Skip to main content

Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? 

Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, 'செபோரிக் டெர்மடைடிஸ்' (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது நம் உடல் உற்பத்தி செய்யும் ஒருவித எண்ணெய். இந்த எண்ணெய் நம் உடலில் அதிகமாகச் சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

உணவுப் பழக்கவழக்கங்கள் (அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடியில் எண்ணெய் வைக்கும் பழக்கம் என இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். 

நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதுதான் இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதன் விளைவாக முகப்பருக்கள் வருவதும் குறையும். சருமப் பராமரிப்புக்குச் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது அவசியம்.

சாலிசிலிக் அமிலம் (Salicylic acid), கிளைகாலிக் அமிலம் (Glycolic acid) அல்லது அசிலெயிக் அமிலம் (Azelaic acid) போன்ற அமிலங்கள் கொண்ட ஃபேஸ் வாஷ் (Face wash) பயன்படுத்துவது எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவும். 

பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும்.

ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்ச்சரைசர் (Gel-based moisturizer) மற்றும் சன்ஸ்கிரீன் (Sunscreen) ஆகியவற்றை உங்கள் மகனின் அன்றாட சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றையும் மீறி முகப்பருக்கள் வந்தால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் கிரீம்கள் (Antibiotic creams) அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் (Oral antibiotics) தேவைப்படுகின்றனவா என்று பார்த்துப் பயன்படுத்தலாம். தலைமுடியை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

வாரத்திற்கு 3 முதல் 4 முறை தலைக்குக் குளிக்க வேண்டும். கீட்டோகோனசோல் (Ketoconazole) அல்லது லுலிகோனசோல் (Luliconazole) போன்றவை உள்ள பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் முகமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும், எண்ணெய் சுரப்பும் குறையும், முகப்பருக்கள் வருவதும் பெருமளவு குறையும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...