Skip to main content

மீண்டும் வெளிவந்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை..! சரியும் பிளாக் நிறுவனம்; பதற்றத்தில் பங்குச்சந்தை..!

கடந்த ஜனவரி மாத இறுதி வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களை பற்றி நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தமது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தி உள்ளதாகவும், பெரும்பாலான அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஜனவரி மாதத்தில் இருந்த விலையோடு ஒப்பிட்டால் உண்மையில் 85% குறைவாக உள்ளதாகவும் தரவுகளுடன் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

சரிவில் அதானி

அதானி குழும பங்கு விலை சரிவு..!

இந்த ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சில  அதானி நிறுவன பங்குகள் 85% வரை அந்த ஆய்வறிக்கைக்கு பிறகு சரிந்தது. குறிப்பாக அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி  பவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை மிக அதிக அளவிலான இறக்கத்தை சந்தித்தது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீடு தோல்வியில் முடிவடைந்தது. இது தனிப்பட்ட அதானி நிறுவனத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் மிகப்பெரிய பேசுபொருள் ஆகி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான கருத்துகளை பேசியதற்காக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹிண்டன்பர்க்

இந்தத் தீர்ப்பு காரணமாக அவர் வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அதானி குழும நிறுவனங்களின் ஊழல் பற்றி பேசியதன் காரணமாக சர்வாதிகாரப் போக்கில் அவருடைய மக்களவை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. என்றாலும் ராகுல் காந்தி தொடர்ந்து மக்கள் மன்றத்தில் அதானி குழும நிறுவன மோசடி பற்றி தொடர்ந்து பேசுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. அந்த அளவிற்கு ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை பல்வேறு அதிர்வலைகளை நமது நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்ற வாரம் ஹிண்டர்பர்க் நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் மோசடி குறித்து நீண்ட ஆய்வறிக்கை வெளியிட இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திக்கு பிறகு பங்கு சந்தைகளில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரங்களில் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூஸ் வங்கி திவால் ஆனதை தொடர்ந்து ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை ஒரு இந்திய வங்கியை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த வங்கிகளின் நிலை குறித்தோ இருக்கும் என்று வதந்தி பரவியது.

பிளாக் நிறுவனம்

பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி..

இந்த நிலையில் ஹிண்டர்பர்க் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சியின் பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி குறித்த நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை இந்திய நிறுவனங்களை பற்றி இல்லாத காரணத்தினால் சந்தையில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிளாக் நிறுவனம் 2009 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்ட போது அது ஸ்கொயர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சிறிய மற்றும் கைக்கு அடக்கமான கிரெடிட் கார்டு ரீடரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கு அமெரிக்க வியாபாரிகளிடம் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்பட்டது. யு பி ஐ பேமெண்ட் வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து இந்த நிறுவனம் இந்தத் துறையில் கால் பதித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெயரையும் 2021 ஆம் ஆண்டு பிளாக் என்று மாற்றியது. மாதத்திற்கு தற்போது  51 மில்லியன்  யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி வியாபாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு இடையே பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.

இந்த நிறுவனம் போலியாக பலர் இந்த செயலியை உபயோகிப்பதாக கணக்கை உயர்த்தி காட்டியும், நிறுவனத்தின் செலவினங்களை குறைத்து அதிக லாபம் ஈட்டியதாகவும் போலியான கணக்குகளை தயாரித்துள்ளதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

பிளாக் நிறுவனம்

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்ததாகவும், இந்த நிறுவனத்தின் போலி கணக்காளர்களில் பலரை தொடர்பு கொண்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு போலியாக நிறுவனத்தின் பங்கு விலையை ஏற்றி ஜாக் டோர்சி ஒரு பில்லியன் டாலர் ( இந்திய பண மதிப்பில் 800 கோடி ரூபாய்) மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிளாக் நிறுவனம் முழுவதுமாக மறுத்துள்ளது. அதானி குழும நிறுவனங்களும் தற்போது வரை இந்த ஆய்வறிக்கையை மறுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பிளாக் நிறுவனத்தின் பங்கு விலை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிக அதிகபட்சமாக 100 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...