Skip to main content

Doctor Vikatan: வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா?

Doctor Vikatan: வலியினால் ஒருவருக்கு  தற்காலிக மயக்கம்  ஏற்படுமா... சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டு வந்த என் உறவினர், வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவர் திடீரென மயக்கமாகிவிட்டார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, வலியால் ஏற்பட்ட தற்காலிக மயக்கம்தான் என்றார்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

மருத்துவ ரீதியாக இதை 'வாசோவாகல் சின்கோப்' (Vasovagal Syncope) அல்லது 'பெயின் இன்டியூஸ்டு சின்கோப்' (Pain-induced Syncope) என்று சொல்வோம். அதாவது, உடலில் ஏற்படும் அதீத வலியினால் உண்டாகும் தற்காலிக மயக்க நிலை இது.

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம்.

அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் சில நொடிகள் குறைவதால், தற்காலிக மயக்கம், பேச முடியாமை, உடல் தளர்ச்சி மற்றும் வியர்வை போன்றவை ஏற்படுகின்றன.

படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும்.

இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கால்களைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்து, அதன் பின்பே நிதானமாக எழுந்து நடக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த பாதுகாப்பான வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி வலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய ஓய்வும், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் அவசியம்.

இது தற்காலிகமான பாதிப்பு என்பதால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், இது போன்ற அறிகுறிகள் முதன்முறை ஏற்படும்போது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால், மூளைக்கான ஸ்கேன் (Brain Scan) செய்ய அறிவுறுத்துவார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...