக்கும்போது  சித்த மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையின் பேரில் எடுப்பது மிக முக்கியம்.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை.

நார்ச்சத்து (Fiber) மிகுந்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். வயதிற்கு ஏற்ப அளவோடு சாப்பிட வேண்டும். மாவுச்சத்தைக் (Carbohydrates) குறைத்துவிட்டுப் புரதச்சத்து (Protein) அதிகமாக இருக்கும் முறையைப் பின்பற்றலாம். நிறைய காய் மற்றும் கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 60 வயதில் நுண்ஊட்டச்சத்து (Micronutrients) குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. திராட்சை, சாத்துக்குடி, மாதுளம்பழம் மற்றும் அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் நாவல் பழம், விளாம்பழம் போன்றவற்றை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். மூட்டுவலி போன்ற உபாதைகள் இல்லை என்றால் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியைத் தொடர வேண்டும். நல்ல உறக்கம் மற்றும் சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...