Skip to main content

ஒன் பை டூ: போதைப்பொருள் விவகாரம்: அமைச்சர் பொன்முடி சொன்னது சரியா?

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களே குட்கா விவகாரத்தில் சிக்கி, அந்த வழக்கு இன்றுவரை நிலுவையிலிருக்கிறது. அதுமட்டுமன்றி போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவேண்டிய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளே போதைப்பொருள் விற்பனைக்கு உறுதுணையாக இருந்ததற்காக இன்னமும் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க இப்படியென்றால், அவர்களுடன் கூட்டணியிலிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, விமான நிலையங்கள் தொடங்கி துறைமுகங்கள் வரைக்கும் தனியாருக்குத் தாரை வார்த்ததன் மூலம், அவற்றையெல்லாம் தடையில்லாமல் போதைப்பொருளைக் கொண்டுவருவதற்கான நுழைவாயில்களாக்கிவிட்டது. தனியார் வசமிருக்கும் அந்தத் துறைமுகங்களில் எத்தனை ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பிடிபடுகின்றன என்பதை நாம் தினமும் செய்திகளில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்... அ.தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் கும்பல்கள் தமிழ்நாடு முழுக்க வேரூன்றி, கிளை பரப்பி பெருமரமாகிவிட்டன. அந்த மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எறியும் வேலையைத் தளபதி ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். கஞ்சா வேட்டை 1.0 ஆரம்பித்து, 4.0 என்று வெற்றிகரமாக கஞ்சா ஒழிப்பைச் செய்துவருகிறது காவல்துறை. தமிழகமெங்கும் கஞ்சா மட்டுமல்லாமல் அனைத்து வகையான போதைப்பொருள் விற்பனையும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க வளர்த்துவிட்டுச் சென்ற போதை எனும் பெருமரத்தை எங்கள் தளபதி வேருடன் பிடுங்கி எறிவார்.’’

பரந்தாமன், செ.கிருஷ்ணமுரளி

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அ.தி.மு.க ஆட்சியையே கைகாட்டிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம் என்பதால் அதை திசைதிருப்பவே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முழுவதும் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், திரும்பும் திசையெங்கும் கள்ளச்சாராயமும், கஞ்சா புழக்கமும்தான் அதிகரித்திருக்கின்றன. ‘கஞ்சா வேட்டை’ என்கிற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா... அ.தி.மு.க ஆட்சியில் கஞ்சா விற்பனை முதல் கள்ளச்சாராய விற்பனை வரை அனைத்தையும் காவல்துறை முற்றிலுமாக ஒடுக்கியிருந்தது. இந்த விடியாத தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், மீதமிருக்கும் காலத்துக்குள் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களைச் சந்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை. ‘அரசியல் பின்புலம்கொண்டவர்களே அதிகாரத்தைப் பயன்படுத்தி கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள்’ என்று எடப்பாடியார் சொன்ன குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மை என்பதால், முதல்வர் ஸ்டாலின் தார்மிகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!’’


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...