Skip to main content

ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு... புகைச்சலில் அதிமுக சீனியர்ஸ்?!

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் - ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பலநூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி. இந்த சந்திப்பின்போது, எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், பென்ஜமின், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர். குறிப்பாக, ஆளுநரை சந்திக்க சீனியர்கள் அழைத்து செல்லாதது சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு எதிராக அதிமுக பேரணி

இதுகுறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுநரை நேரில் சந்திக்க எடப்பாடியையும் சேர்த்து 10 பேருக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அமைப்பு செயலாளர் என்ற முறையில் பென்ஜமின், பால கங்காவை அழைத்துச் சென்றிருக்கிறார் எடப்பாடி. அதில் தவறில்லை. ஆனால், சீனியர்களான தம்பிதுரை, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, செம்மலை, பொன்னையன், வளர்மதி ஆகியோரை உடன் அழைத்துச் செல்லாததால், அவர்கள் அப்செட்டாகி விட்டார்கள்.

குறிப்பாக எம்.பி தம்பிதுரை, டெல்லியுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். அவரை ஆளுநர் சந்திப்பில் அழைத்து சென்றிருந்தால், அவரும் சில கருத்துக்களை முன் வைத்திருப்பார். அவரை எடப்பாடி கழட்டிவிட்டுவிடுவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக செல்லூர் ராஜூ தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் மாளிகையிலேயே வெளிப்படுத்தி விட்டாராம். அதேபோலதான், பொன்னையன், செம்மலை ஆகியோர் கடுகடுவெனவே இருந்தனர்.

திமுகவுக்கு எதிராக அதிமுக பேரணி

பெண் என்ற அடிப்படையில் கோகுல இந்திரா அல்லது வளர்மதி ஆகியோரில் ஒருவரையாவது அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இரண்டு பேரையும் எடப்பாடி கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓ.பி.எஸ்-ஸுக்கு மாற்றாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட எல்லா வகையிலும் ஆர்.பி.உதயகுமாரை முன்னிறுத்தி வந்த எடப்பாடி, சமீபத்தில் ஓரம் கட்டுகிறாரோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. கடந்த முறையும் ஆளுநருடான சந்திப்பில் அவரை அழைத்து செல்லவில்லை. இந்த முறையும் அழைத்து செல்லவில்லை. இதனால், அவர் எங்குமே தனது முகத்தை காட்டாமல் அமைதியாகிவிட்டார். இதற்கிடையே, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னை நிச்சயம் எடப்பாடி அழைத்து செல்வார் என்று எண்ணியிருந்தார்கள்போலும். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது." என்றார் விரிவாக.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...