Skip to main content

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் துர்கா தேவி.

uncontrolled diabetes

"கடந்த 8 ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர், நெஞ்சு வலி அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தார். மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இதயத்தின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால், ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை உள்ளிட்ட இந்தியாவில் பல பகுதிகளிலும் அதிகரித்துள்ளன.

சர்க்கரைநோய்

நம் நாட்டில் 7.7 முதல் 10.1 கோடி பேர் வரை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளம் வயதினருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தொப்பை ஆகியவை முக்கிய காரணங்களாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

silent heart attack

மரபணு ரீதியான காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான இதய நோய்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயின் காரணத்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பை உருவாக்குகிறது. இதன் பாதிப்புகள் பல வகைகளில் வெளிப்படும். இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்படுவது உள்ளிட்டவை ஏற்படுகின்றன. மேலும் நரம்பு மண்டல பாதிக்கப்படுவதால் வலி தெரியாமலேயே ரத்த ஓட்டம் குறைவது அல்லது அமைதியான மாரடைப்பு (Silent Heart attack) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் நீண்ட காலமாகக் கூடுதலாக இருக்கும் சர்க்கரையின் அளவு, ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, சில தேவையற்ற வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்யும். இதனால் ரத்தக் குழாய்களில் வீக்கம் மற்றும் பெரிய தமனிகள் தடித்து, கொழுப்பு படிவதை வேகப்படுத்துகிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவான பிரச்னையாகும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இந்திய மரபணு...

இந்தியாவில் இந்தப் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதற்குக் காரணம் 'ஏசியன் இந்தியன் ஃபினோடைப்' என்று அழைக்கப்படும் மரபணு ரிதீயான உடலமைப்பு முறைதான். சாதாரண பி.எம்.ஐ கணக்கீட்டின்படி ஒரு நபர் பருமனாகத் தெரியவில்லை என்றாலும், அவரது மரபணு மற்றும் வளர்சிதை மாற்ற அமைப்பின் காரணமாக வயிற்றுப் பகுதியில் அதிகக் கொழுப்பு சேருகிறது.

இதய மருத்துவர் துர்கா தேவி

ஒல்லியாக இருப்பவர்கள் தொப்பையை ஒரு பெரிய பிரச்னையாக நினைப்பதில்லை. ஆனால் தொப்பையில் சேர்ந்திருக்கும் கொழுப்பானது இதய நோய் வருவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. இதனால், ஐரோப்பியர்களைவிட இந்தியர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இளம் வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுகின்றன.

அதே போல ரத்தக்குழாய்களில் அடைப்போ உயர் ரத்த அழுத்தமோ இல்லாவிட்டாலும், சர்க்கரை நோயின் தீவிரத்தால் இதயத் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் பலவீனமடையலாம். இது இறுதியில் இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். அதே போல சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உள்ளது.

exercise

தவிர்ப்பது எப்படி?

சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை எப்போது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதய பாதிப்புகளைத் தவிர்க்க, ரத்த அழுத்தத்தை 130/80-க்கும் குறைவாகவும், கெட்ட கொழுப்பை 100 mg/dL-க்கும் குறைவாகவும் பராமரிக்க வேண்டும். கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தொப்பையைக் குறைங்க...

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க மாவுச்சத்துள்ள உணவுகளைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு முறையான உடற்பயிற்சியும் அவசியம்" என்கிறார் மருத்துவர் துர்கா தேவி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...