Skip to main content

Posts

Showing posts from March, 2023

``உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா பங்களிப்பு 50% இருக்கும்...” ஆய்வறிக்கை சொல்வதென்ன?

நடப்பு 2023-ம் ஆண்டில், உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு பாதிஅளவுக்கு இருக்கும் என்று, சீனாவை சேர்ந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவா என்ற இடத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் வருடாந்திர அமர்வின்போது, பெய்ஜிங்கை சேர்ந்த அதிகாரபூர்வ சிந்தனைக்குழுவான Boao Forum for Asia (BFA), ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.Boao யு.பி.ஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிக்கவில்லை..! மத்திய அரசு நிறுவனம் விளக்கம்! அந்த அறிக்கையில், `உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆசியா, ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரமாக, 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் உலக வளர்ச்சியில் பாதியளவு பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் கொண்டிருக்கும். நடப்பு 2023-ம் ஆண்டில், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் வேகத்தை, ஆசியப் பொருளாதாரமானது விரைவுபடுத்துகிறது. உலகப் பொருளாதார மந்தநிலையில் ஆசியப் பொருளாதாரம் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும்' என்று `ஆசியப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு ...

முகத்தில் மாற்றம், தாடி, மீசையுடன் வாழும் பெண்; விவாகரத்துக்குப் பின் புதுவாழ்வு!

பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார். மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே என்று மருகினார். மந்தீப் கவுரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார். திருமணமான புதிதில் கவுர் இதனால் தற்போது தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மந்தீப் கவுர், தொடர்ந்து தனது தாடி மற்றும் மீசையை வளர்த்து வருகிறார். அதனை அகற்றவில்லை. மேலும், இப்போது வெளியாள்களைப் பற்றி கவலைப்படாமல் தனது அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். மன அழுத்தத்தை போக்க ஆன்மிகத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி குருத்வாராவிற்கு சென்று வருகிறார். குருசாஹேப் தன்னை ஆசீர்வதிப்பதால் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது தன் சகோதரிகளுடன் சே...

முகத்தில் மாற்றம், தாடி, மீசையுடன் வாழும் பெண்; விவாகரத்துக்குப் பின் புதுவாழ்வு!

பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார். மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே என்று மருகினார். மந்தீப் கவுரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார். திருமணமான புதிதில் கவுர் இதனால் தற்போது தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மந்தீப் கவுர், தொடர்ந்து தனது தாடி மற்றும் மீசையை வளர்த்து வருகிறார். அதனை அகற்றவில்லை. மேலும், இப்போது வெளியாள்களைப் பற்றி கவலைப்படாமல் தனது அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். மன அழுத்தத்தை போக்க ஆன்மிகத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி குருத்வாராவிற்கு சென்று வருகிறார். குருசாஹேப் தன்னை ஆசீர்வதிப்பதால் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது தன் சகோதரிகளுடன் சே...

கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்த எப்படி காரணமாகிறது, கருத்தடைக்கு வேறு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம். மருத்துவர் அபிநயா பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகமா? | மார்பகப் புற்றுநோய் -FAQs மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன...

கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்த எப்படி காரணமாகிறது, கருத்தடைக்கு வேறு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம். மருத்துவர் அபிநயா பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகமா? | மார்பகப் புற்றுநோய் -FAQs மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன...

மக்கள் போராட்டம்; பைடனின் கருத்துக்கு `கறார்' பதிலளித்த பிரதமர்! - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?!

இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்தங்களை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், இஸ்ரேல் போராட்டம் குறித்தும், அந்த நாட்டு பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். பைடனின் இத்தகைய கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், ஜோ பைடனின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி கொடுத்திருப்பதுதான் `டாக் அஃப் தி டவுன்'. நீதித்துறையில் சீர்திருத்தம் - நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம். - நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசுப் பிரதிநிதிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம். - அரசு தலைமை வழக்கறிஞரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால், இஸ்ரேல் அரசு விரும்பும் நபர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. அதில் அரசு வ...

மீண்டும் வெளிவந்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை... சரியும் பிளாக் நிறுவனம்; பதற்றத்தில் பங்குச்சந்தை..!

கடந்த ஜனவரி மாத இறுதி வாரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களைப் பற்றி நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தமது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், பெரும்பாலான அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஜனவரி மாதத்தில் இருந்த விலையோடு ஒப்பிட்டால் உண்மையில் 85% குறைவாக உள்ளதாகவும் தரவுகளுடன் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.சரிவில் அதானி 'அதானிக்கு அதிர்ச்சி வைத்தியம்' - 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை சொல்வது என்ன?! அதானி குழும பங்கு விலை சரிவு..! இந்த ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சில அதானி நிறுவன பங்குகள் 85% வரை அந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு சரிந்தது. குறிப்பாக அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி  பவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை மிக அதிக அளவிலான இறக்கத்தை சந்தித்தது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளி...

