Skip to main content

அமெரிக்க வங்கித்துறை சரிவு..!பின்வாங்கும் முதலீட்டாளர்கள்... எச்சரிக்கும் பங்குச்சந்தை நிலவரம்!

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாந்தர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிக அளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அமெரிக்க தேர்தலை மனதில் வைத்து அதிக அளவான பணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டும் உள்ளது. இவையெல்லாம் சேர்த்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தது.ஃபெடரல் வங்கிஅமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா? தொடர்ந்து வட்டி உயர்வு..! இதன் காரணமாகக் கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மாதத்துக்கு 0.75% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பதாவது முறையாக 0.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது. அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்க விகிதத்தை 2% என்ற அளவுக்கு கீழ் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. எட்டு முறை உயர்த்தப்பட்டபோதும் வட்டி விகிதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. தற்போது பிப்ரவரி மாத நிலவரப்படி பணவீக்க விகிதம் 6% என்று அளவில் உள்ளது. இது ஃபெடரல் வங்கியின் இலக்கைவிட மூன்று மடங்கு அதிகமாகும். ஆனால், அதிகரித்த வட்டி விகிதம் காரணமாக அமெரிக்க வங்கி துறை அதிக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் திவால் ஆகின. இதன் காரணமாக ஃபெடரல் வங்கி திட்டமிட்டபடி வட்டி விகிதங்களை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதன் மூலம் அந்த எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் வெள்ளத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றுமா ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்?! ஃபெடரல் வங்கியின் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் அமெரிக்கா வங்கிகள் ஸ்திர தன்மையுடன் இருப்பதாகவும் தேவையான பணப்புழக்கம் அமெரிக்க வங்கிகளுக்கு கிடைப்பதற்கு ஃபெடரல் வங்கி எப்போதும் துணை நிற்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சந்தை வல்லுநர்களின் கணிப்பின்படி இன்னும் ஒரு முறை மட்டும் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு நீண்ட காலத்துக்கு வட்டி விகிதம் 5.25% நிர்ணயம் செய்யப்படும். பணவீக்க விகிதம் ஃபெடரல் வங்கி எதிர்பார்த்த அளவுக்கு குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படும். பிரிட்டனிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% சென்ற வாரத்தில் உயர்த்தப்பட்டது. நமது நாட்டிலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. பண வீக்கத்துக்கு எதிரான போர் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதைத் தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகித உயர்வு நமக்கு உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது பங்குச் சந்தையும் ஏற்றத்தை சந்திக்கவில்லை. பங்குச் சந்தைகளில் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்த காரணத்தால் பலர் புதிய டீமேட் கணக்குகளைத் தொடங்கி தமது முதலீட்டை மேற்கொண்டனர். உணவுப் பஞ்சம், பொருளாதார நெருக்கடி... தவிக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உலக வங்கி! அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதல் ஆண்டு மிகப்பெரிய லாபம் கிடைத்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான காலகட்டத்தை அவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்தக் காலகட்டங்களில் பங்குச் சந்தையில் ஈடுபட்ட பலர் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாகத் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்று டீமேட் கணக்குகளை மூடி வரும் தனி நபர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. பண வீக்க பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் இதே நிலைதான் சந்தையில் தொடரும் என்பதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
http://dlvr.it/SlbK5n

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...