Skip to main content

``ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக்கொண்டார்களே; அதுவே மகிழ்ச்சி" - ப.சிதம்பரம் ஜாலி டாக்

இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவமனை விரிவாக்க பணியின் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்

அப்போது அவர் பேசுகையில், "கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கிறார்கள். என் பாட்டனார் காலத்தில் சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம் 120 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கிறது.

தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், செங்கோட்டை போன்றவைகள் கட்டப்பட்ட காலத்தை விட, அதிநவீன தொழில்நுட்ப வசதி இப்போது இருக்கிறது. தரமான பொருட்களைக் கொண்டு கட்டுவதால்தான் கட்டடங்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன. அரசு ஒப்பந்ததாரர்கள் லாபத்தை ஈட்டலாம் தவறில்லை, ஆனால், தரமான கட்டடங்களை கட்ட வேண்டும்" என்று அரசு ஒப்பந்தரார்களை அதிர வைத்தார். இதை அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் ரசித்தனர்.

ப.சிதம்பரம்

அடுத்து, காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ராஜீவ் காந்தி நினைவு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கறுப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிவித்தது மிகப்பெரிய பிழை, அதை மக்கள் புறக்கணித்தார்கள்.

சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்த பணம் கட்டுமான நிறுவனங்கள், மிகப்பெரிய வணிகர்களிடம் அதிகமாக உள்ளதாகவும் அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டு

மீண்டும் 1000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும், ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்களே, அதுவே மிக்க மகிழ்ச்சி" என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...