Skip to main content

முகத்தில் மாற்றம், தாடி, மீசையுடன் வாழும் பெண்; விவாகரத்துக்குப் பின் புதுவாழ்வு!

பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார்.

மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே என்று மருகினார். மந்தீப் கவுரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்.

திருமணமான புதிதில் கவுர்

இதனால் தற்போது தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மந்தீப் கவுர், தொடர்ந்து தனது தாடி மற்றும் மீசையை வளர்த்து வருகிறார். அதனை அகற்றவில்லை. மேலும், இப்போது வெளியாள்களைப் பற்றி கவலைப்படாமல் தனது அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

மன அழுத்தத்தை போக்க ஆன்மிகத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி குருத்வாராவிற்கு சென்று வருகிறார். குருசாஹேப் தன்னை ஆசீர்வதிப்பதால் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது தன் சகோதரிகளுடன் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்து வரும் மந்தீப் கவுர், தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக முன்னர் பல முறை தன்னைத்தானே அடித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது ஆண்களின் பைக்கை ஓட்டுகிறார் மந்தீப் கவுர். ஆடவர் போல் தலையில் டர்பனும் கட்டிக்கொண்டுள்ளார். இதனால் பஞ்சாப் ஆடவர் போல் மாறிவிட்டார். அவரை பார்க்கும் அனைவரும் அவர் ஆண் என்றே நினைக்கின்றனர். அவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆன்மிகம், விவசாயம் என்று தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதேபோல், இங்கிலாந்திலும் ஹர்னாம் கவுர் என்ற பெண்ணிற்கு முகத்தில் தாடி மீசை வளர ஆரம்பித்தது. அவர் ஆரம்பத்தில் அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று முகத்தில் உள்ள முடிகளை அகற்றிக்கொண்டார். ஆனால் இப்போது அகற்றுவதை விட்டுவிட்டார். அதேபோல், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குத்துப்பறம்பு, கோளயாடு பகுதியைச் சேர்ந்த ஷைஜா என்ற பெண்ணும், தனக்கு வளரும் மீசையுடன் பெருமையாக வாழ்ந்து வருகிறார்.

31 வயதாகும் ஹர்னாம் கவுர் முகத்தில் தாடி மற்றும் மீசையுடன், இயல்பாக வாழ்ந்து வருகிறார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...