Skip to main content

தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!

தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது.

ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர்

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது.

தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் கலக்கும் சாக்கடை

மலையில் உற்பத்தியாகி தரையில் தலைகாட்டும் பாபநாசத்தில் இருந்து, கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ஆற்றில் 600-க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சாக்கடைக்குள் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

காங்கிரஸார் போராட்டம்

இது குறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் கூறுகையில், ”பாதாளச் சாக்கடை கழிவு நீர் நேரடியாக நெல்லை கால்வாய், பாளையங் கால்வாய்களின் வழியாக ஆற்றுக்குள் கலக்கிறது. அதனால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது. அந்தத் தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இந்த நீரில் குளிப்பவர்களுக்குக் கூட தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வருங்காலச் சந்ததிக்கு இந்த ஆற்றைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையிலேயே இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆற்றின் தற்போதைய நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்” என்றார்.

தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீர்

இது குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். விரைவில் அந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும். பாதாளச் சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லவிடாமல் தடுத்து சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...