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்... மருத்துவர் சரவண பாரதி. வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #Measles என்னென்ன பாதிப்புகள்? ``சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை Heat waves எனக் கூறுவோம். இந்தியாவில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை இந்த வெப்ப அலைகளை உணரலாம். சில சமயத்தில், ஜூலை வரை கூட இது நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வெப்ப அலைகளை இந்தியாவில் பார்க்க முடியும். வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது, நம் உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் உடலின் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும். வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தச் செயல் கடினமானதாக ம...

கார்ட்டூன்

கார்ட்டூன்

மீண்டும் வெளிவந்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை..! சரியும் பிளாக் நிறுவனம்; பதற்றத்தில் பங்குச்சந்தை..!

கடந்த ஜனவரி மாத இறுதி வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களை பற்றி நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தமது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தி உள்ளதாகவும், பெரும்பாலான அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஜனவரி மாதத்தில் இருந்த விலையோடு ஒப்பிட்டால் உண்மையில் 85% குறைவாக உள்ளதாகவும் தரவுகளுடன் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. சரிவில் அதானி 'அதானிக்கு அதிர்ச்சி வைத்தியம்' - 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை சொல்வது என்ன?! அதானி குழும பங்கு விலை சரிவு..! இந்த ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சில  அதானி நிறுவன பங்குகள் 85% வரை அந்த ஆய்வறிக்கைக்கு பிறகு சரிந்தது. குறிப்பாக அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி  பவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை மிக அதிக அளவிலான இறக்கத்தை சந்தித்தது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீ...

"பாலிவுட் அரசியலால் ஹாலிவுட் என்ட்ரி; எதிர்காலத்துக்காகக் கருமுட்டை சேமிப்பு!"- பிரியங்கா சோப்ரா

மாடலாக இருந்து ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தை 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் ‘The Hero: Love Story of a Spy’ என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு பல படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமான நடிகையானார். அதுமட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது ஹாலிவுட் தொடர்களிலும், படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.பிரியங்கா சோப்ரா இந்நிலையில் அவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்த போதிலும் வெளிநாடுகளுக்குச் சென்று ஹாலிவுட்டில் நடித்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.  “பாலிவுட் திரையுலகில் என்னை ஒரு மூலையில் ஒதுக்கினார்கள். சிலர் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அங்குள்ளவர்களுடன் எனக்குப் பிரச்னை இருந்தது. அங்கு நடக்கும் அரசியலிலிருந்து எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அப்போது எனது மேனேஜர் அஞ்சுலா ஆச்சாரியா எனது மியூசிக் வீடியோவை பார்த்து அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கே...

`இதற்கெல்லாம் லாக்டெளனா..?' - கிம் ஜாங் உன், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டும் உத்தரவு போட்டது ஏன்?

உலக அளவில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி எச்சரிக்கை விடும்விதமாக, வல்லரசு நாடுகளையெல்லாம் தன்பக்கம் கவனம் ஈர்க்கச் செய்யும் நாடு வடகொரியா. அதேபோல சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அதை மீறுபவர்களுக்குச் சில நேரங்களில் மரண தண்டனைகூட விதிக்க உத்தரவிடுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.மகளுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உதாரணமாக அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய தந்தையின் நினைவுநாளையொட்டி ஒரு வாரத்துக்கு யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என உத்தரவிட்டார். அதேபோல சமீபத்தில், தன்னுடைய மகளின் பெயரை யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும், அப்படி யாரேனும் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹைசான் (Hyesan) நகரத்துக்கு மட்டும் லாக்டௌன் அறிவித்திருக்கிறார் கிம் ஜாங் உன். கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 10-ம் தேதிக்கு இடையில், ஹைசான் நகரத்திலிருந்து ராணுவம் முழுமையாக வெளியேறியபோது, மார்ச் 7-ம் தேதியன்று 653 தோட்டாக்கள் தொலைந்ததாகக் கூறப்படுகிறது.வடகொரிய அதிபர் கிம் ஜாங்-...

பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது ஆபத்தானதா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 14

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகளை விரிவாகக் கண்டோம். அதன் தொடச்சியை, இந்த வாரமும் பார்ப்போம்… மருத்துவர் மு. ஜெயராஜ் தாய்ப்பால், பசும்பால், பவுடர் பால்; குழந்தைக்கு எது பெஸ்ட்? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 13 பசும்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் அலர்ஜி பசும்பால் கொடுக்கப்படும் ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 7 சதவிகிதத்தினருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனை, பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) என்போம். பசும்பால் புரத ஒவ்வாமை ஏறபடும் குழந்தைகள...

