Skip to main content

"பாலிவுட் அரசியலால் ஹாலிவுட் என்ட்ரி; எதிர்காலத்துக்காகக் கருமுட்டை சேமிப்பு!"- பிரியங்கா சோப்ரா

மாடலாக இருந்து ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தை 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் ‘The Hero: Love Story of a Spy’ என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு பல படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமான நடிகையானார். அதுமட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது ஹாலிவுட் தொடர்களிலும், படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.பிரியங்கா சோப்ரா இந்நிலையில் அவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்த போதிலும் வெளிநாடுகளுக்குச் சென்று ஹாலிவுட்டில் நடித்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.  “பாலிவுட் திரையுலகில் என்னை ஒரு மூலையில் ஒதுக்கினார்கள். சிலர் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அங்குள்ளவர்களுடன் எனக்குப் பிரச்னை இருந்தது. அங்கு நடக்கும் அரசியலிலிருந்து எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அப்போது எனது மேனேஜர் அஞ்சுலா ஆச்சாரியா எனது மியூசிக் வீடியோவை பார்த்து அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். பின் அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்றினேன். அடுத்த கட்டத்திற்குச் செல்ல அந்த இசை எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது" என்று கூறியிருக்கிறார்.   ஹாலிவுட் அறிமுகத்துக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக பிரியங்கா சோப்ரா அமெரிக்காவிலேயே தங்கியிருந்து ஆங்கிலப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்தும் வெளிப்படையாகப் பேசிய பிரியங்கா, "எனது தாயார் மது சோப்ராவின் ஆலோசனையின் பேரில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள 30களின் தொடக்கத்தில் எனது கருமுட்டையைச் சேமித்து வைத்தேன். இப்படிச் செய்வதன் மூலம் எனது கரியரில் சுதந்திரமாகக் கவனம் செலுத்த முடியும் என்பதால் செய்தேன்.மகளுடன் பிரியங்கா சோப்ரா நான் இருக்கும் துறையில் எனக்கான இடம் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதோடு யாருடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்யாமல் இருந்தேன். எனவே டாக்டரான எனது அம்மாவின் ஆலோசனையின் பேரில்தான் கருமுட்டையைச் சேமித்து வைத்தேன்.Shaakuntalam: "சமமான சம்பளத்தைக் கொடுக்கவேண்டும். அதற்காக நான் கெஞ்சக்கூடாது!"- சமந்தா நான் எப்போதும் குழந்தைகளை அதிகமாக விரும்புபவள். குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்துகிறேன். எனவேதான் யுனிசெப் அமைப்புடன் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுக்கான தன்னார்வலராகப் பணியாற்றி இருக்கிறேன். பெரியவர்களை விடக் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். எங்கள் பார்ட்டி கூட குழந்தைகள் மற்றும் நாய்களுடன்தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு யார் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளை அழைத்து வரலாம்" என்றார்.பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் இந்நிலையில், பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் இயக்குநர் கரண் ஜோஹர்தான் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அது குறித்து பிரியங்கா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது பாலிவுட் கம்பேக்காக பிரியங்கா சோப்ரா, இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
http://dlvr.it/SlfKFv

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...