Skip to main content

`இங்க கடத்தல் தொழிலா நடக்குது... எவ்வளவு அசிங்கம்?' - கனிமவள லாரிகளை பார்த்து ஆவேசமான அமைச்சர்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அப்போது களியக்காவிளை செக்போஸ்ட் பகுதியில் பத்து சக்கரங்களைக் கொண்ட டாரஸ் லாரிகள் அதிக அளவு கனிமவளங்களுடன் கேரளா நோக்கி பயணிப்பதை கண்டார். உடனே காரில் இருந்து இறங்கி செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸாரிடம், "நீங்க என்ன பண்ணுறீங்க. இதுக்கா உங்களை இங்க உக்கார வைத்திருக்கிறாங்க. தம்பி, எல்லாரையும் தொலைச்சுகட்டிபோடுவேன். எஸ்.பி-யை கூப்பிட்டு எல்லா வண்டிகளையும் லாக் பண்ணுங்க.

கனிமவளம் கடத்தும் லாரிகள்

நான் ஏர்ப்போட்டுல இருந்து வரும்போது ஐம்பது வண்டிகளை பார்த்தேன். பத்து வீலுக்கு மேற்பட்ட வண்டிகள் போகக்கூடாதுண்ணு அரசு ஆர்டர் போட்டிருப்பது தெரியாதா. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீங்க. இங்க கடத்தல் தொழிலா நடக்குது. எவ்வளவு அசிங்கம். எல்லா லாரிகளையும் ஒதுக்கச்சொல்லி சாவிகளை வாங்குங்க" என ஆவேசமானார். பின்னர் எஸ்.பி-யை தொடர்புகொண்டு பேசினார் அமைச்சர் மனோதங்கராஜ். அப்போது அங்கிருந்த 2 லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு சென்றது தெரியவந்து. அந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் ஸ்ரீதர், "வெளி மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகின்றது. அவை முறையான அனுமதிபெற்று வருகின்றனவா, என்பதை கண்காணிக்கவும், வாகனங்களை தணிக்கை செய்யவும் அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி தாசில்தார்கள், போக்குவரத்து அலுவலர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம்

இந்த குழுவினர் ஆய்வு நடத்தி கடந்த வாரத்தில் 4 கனரக வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதித்துள்ளனர். அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து வேறு இடத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்வதை இரவு பகலாக கண்காணிக்க இந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்படும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...