Skip to main content

தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!

தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது.

ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர்

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது.

தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் கலக்கும் சாக்கடை

மலையில் உற்பத்தியாகி தரையில் தலைகாட்டும் பாபநாசத்தில் இருந்து, கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ஆற்றில் 600-க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சாக்கடைக்குள் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

காங்கிரஸார் போராட்டம்

இது குறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் கூறுகையில், ”பாதாளச் சாக்கடை கழிவு நீர் நேரடியாக நெல்லை கால்வாய், பாளையங் கால்வாய்களின் வழியாக ஆற்றுக்குள் கலக்கிறது. அதனால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது. அந்தத் தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இந்த நீரில் குளிப்பவர்களுக்குக் கூட தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வருங்காலச் சந்ததிக்கு இந்த ஆற்றைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையிலேயே இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆற்றின் தற்போதைய நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்” என்றார்.

தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீர்

இது குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். விரைவில் அந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும். பாதாளச் சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லவிடாமல் தடுத்து சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...