Skip to main content

கர்நாடகா: லஞ்சப்புகாரில் பாஜக எம்.எல்.ஏ கைது; லோக் ஆயுக்தா அதிரடி - சூடுபறக்கும் அரசியல் களம்

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மடல் விருப்பக்ஷப்பா. இவரின் மகன் பெயர் பிரசாந்த் மடல்; பெங்களூரு குடிநீர் வடிகால் துறையில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் தன்னுடைய அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கியபோது, போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

தொடர்ந்து எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா வீட்டிலும், பிரசாந்தின் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டில், கட்டுக்கட்டாக, 8.23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏவை A1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது.

எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா.

விஷயம் பூதாகரமானதை தொடர்ந்து, Karnataka Soaps and Detergents Limited (KSDL) நிறுவனத்தின் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா, தலைமறைவாக இருந்தார்.  தொடர்ந்து கடந்த, 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் பெற்று வெளிவந்தார். அப்போது, அவரின் கிராமத்தில் பா.ஜ.கவினர் மடல் விருப்பக்ஷப்பாவுக்கு ராஜ மரியாதை கொடுத்து வரவேற்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

பெயிலில் வந்த எம்.எல்.ஏவுக்கு, பா.ஜ.கவினர் மரியாதை.

இப்படியான நிலையில், நேற்றுடன் நிபந்தனை ஜாமீன் முடிந்ததால், மீண்டும் ஜாமீனுக்கு பதிவு செய்த போது, அதை நீதிமன்றம் ரத்து செய்தது.

எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா கைது.

நேற்று, இரவு, தும்கூரில் இருந்து பெங்களூருவுக்கு மடல் விருப்பக்ஷப்பா காரில் வந்த போது, சந்திரா டோல் கேட் அருகே அவரை தடுத்து நிறுத்திய, லோக் ஆயுக்தா போலீஸார், அவரை கைது செய்தனர். இன்று அல்லது நாளை, நீதிபதி முன்பு எம்.எல்.ஏவை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா கைது.

லஞ்சப்புகாரில் எம்.எல்.ஏ கைதாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரிய அணுகுண்டு வெடித்ததைப்போல, புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த மாதம், ஊழல் புகாரில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஊழல் புகாரில் சிக்கி வருவது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினருக்கு, வரும் தேர்தலுக்கான வலுவான தீனியாக மாறியுள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...