WPL: இந்தப் போட்டிகளை நினைச்சா பெருமையா இருக்கு | Cricketer Aarti Sankaran Interview

கர்நாடகா: லஞ்சப்புகாரில் பாஜக எம்.எல்.ஏ கைது; லோக் ஆயுக்தா அதிரடி - சூடுபறக்கும் அரசியல் களம்

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மடல் விருப்பக்ஷப்பா. இவரின் மகன் பெயர் பிரசாந்த் மடல்; பெங்களூரு குடிநீர் வடிகால் துறையில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் தன்னுடைய அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கியபோது, போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம். தொடர்ந்து எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா வீட்டிலும், பிரசாந்தின் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டில், கட்டுக்கட்டாக, 8.23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏவை A1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது. எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா. விஷயம் பூதாகரமானதை தொடர்ந்து, Karnataka Soaps and Detergents Limited (KSDL) நிறுவனத்தின் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா, தலைமறைவாக இருந்தார்.  தொடர்ந்து கடந்த, 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் பெற்று வெளிவந்தார். அப்போது, அவரின் கிராமத்தில் பா.ஜ.கவினர் மடல் விருப்பக்ஷப்பாவுக்கு ராஜ மரியாதை கொடுத்து...

அமெரிக்கா: குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு; இருவர் படுகாயம் - தீவிர விசாரணையில் போலீஸ்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்டோ கவுன்டியிலுள்ள குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கீர்த்தனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்காக சீக்கியர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரு நபர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது சண்டையாக மாறி, இருவரும் மாறி மாறி சுட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சாக்ரமென்டோ கவுன்டி ஷெரிப் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் (Sacramento County Sheriff’s Office spokesman Sgt. Amar Gandhi), "குருத்வாரா கோயில் வளாகத்தில் இரு ஆண்களுக்கிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இதில், ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய காவல்துறை, "துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த...

அமெரிக்க வங்கித்துறை சரிவு..!பின்வாங்கும் முதலீட்டாளர்கள்... எச்சரிக்கும் பங்குச்சந்தை நிலவரம்!

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாந்தர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிக அளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அமெரிக்க தேர்தலை மனதில் வைத்து அதிக அளவான பணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டும் உள்ளது. இவையெல்லாம் சேர்த்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தது.ஃபெடரல் வங்கிஅமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா? தொடர்ந்து வட்டி உயர்வு..! இதன் காரணமாகக் கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மாதத்துக்கு 0.75% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பதாவது முறையாக 0.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்க விகிதத்தை 2% என்ற அளவுக்கு கீழ் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. எட்டு முறை உயர்த்தப்பட்ட...

`வெரிகோஸ் வெயின்ஸ் உயிரைப் பறிக்காது, ஆனாலும்...' - சென்னையில் விழிப்புணர்வு பேரணி!

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான‌ சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. மருத்துவர் தீபாஸ்ரீ வெரிகோஸ் வெயின் தீர்வு என்ன? காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரிய போகிறது என பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், வெரிகோஸ் வெயின்ஸ் பற்றிய விளக்கம்...

`வெரிகோஸ் வெயின்ஸ் உயிரைப் பறிக்காது, ஆனாலும்...' - சென்னையில் விழிப்புணர்வு பேரணி!

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான‌ சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. மருத்துவர் தீபாஸ்ரீ வெரிகோஸ் வெயின் தீர்வு என்ன? காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரிய போகிறது என பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், வெரிகோஸ் வெயின்ஸ் பற்றிய விளக்கம்...

Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 53. அடிக்கடி நெஞ்சுவலியும் முதுகுவலியும் வருகிறது. ஒவ்வொரு முறையும் அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என பயப்படுகிறேன். மருத்துவரைப் பார்த்தபோது அசிடிட்டி என்று சொல்லி, மருந்துகள் கொடுத்தார். ஆனாலும் அதிலிருந்து முழுமையாக என்னால் மீள முடியவில்லை. அசிடிட்டிக்கும் நெஞ்சுவலிக்கும் என்ன தொடர்பு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா. வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா | சென்னை. உணவுக்குழாயின் அருகில் வால்வு ஒன்று இருக்கும். அதில் கசிவு ஏற்படும்போது இரைப்பையில் சுரக்கும் அமிலமானது எதுக்களித்து வந்து நெஞ்சுவலியையும் முதுகுவலியையும் ஏற்படுத்தலாம். உணவுக்குழாய் என்பது இதயம் துடிப்பதைப் போல மென்மையாக இயங்கிக்கொண்டே இருக்கும். அமிலம் எதுக்களித்து வரும் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த இயக்கம் முறையற்று இருக்கும். அதன் காரணமாக நெஞ்சுவலியை உணர்வார்கள். சாதாரணமாக இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலமானது ரிவர்ஸில் உணவுக்குழாய்க்கு வரும்போது நெஞ்சுவலி வரலாம். ஹார்ட் அட்டாக்கின் காரண...