Skip to main content

கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்த எப்படி காரணமாகிறது, கருத்தடைக்கு வேறு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்.

மருத்துவர் அபிநயா

மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும்போது, இது இனப்பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் கர்ப்பப்பையில் கருவைத் தங்கவிடாது. நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இந்த ஹார்மோன் மாத்திரைகள் சற்று வித்தியாசமானவை. இதற்கு நம் உடலில் உள்ள சில திசுக்கள் சாதாரணமாக வினையாற்றினாலும், சில திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்.

ஹார்மோன் மாத்திரைகள் கர்ப்பப்பை, இனப்பெருக்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் வினையாற்றும். மேலும் இனப்பெருக்க உறுப்பு மற்றும் கர்ப்பப்பையை இந்த ஹார்மோன் மாத்திரைகள் பாதுகாக்கும். அதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

அதே நேரம் மார்பக திசுக்களை பொறுத்தவரை அவை இந்த ஹார்மோன் மாத்திரைகளுக்கு எதிர்வினையாற்றும். மேலும் இந்த ஹார்மோன் மாத்திரைகளின் அளவு வேறுபடும் பட்சத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு இது வழிவகுக்கிறது. 20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை பயன்படுத்தலாம். அவையே மருத்துவர்களாலும் பரிந்துரை செய்யப்படுகிறது.

மார்பக புற்றுநோய்

20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை ஓராண்டு வரை கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கருத்தடைக்கு, ஹார்மோன் மாத்திரைகளை தவிர, காப்பர் டி, மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஹார்மோன் ஊசி போன்றவற்றை பயன்படுத்தலாம்" என்றார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ், ``பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் நம் நாடு தான் முதலிடத்தில் இருந்தது. போதிய விழிப்புணர்வு, சிகிச்சை முறை காரணமாக அதன் தாக்கம் இப்போது குறைந்துள்ளது. ஆனால் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 28 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ்

வெளிப்புற காரணிகள், மாசு, உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை புற்றுநோய் காரணிகள் என்றாலும், பெரும்பாலும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது இது உருவாகிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இது பொருந்தும். உடல் பருமன், இயற்கையாக உடலில் உருவாகும் ஹார்மோன் குறைபாடு மற்றும் அதற்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹார்மோன் மாத்திரைகளும் மார்பக புற்றுநோய் உருவாகக் காரணிகளாக உள்ளன.

மிகவும் சிறு வயதில் பூப்படைவதும், 55 வயது வரைக்கும் மாதவிடாய் தொடர்வதும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே உடலில் சுரக்கும் புரோஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக நாள்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவது ஆகியன, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

cancer

புற்றுநோய் கட்டிகளில் ஆரம்ப காலத்தில் வலி இருக்காது. மார்புப் பகுதியில் இத்தகைய கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதலில் ஸ்கேன் மூலம் அந்த கட்டி பற்றி அறிந்து கொண்டு, புற்றுநோய் கட்டிக்கான சாத்தியக்கூறுகள் உண்டென்றால் ஊசி மூலம் FNAC சிகிச்சை செய்யப்படும். அதன் முடிவில் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.

மார்பகப் புற்றுநோய் மிகவும் மெதுவாகப் பரவும் தன்மை உடையது. ஒரு புற்றுநோய் செல் இரண்டாக 100 நாள்கள் எடுக்கிறது. இதன் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்திலும், 6 மாதங்கள் இடைவெளியின்றி சிகிச்சை மேற்கொள்வதன் மூலவும் 100 சதவிகிதம் நோயிலிருந்து மீளலாம்.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை முறை (கீமோதெரபி), ரேடியோதெராப்பி எனும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை முறை மட்டுமே போதுமானது. இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்.

Breast cancer awareness

புற்றுநோய் மட்டும் இன்றி, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களுக்குக் காரணம் நம் உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் மற்றும் அதிகக் கொழுப்பு தான். நாம் உட்கொள்ளும் அரிசி உணவானது உடனடியாகச் செரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உடையது. பெரும்பாலும் அரிசி உணவின் பயன்பாட்டை குறைத்து, சிறுதானிய உணவுகளை உட்கொள்வது நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...