Skip to main content

காங்கிரஸின் தேசிய முகமாக பிரியங்கா காந்தி... எழுந்த கோரிக்கை; காத்திருக்கும் தலைமை - பின்னணி என்ன?!

நேரு குடும்பத்தினர் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்... காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆகையால்தான், சீதாராம் கேசரியை தலைவர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தது. சோனியா காந்தி தலைமையில்தான், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி

ஆனால், வயோதிகம் காரணமாக கட்சி நடவடிக்கைகளை சோனியா காந்தி குறைத்துக்கொண்டதாலும், தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததாலும், மல்லிகார்ஜுன கார்கே தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரான பிறகு, இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, தற்போது கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆனாலும், இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்களே இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பதும் கேள்வியாக எழுந்திருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்கிறார்கள். மேலும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி

இந்த நிலையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தியை ‘பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை சமூக சேவகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் எழுப்பியிருக்கிறார்.

ஆச்சார்யா பிரமோத், “பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய ஆளுமையும், மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரமும் கொண்ட ஒரே தலைவர் பிரியங்கா காந்திதான். மக்களின் ஏற்பும், பிரபலமும், நம்பகத்தன்மையும் கொண்ட பிரியங்காவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். எதிர்க் கட்சிகளில் பிரியங்காவைவிட சக்தி மிகுந்த தலைவர்கள் வேறு யாரும் இல்லை. எதிர்க் கட்சிகள் ஓரணியில் இணைந்து பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஓர் ஆன்மிகவாதி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம். இவர், 2014-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். சமீபத்தில் இவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமித் ஷா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்று சொல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரியாங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்கிற கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சுகதா ராய் நிராகரித்திருக்கிறார். “இத்தகைய ஒரு கருத்தை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை. இது குழப்பத்தையே உருவாக்கும். ராகுல் காந்தி என்னுடைய சக எம்.பி-யாக இருந்தவர். ஆனால், பிரியாங்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இருந்ததில்லை.

பிரியங்கா காந்தி

பிரியங்காவைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் இந்திரா காந்தியைப் போன்ற தோற்றம் கொண்டவர் என்று மக்கள் சொல்கிறார்கள். இமாச்சலப்பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற அவர் உதவியிருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் எந்தத் தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை” என்கிறார் சுகதா ராய்.

திருமணமாகி, கணவர், குழந்தைகள், குடும்பம் என்று ஒதுங்கி, அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த பிரியங்கா காந்தி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசப் பொறுப்பாளராக காங்கிரஸால் நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில், கடுமையாக உழைத்தும்கூட, உத்தரப்பிரதேசத்தில் அவரால் காங்கிரஸுக்கு வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. ஆனாலும், சோர்ந்துவிடாமல் அரசியலில் தீவிரமாக இயங்கிவருகிறார்.

ராகுல், பிரியங்கா

உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராஸில் பட்டியலின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ராகுல் காந்தியுடன் ஹத்ராஸ் சென்று, நீதி கேட்டுப் போராடினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த ஆண்டு இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தார் ராகுல் காந்தி. அதனால், இந்த மாநிலங்களில் அவர் பிரசாரத்துக்கு தீவிரமாக செல்லவில்லை.

இரு மாநிலங்களிலும் பிரியங்கா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக வலம்வந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அந்த வெற்றியில் பிரியங்கா காந்தியின் பங்கு முக்கியமானது. தற்போது, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது தீவிரமாக பிரசாரம் செய்தார் பிரியங்கா.

பிரியங்கா காந்தி

தொடர்ச்சியாக அவர் இயங்கினாலும், காங்கிரஸின் தேசிய முகமாக அவர் முன்னிறுத்தப்படவில்லை. பிரியங்கா காந்தி போன்ற ஒருவரை தேசிய அளவிலான தலைவராக உயர்த்துவதற்கான தேவை இருந்தும்கூட, அதற்கான நகர்வுகள் காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை, பிரியங்கா காந்தியை கொண்டு வந்தால், பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் சில கூட்டணி/மாநில கட்சிகள் இப்போதே கூட்டணியை விட்டு விலகும் நிலை வரலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் தருணத்தில், ராகுல் காந்தி வழக்கில், சாதகமான உத்தரவு வராமல் போனால், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தும் முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...