Skip to main content

``ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக்கொண்டார்களே; அதுவே மகிழ்ச்சி" - ப.சிதம்பரம் ஜாலி டாக்

இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவமனை விரிவாக்க பணியின் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்

அப்போது அவர் பேசுகையில், "கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கிறார்கள். என் பாட்டனார் காலத்தில் சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம் 120 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கிறது.

தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், செங்கோட்டை போன்றவைகள் கட்டப்பட்ட காலத்தை விட, அதிநவீன தொழில்நுட்ப வசதி இப்போது இருக்கிறது. தரமான பொருட்களைக் கொண்டு கட்டுவதால்தான் கட்டடங்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன. அரசு ஒப்பந்ததாரர்கள் லாபத்தை ஈட்டலாம் தவறில்லை, ஆனால், தரமான கட்டடங்களை கட்ட வேண்டும்" என்று அரசு ஒப்பந்தரார்களை அதிர வைத்தார். இதை அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் ரசித்தனர்.

ப.சிதம்பரம்

அடுத்து, காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ராஜீவ் காந்தி நினைவு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கறுப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிவித்தது மிகப்பெரிய பிழை, அதை மக்கள் புறக்கணித்தார்கள்.

சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்த பணம் கட்டுமான நிறுவனங்கள், மிகப்பெரிய வணிகர்களிடம் அதிகமாக உள்ளதாகவும் அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டு

மீண்டும் 1000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும், ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்களே, அதுவே மிக்க மகிழ்ச்சி" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...