Skip to main content

`வெரிகோஸ் வெயின்ஸ் உயிரைப் பறிக்காது, ஆனாலும்...' - சென்னையில் விழிப்புணர்வு பேரணி!

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான‌ சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

மருத்துவர் தீபாஸ்ரீ

காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரிய போகிறது என பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், வெரிகோஸ் வெயின்ஸ் பற்றிய விளக்கம் மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.

இதில் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் உள்ளது. சாலை பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள், ஒரு நாளில் பெரும்பாலான நேரம் நின்று கொண்டேதான் இருப்பார்கள். அதிகமாக ஒரே இடத்தில் நிற்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10- 15 காவலர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 60-70% பேருக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிலரின் கால்களில் புண்கள் இருந்தன. ஆனால் அவர்களிடம் கேட்டபோது இது சாதாரண புண்தான்; அதுவாக ஆறிவிடும் என்பது போல கூறினார்கள். மேலும் சிலர், இரவில் அதிகமாக கால்வலி இருப்பதாகவும், ஆனால் அதை எப்படிக் குறைப்பது எனத் தெரியாது என்றெல்லாம் கூறினார்கள். இதன்மூலம், பலருக்கு இப்பிரச்னை இருந்தாலும் அவர்களுக்கு முறையாக அதை எப்படி சரி செய்ய வேண்டும், வராமல் தடுப்பது எப்படி என்பதெல்லாம் தெரியவில்லை. இந்த விழிப்புணர்வு நிகழ்வு மூலம், அவர்களுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறோம்" எனக் கூறினார்.

வெரிகோஸ் வெயின் விழிப்புணர்வு

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றியும் அவர் விளக்கமாக நம்மிடம் பகிர்ந்தார்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்பது காலில் நரம்பு சுற்றிக் கொண்டிருப்பது. காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்படுவதே இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, ஏற்கெனவே குடும்பத்தில் வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பது மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தத்தைச் சேர்க்க வேண்டிய நாளங்களின் வால்வுகள் பாதிப்படையும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. புவி ஈர்ப்பு விசை காரணமாக எல்லா ரத்தமும் பாதத்திலேயே தேங்கத் தொடங்கும்.

வால்வுகள் முறையாக இயங்கும்போது மட்டுமே ரத்தம் சீராக பாதத்திலிருந்து இதயத்துக்குச் செல்லும். அதில் பாதிப்பு வரும் போது ரத்த நாளங்களால் ரத்தத்தை மேலே இதயத்துக்கு அனுப்ப முடியாது. இதன் காரணமாக கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கத் தொடங்கும். அதிகநேரம் ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சில திரவங்கள் கருமையாக மாறும்.

இது அந்தப் பகுதியில் உள்ள சருமத்தின் தன்மையையும் கருமையாக மாற்றும். மேலும் அந்தப் பகுதியை‌ச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். சிலர் கால்களில் சூடாக இருப்பது போல் உணருவார்கள். ரத்தம் தேக்கமடைந்து கால்களில் நிற்பதால் இது போன்ற உணர்வு வரலாம். கால்கள் மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றலாம். இறுதிகட்டமாக அந்த வீக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை புண்களாக மாறும். அந்தப் புண்கள் எளிதில் ஆறாமல் போகலாம்" எனக் கூறினார்.

வெரிகோஸ் வெயின் விழிப்புணர்வு

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகள் பற்றியும் அவர் கூறினார்... ``ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு காவலர்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் வரும்போது, நின்று கொண்டே இருக்காமல் அவ்வப்போது சிறுநடை நடக்கலாம். நடப்பதன் மூலம் கால்களுக்கு கிடைக்கும் அழுத்தத்தால், ரத்தம் தேங்கி நிற்காமல் இதயத்துக்குச் செல்ல அது உதவும். சின்னச் சின்ன கால் அசைவுகளும் முக்கியம்.

அடுத்து, Graded compression Stockings எனப்படும் காலுறைகளை அணியலாம். இந்தக் காலுறைகளில், பாதத்துக்கு அருகில் அழுத்தம் அதிகமாக இருக்கும். மேலே செல்லச்செல்ல முட்டிக்கு அருகில் அழுத்தம் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்தக் காலுறைகள், ரத்த நாளங்கள் ரத்தத்தை இதயத்துக்கு அனுப்புவதில் உறுதுணையாக இருக்கும். அவை ரத்த நாளங்களுக்கு அழுத்தம் தந்து சுருக்கி ரத்தத்தை மேலே அனுப்புவதற்கு உதவும்.

வெரிகோஸ் வெயின் விழிப்புணர்வு பேரணி

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து ஏதாவது செய்து கொண்டிருக்கும்போது கால்களை கீழே தொங்க விடாமல் சிறிய முக்காலி வைத்து அதன் மேல் கால்களை வைத்துக் கொள்ளலாம். தூங்கும் போதும் கால்களுக்கு தலையணை வைத்து உறங்கலாம். இவையெல்லாம் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்" எனக் கூறினார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...