Skip to main content

Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா?

Doctor Vikatan: உப்பை அறவே தவிர்க்கும் உணவுப்பழக்கத்தை இன்று பலர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படி அறவே உப்பைத் தவிர்ப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே போல சர்க்கரையை அறவே தவிர்க்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதா.... சர்க்கரையைத் தவிர்த்த ஒரே வாரத்தில் சருமம் முதல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆரோக்கியமான நபர், சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்

உணவில் உப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், அது உடலில் எலக்ட்ரோலைட் சமமின்மையை (Electrolyte imbalance) உண்டாக்கிவிடும். நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் மிக முக்கியமான காரணிகளாக உள்ளன.

உடலில் சமநிலை குறையும்போது முதலில் தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படும்; கை, கால்கள் மரத்துப்போனது போன்ற உணர்வு உண்டாகும்.
சோடியம் அளவு குறையும்போது உடல் மிகவும் சோர்வடைந்து, சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போகும். எலக்ட்ரோலைட் அளவு மிக அதிகமாகக் குறைந்தால், படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5 கிராம் முதல் அதிகபட்சம் 7-8 கிராம் வரை உப்பு அவசியம். ஆனால், உப்பை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது; அது உடலில் தேவையற்ற நீர் தங்க வழிவகுக்கும்.

'காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்' நிறைந்த வெல்லம், பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

இனிப்பைப் பொறுத்தவரை, வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில், அது 'சிம்பிள் கார்போஹைட்ரேட்' வகையைச் சார்ந்தது. அதற்கு பதிலாக 'காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்' நிறைந்த வெல்லம், பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையைத் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கானவை.

வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நீரிழிவு நோய் (Diabetes), புற்றுநோய் (Cancer), சரும நோய்கள் மற்றும் உடல் எடை குறைப்பிற்கு (Weight loss) மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் சர்க்கரையைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதுதான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...