Skip to main content

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 14 பேர் பரிதாபாக உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரனை, பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் நேரில் ஆறுதல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசியல் ரீதியாக இவ்விவகாரம் தி.மு.க அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. “தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகிவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ஆளுங்கட்சி பின்புலத்துடன்தான் போலி மதுபானம் விற்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

பிரியன்

``தனக்கு அறிக்கை கேட்க உரிமை இருக்கிறது என காட்டிக்கொள்ளும் ஆளுநருக்கு, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தெரியவில்லையா?” என பத்திரிகையாளர் பிரியன் கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சட்டப்பிரிவு 167-ன் படி அறிக்கை கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதை வைத்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவரது கருத்துக்களை இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

2023-ல் இதுவரை 85,000 வழக்கு பதியப்பட்டுள்ளது. 79 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார், குஜராத்தில் வருடத்திற்கு 4,000 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவு. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதைவிட கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

ஸ்டாலின் - ரவி

நேர்மையான போலீஸ் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். ஏன் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, திடீரென இவ்வளவு பேரை எப்படி கைது செய்தீர்கள் என்றெல்லாம் ஆளுநர் கேட்க முடியாது. கேட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக் பாக்கெட் அடிப்பவர்கள் முதல் செயின் திருடர்களை வரை ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பதிவுகள் இருக்கும். அந்த பதிவுகளை வைத்து காவல்துறை இப்போது கள்ளச்சாராய வழக்கில் கைதுகள் நடந்திருக்கிறது. ஐ.பி.எஸ் படித்த ஆளுநருக்கு காவல் நிலையத்தின் இந்த சாதாரண நடவடிக்கை கூட தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “அறிக்கை கேட்பதற்கு ஆளுநருக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது. அரசும் அறிக்கை அளித்துவிடும் என்றே கருதுகிறேன். தி.மு.க வீசக்கூடிய கரண்டியில் சாதம் இருக்கிறது என்பதால் மோதல்போக்கு இல்லாத அளவில்தான் இவ்விவகாரத்தை கையாள்கிறது. அதேசமயம் மாநில உரிமை சார்ந்த தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை காட்டிக்கொள்ளும் வகையிலும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

ரவீந்திரன் துரைசாமி

முந்தைய முதல்வர்கள் பாணியில் இருந்து ஸ்டாலின் மாறுபட்டு, இதை எப்படி கையாண்டால் ஆட்சிக்கு பிரச்னைகள் குறைவாக வரும் என்பதையும் பார்ப்பார். மற்றபடி ஆளுநர் இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமாட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால், தி.மு.க அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசும் எடுக்காது. கீரியும் பாம்பும் போல சீறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சண்டை வராது” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...