Skip to main content

Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?

Doctor Vikatan:  என்  கணவருக்கு கடந்த 4 வருடங்களாக  சர்க்கரைநோய் இருக்கிறது.  இந்நிலையில் நான்  கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார்களே... அது உண்மையா.... அதனால்  குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு.

நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன.  விந்தணுக்களின் அடர்த்தி குறைவது, அவற்றிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவது, அவற்றின் நகரும் தன்மை பாதிக்கப்படுவது என பல பிரச்னைகளுக்கும் காரணம் நீரிழிவு நோய். 

நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன.

20-25 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து, அதுவும் கட்டுப்பாடற்று இருந்து, அதற்காக வருடக் கணக்கில் மருந்துகள் எடுத்துக்கொள்வோரில் மிக மிக அரிதாக ஒன்றிரண்டு பேருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரலாமே தவிர எல்லோருக்கும் வராது. இதைத்தான் உங்கள் மனைவி குறிப்பிட்ட லேட்டஸ்ட் ஆய்வும் குறிப்பிடுகிறது.

எனவே, நீரிழிவு நோய்தான் பிரச்னைக்குரியதே தவிர்த்து அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புகளைத் தராது. உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தையே பிறக்கும். கவலை வேண்டாம். உங்கள் கணவர் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மட்டும் உறுதி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...