Skip to main content

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்... இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா.... ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய நோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்.

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பொதுவாகச் சந்தோஷமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

கார்டிசால், அட்ரீனலின், நார்-அட்ரீனலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைகின்றன. சிம்பதெடிக் சிஸ்டம் (Sympathetic system) அமைதியாகி, பாராசிம்பதெடிக் சிஸ்டம் (Parasympathetic system) வலுவடைகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், இதயத் துடிப்பு சீராகும்.

மகிழ்ச்சியானவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் நல்ல முறையில் அமையும். உடற்பயிற்சி மற்றும் இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளால் ஏற்படும் மனமகிழ்ச்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

அதிக சந்தோஷத்தைத் தாங்க முடியாது என்பது சாதாரண மகிழ்ச்சியைக் குறிப்பதல்ல. இது திடீரென ஏற்படும் உணர்ச்சி வெடிப்பு (Emotional Shock) ஆகும்.

உதாரணமாக, திடீர் அதிர்ச்சி (Shock), அதீத உற்சாகம் (Excitement), கடும் பயம் அல்லது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் அட்ரீனலின் அளவு பெருமளவு உயர்கிறது. இது சிம்பதெடிக் சிஸ்டத்தைத் தூண்டி, இதயத் துடிப்பைச் சீரற்றதாக (Irregular heartbeat) மாற்றலாம்.

இதனால் ரத்த அழுத்தம் உயரக்கூடும். இது ஏற்கெனவே இதயநோய் உள்ளவர்களுக்கோ அல்லது முதியவர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்' (Broken Heart Syndrome) என்றொரு மருத்துவ நிலை இருக்கிறது. ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்த நிலைக்கு, 'டகோட்சுபோ கார்டியோமயோபதி' (Takotsubo Cardiomyopathy) என்று பெயர். நல்ல இதயநலனுடன் இருந்தவர்களுக்குக்கூட திடீரென இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

திடீர் அதிர்ச்சி (Shock), அதீத உற்சாகம் (Excitement), கடும் பயம் அல்லது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் அட்ரீனலின் அளவு பெருமளவு உயர்கிறது.

அதீத மன அழுத்தத்தாலோ அல்லது உணர்ச்சி வசப்படுவதாலோ இதயத் தசைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டு, அதன் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறைகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், சரியான சிகிச்சையினால் இதிலிருந்து முழுமையாகக் குணமடைய முடியும்.

சந்தோஷம் என்பது இதயத்திற்கு மருந்து போன்றது. ஆனால், உணர்ச்சிகளை அளவோடு வெளிப்படுத்துவது அவசியம்.  மனநிம்மதி, ஆழ்ந்த தூக்கம், நல்ல உறவுகள், பிரார்த்தனை, தியானம், மன அமைதி, நடைப்பயிற்சி, பிடித்தமான வேலை, இசை மற்றும் இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மகிழ்ச்சி நல்லது... அதே சமயம், திடீர் உணர்ச்சிப் பெருக்கைத் தவிர்த்து, மனதை அமைதியாக வைத்திருப்பதே இதய ஆரோக்கியத்தின் அடித்தளம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...