Skip to main content

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 14 பேர் பரிதாபாக உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரனை, பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் நேரில் ஆறுதல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசியல் ரீதியாக இவ்விவகாரம் தி.மு.க அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. “தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகிவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ஆளுங்கட்சி பின்புலத்துடன்தான் போலி மதுபானம் விற்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

பிரியன்

``தனக்கு அறிக்கை கேட்க உரிமை இருக்கிறது என காட்டிக்கொள்ளும் ஆளுநருக்கு, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தெரியவில்லையா?” என பத்திரிகையாளர் பிரியன் கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சட்டப்பிரிவு 167-ன் படி அறிக்கை கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதை வைத்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவரது கருத்துக்களை இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

2023-ல் இதுவரை 85,000 வழக்கு பதியப்பட்டுள்ளது. 79 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார், குஜராத்தில் வருடத்திற்கு 4,000 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவு. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதைவிட கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

ஸ்டாலின் - ரவி

நேர்மையான போலீஸ் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். ஏன் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, திடீரென இவ்வளவு பேரை எப்படி கைது செய்தீர்கள் என்றெல்லாம் ஆளுநர் கேட்க முடியாது. கேட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக் பாக்கெட் அடிப்பவர்கள் முதல் செயின் திருடர்களை வரை ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பதிவுகள் இருக்கும். அந்த பதிவுகளை வைத்து காவல்துறை இப்போது கள்ளச்சாராய வழக்கில் கைதுகள் நடந்திருக்கிறது. ஐ.பி.எஸ் படித்த ஆளுநருக்கு காவல் நிலையத்தின் இந்த சாதாரண நடவடிக்கை கூட தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “அறிக்கை கேட்பதற்கு ஆளுநருக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது. அரசும் அறிக்கை அளித்துவிடும் என்றே கருதுகிறேன். தி.மு.க வீசக்கூடிய கரண்டியில் சாதம் இருக்கிறது என்பதால் மோதல்போக்கு இல்லாத அளவில்தான் இவ்விவகாரத்தை கையாள்கிறது. அதேசமயம் மாநில உரிமை சார்ந்த தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை காட்டிக்கொள்ளும் வகையிலும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

ரவீந்திரன் துரைசாமி

முந்தைய முதல்வர்கள் பாணியில் இருந்து ஸ்டாலின் மாறுபட்டு, இதை எப்படி கையாண்டால் ஆட்சிக்கு பிரச்னைகள் குறைவாக வரும் என்பதையும் பார்ப்பார். மற்றபடி ஆளுநர் இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமாட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால், தி.மு.க அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசும் எடுக்காது. கீரியும் பாம்பும் போல சீறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சண்டை வராது” என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...