Skip to main content

`இங்க கடத்தல் தொழிலா நடக்குது... எவ்வளவு அசிங்கம்?' - கனிமவள லாரிகளை பார்த்து ஆவேசமான அமைச்சர்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அப்போது களியக்காவிளை செக்போஸ்ட் பகுதியில் பத்து சக்கரங்களைக் கொண்ட டாரஸ் லாரிகள் அதிக அளவு கனிமவளங்களுடன் கேரளா நோக்கி பயணிப்பதை கண்டார். உடனே காரில் இருந்து இறங்கி செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸாரிடம், "நீங்க என்ன பண்ணுறீங்க. இதுக்கா உங்களை இங்க உக்கார வைத்திருக்கிறாங்க. தம்பி, எல்லாரையும் தொலைச்சுகட்டிபோடுவேன். எஸ்.பி-யை கூப்பிட்டு எல்லா வண்டிகளையும் லாக் பண்ணுங்க.

கனிமவளம் கடத்தும் லாரிகள்

நான் ஏர்ப்போட்டுல இருந்து வரும்போது ஐம்பது வண்டிகளை பார்த்தேன். பத்து வீலுக்கு மேற்பட்ட வண்டிகள் போகக்கூடாதுண்ணு அரசு ஆர்டர் போட்டிருப்பது தெரியாதா. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீங்க. இங்க கடத்தல் தொழிலா நடக்குது. எவ்வளவு அசிங்கம். எல்லா லாரிகளையும் ஒதுக்கச்சொல்லி சாவிகளை வாங்குங்க" என ஆவேசமானார். பின்னர் எஸ்.பி-யை தொடர்புகொண்டு பேசினார் அமைச்சர் மனோதங்கராஜ். அப்போது அங்கிருந்த 2 லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு சென்றது தெரியவந்து. அந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் ஸ்ரீதர், "வெளி மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகின்றது. அவை முறையான அனுமதிபெற்று வருகின்றனவா, என்பதை கண்காணிக்கவும், வாகனங்களை தணிக்கை செய்யவும் அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி தாசில்தார்கள், போக்குவரத்து அலுவலர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம்

இந்த குழுவினர் ஆய்வு நடத்தி கடந்த வாரத்தில் 4 கனரக வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதித்துள்ளனர். அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து வேறு இடத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்வதை இரவு பகலாக கண்காணிக்க இந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்படும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...