Skip to main content

காங்கிரஸின் தேசிய முகமாக பிரியங்கா காந்தி... எழுந்த கோரிக்கை; காத்திருக்கும் தலைமை - பின்னணி என்ன?!

நேரு குடும்பத்தினர் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்... காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆகையால்தான், சீதாராம் கேசரியை தலைவர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தது. சோனியா காந்தி தலைமையில்தான், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி

ஆனால், வயோதிகம் காரணமாக கட்சி நடவடிக்கைகளை சோனியா காந்தி குறைத்துக்கொண்டதாலும், தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததாலும், மல்லிகார்ஜுன கார்கே தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரான பிறகு, இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, தற்போது கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆனாலும், இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்களே இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பதும் கேள்வியாக எழுந்திருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்கிறார்கள். மேலும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி

இந்த நிலையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தியை ‘பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை சமூக சேவகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் எழுப்பியிருக்கிறார்.

ஆச்சார்யா பிரமோத், “பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய ஆளுமையும், மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரமும் கொண்ட ஒரே தலைவர் பிரியங்கா காந்திதான். மக்களின் ஏற்பும், பிரபலமும், நம்பகத்தன்மையும் கொண்ட பிரியங்காவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். எதிர்க் கட்சிகளில் பிரியங்காவைவிட சக்தி மிகுந்த தலைவர்கள் வேறு யாரும் இல்லை. எதிர்க் கட்சிகள் ஓரணியில் இணைந்து பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஓர் ஆன்மிகவாதி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம். இவர், 2014-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். சமீபத்தில் இவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமித் ஷா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்று சொல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரியாங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்கிற கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சுகதா ராய் நிராகரித்திருக்கிறார். “இத்தகைய ஒரு கருத்தை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை. இது குழப்பத்தையே உருவாக்கும். ராகுல் காந்தி என்னுடைய சக எம்.பி-யாக இருந்தவர். ஆனால், பிரியாங்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இருந்ததில்லை.

பிரியங்கா காந்தி

பிரியங்காவைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் இந்திரா காந்தியைப் போன்ற தோற்றம் கொண்டவர் என்று மக்கள் சொல்கிறார்கள். இமாச்சலப்பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற அவர் உதவியிருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் எந்தத் தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை” என்கிறார் சுகதா ராய்.

திருமணமாகி, கணவர், குழந்தைகள், குடும்பம் என்று ஒதுங்கி, அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த பிரியங்கா காந்தி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசப் பொறுப்பாளராக காங்கிரஸால் நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில், கடுமையாக உழைத்தும்கூட, உத்தரப்பிரதேசத்தில் அவரால் காங்கிரஸுக்கு வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. ஆனாலும், சோர்ந்துவிடாமல் அரசியலில் தீவிரமாக இயங்கிவருகிறார்.

ராகுல், பிரியங்கா

உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராஸில் பட்டியலின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ராகுல் காந்தியுடன் ஹத்ராஸ் சென்று, நீதி கேட்டுப் போராடினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த ஆண்டு இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தார் ராகுல் காந்தி. அதனால், இந்த மாநிலங்களில் அவர் பிரசாரத்துக்கு தீவிரமாக செல்லவில்லை.

இரு மாநிலங்களிலும் பிரியங்கா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக வலம்வந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அந்த வெற்றியில் பிரியங்கா காந்தியின் பங்கு முக்கியமானது. தற்போது, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது தீவிரமாக பிரசாரம் செய்தார் பிரியங்கா.

பிரியங்கா காந்தி

தொடர்ச்சியாக அவர் இயங்கினாலும், காங்கிரஸின் தேசிய முகமாக அவர் முன்னிறுத்தப்படவில்லை. பிரியங்கா காந்தி போன்ற ஒருவரை தேசிய அளவிலான தலைவராக உயர்த்துவதற்கான தேவை இருந்தும்கூட, அதற்கான நகர்வுகள் காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை, பிரியங்கா காந்தியை கொண்டு வந்தால், பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் சில கூட்டணி/மாநில கட்சிகள் இப்போதே கூட்டணியை விட்டு விலகும் நிலை வரலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் தருணத்தில், ராகுல் காந்தி வழக்கில், சாதகமான உத்தரவு வராமல் போனால், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தும் முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...