Skip to main content

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர். ஹேர் டைக்கும், கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கும் தொடர்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

விஜய் ஷங்கர்

வயதாவதை நம்மால் தடுக்க முடியாது, வயது ஏற ஏற நம் தலைமுடியும் நரைப்பது இயல்புதான். இப்போதெல்லாம் சராசரிக்கும் முன்பே, இவ்வளவு ஏன், டீன் ஏஜிலேயே நரை முடி பிரச்னை பலருக்கும் ஆரம்பித்துவிடுகிறது. இள வயதிலேயே டை உபயோகிக்க ஆரம்பித்து விடுவதையும் பார்க்கிறோம். பொதுவாக, நீண்டகாலமாக ஹேர்டை (Hair dye) பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம்.

டை  பயன்படுத்துவதில் பொதுவாகக் காணப்படும்  பக்கவிளைவுகளில், கண்களில் ஏற்படும் அலர்ஜி முக்கியமானது. இந்த டையில் பிபிடி என்று சொல்லப்படும் P-Phenylenediamine (பி-ஃபினைலீன்டையமின்) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டையினால் ஏற்படும் அலர்ஜிக்கு முக்கிய காரணம். இது சருமத்தில் தடிப்புகளை (Skin rash) ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்களில் எரிச்சல், அரிப்பு மற்றும் உறுத்தலையும் உண்டாக்கலாம். எனவே, டை போடும்போது அது கண்களுக்குள் சென்றுவிட்டால், உடனடியாக சாதாரண குழாய் நீரிலோ அல்லது அறை வெப்பநிலையில் உள்ள நீரிலோ கண்களை நன்றாகக் கழுவ வேண்டும்.

மார்க்கெட்டில் அம்மோனியா இல்லாத டைகள் (Ammonia-free dyes) மற்றும் அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான டைகள் பல கிடைக்கின்றன.

ஒருவேளை அந்த அலர்ஜி சரியாகாமல் நீடித்தால், உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவர் அலர்ஜியை சரிசெய்யக்கூடிய மருந்துகளைப் (Anti-allergic drugs) பரிந்துரைப்பார். இன்று மார்க்கெட்டில் அம்மோனியா இல்லாத டைகள் (Ammonia-free dyes) மற்றும் அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான  டைகள் பல கிடைக்கின்றன. டை அலர்ஜிக்கு உள்ளானவர், சரும மருத்துவரை அணுகினால்,  பாதுகாப்பான டை குறித்துச் சொல்லி, அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்றும் ஆலோசனை வழங்குவார்.

பொதுவாக டைகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்றாலும், அவை கண்களுக்கு மிக  தீவிரமான பாதிப்புகளை உண்டாக்காது. இருப்பினும், அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது எப்போதும் நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...