Skip to main content

பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது ஆபத்தானதா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 14

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகளை விரிவாகக் கண்டோம். அதன் தொடச்சியை, இந்த வாரமும் பார்ப்போம்…

மருத்துவர் மு. ஜெயராஜ்

பசும்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் அலர்ஜி

பசும்பால் கொடுக்கப்படும் ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 7 சதவிகிதத்தினருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனை, பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) என்போம். பசும்பால் புரத ஒவ்வாமை ஏறபடும் குழந்தைகளில், வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல்வலியால் தொடர்ந்து அழுதல் (colic), சரும அரிப்பு, உதடு, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

பசும்பாலில் காணப்படும் பீட்டா - லேக்டோகுளோபுலின் (Beta- Lactoglobulin) என்னும் புரதம் தான், 76% பசும்பால் ஒவ்வாமை ஏற்படக் காரணமாகும். இந்த பீட்டா-லேக்டோகுளோபுலின் புரதம் தாய்ப்பாலில் காணப்படுவதில்லை. பசும்பால் புரத ஒவ்வாமை காணப்படும் குழந்தைகளில் ஒரு வயதுக்குப் பிறகு 50% பேருக்கும், 5 வயதிற்குள் 80-90% பேருக்கும் அந்த ஒவ்வாமை முற்றிலும் குணமாகிவிடுகிறது. எனவே தான், குழந்தைகளுக்கு ஒரு வயதான பிறகு, பசும்பால் கொடுக்கத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறோம்.

தாய்ப்பாலில் உள்ள ஆல்பா-லேக்டால்புமின்

தாய்ப்பாலில் உள்ள முக்கிய புரதம் ஆல்பா- லேக்டால்புமின் (Alpha- Lactabumin) ஆகும். ஆல்பா- லேக்டால்புமின், தாய்ப்பாலில் லாக்டோஸ் (Lactose) உருவாக முக்கியப் பங்காற்றுகிறது. கால்சியம் மற்றும் துத்தநாகத்துடன் (Zinc) ஆல்பா- லேக்டால்புமின் இணைந்து, முக்கிய மினரல்கள் உறிஞ்சப்படுவதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. ஆல்பா- லேக்டால்புமின், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தாய்ப்பாலின் புரதத்தில் 20- 25% என அதிகம் நிறைந்திருக்கும் ஆல்பா-லேக்டால்புமின், பசும்பாலின் புரதத்தில் 2- 5% என்ற அளவிலேயே காணப்படுகிறது.

பசும்பால் புரதத்தால் குழந்தைக்கு ஏற்படும் அலர்ஜி

பவுடர் பால் (Formula Milk)

இவ்வாறு, தாய்ப்பாலுக்கும் பசும்பாலுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதாலும், பசும்பாலினால் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாலும், தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் பயன்பெறும் வகையில், தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று கண்டுபிடிக்கும் முயற்சி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

1838-ம் ஆண்டில், ஜெர்மன் விஞ்ஞானி ஜோஹன் ஃப்ரான்ஸ் சைமன் (Johann Franz Simon) முதன்முறையாக தாய்ப்பால் மற்றும் பசும்பாலின் வேதியியல் பகுப்பாய்வை ஆய்வு செய்து வெளியிட்டார். இவர்தான், பசும்பால் தாய்ப்பாலைவிட அதிகளவு புரதம் மிகுந்தது எனவும், பசும்பாலிலுள்ள புரதமே, பசும்பால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்துகிறதென்றும் கண்டறிந்தார். இவரின் ஆய்வுகளே, பிறகு, பவுடர் பால் உருவாக்கத்திற்கு அடிப்படையாக விளங்கியது.

1865-ம் ஆண்டில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (Justus Von Liebig), பசும்பால், கோதுமை மற்றும் பொட்டாசியம் பைகார்பனேட்டை கொண்டு, முதன்முதலில் வணிக நோக்கத்துடன், பவுடர் பாலை கொண்டு வந்தார். பின்பு, பல்வேறு ஆய்வுகள் மூலம், பவுடர் பால் நீண்ட நாள்கள் கெடாமலிருப்பது நிரூபிக்கப்பட்டது. தாய்ப்பாலைப் போன்ற சத்துகள் நிறைந்திருப்பதற்கு பவுடர் பாலில் சத்துகள் செறிவூட்டப்பட்டு, பல்வேறு மாறுதலுக்குப் பிறகு தற்போதைய நிலையை அடைந்துள்ளது.

மூன்று விதமான ஃபார்முலா மில்க் உள்ளன. அவை...

* பசும்பாலிலிருந்து உருவாக்கப்பட்டது

* சோயா பாலிலிருந்து உருவாக்கப்பட்டது

* ஸ்பெஷல் ஃபார்முலா மில்க்

ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக்

பசும்பாலில் இருந்து உருவாக்கப்பட்ட ஃபார்முலா மில்க்

உலகம் முழுதும் பெரும்பாலான ஃபார்முலா மில்க் பவுடர் பசும்பாலில் இருந்து உருவாக்கப்படுகிறது. எனினும், பசும்பாலில் தாய்ப்பாலைவிட அதிகளவு கொழுப்பு மற்றும் புரதம் இருப்பதால், கொழுப்பு பிரிக்கப்பட்டு (skimmed), மற்றும் நீர் சேர்க்கப்பட்டு, தாய்ப்பாலுக்கு ஒப்பான கொழுப்பு மற்றும் புரத அளவு எட்டப்படுகிறது. மேலும் தாய்ப்பாலிற்கு நிகரான வைட்டமின் மற்றும் இதர சத்துகளின் அளவை அடைய, கூடுதலாக வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் இரும்புச்சத்து சேர்க்கப்படுகின்றன.

சோயா பாலில் இருந்து ஃபார்முலா மில்க்

சோயா பாலில் இருந்து உருவாக்கப்பட்ட ஃபார்முலா மில்க், கேலக்டோசீமியா (Galactosemia), பிறவி லேக்டேஸ் குறைபாடு (Congenital Lactase deficiency) போன்ற மரபணு நோய்கள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்பெஷல் ஃபார்முலா மில்க்

பசும்பால் புரத ஒவ்வாமை உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு, பசும்பாலில் தயாரிக்கப்பட்ட பவுடர் பாலைக் கொடுக்கும்போது, ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படுமென்பதால், இவர்களுக்கு பிரத்யேகமாக ஸ்பெஷல் ஃபார்முலா மில்க் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா மில்க், தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா மில்க் உபயோகம், வணிகரீதியாக அதிகரித்த காரணத்தால், தாய்ப்பால் கொடுக்கும் அளவு உலக அளவில் வெகுவாக குறைந்தது. Infant Milk Substitutes, Feeding bottles, and Infant Foods (IMS act 1992, amended in 2003)-ன் படி, 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு எவ்வித உணவையும் வணிகரீதியாக விளம்பரப்படுத்தக்கூடாது; ஃபார்முலா மில்க் தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எவ்வித ஸ்பான்சர்ஷிப்பும் செய்யக்கூடாது.

பால் பவுடர் விளம்பரம்

ஃபார்முலா மில்க், தாய்ப்பாலுக்கு எப்போதும் மாற்றில்லை. தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு போதுமாக இல்லை அல்லது குழந்தைக்கு சில மரபணு நோய் காரணமாக தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தி இருந்தால் மட்டுமே ஃபார்முலா மில்க் தொடங்க வேண்டும்.

இவ்வாறு, மருத்துவர் அறிவுறுத்தலால் ஃபார்முலா மில்க் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கு, பவுடர் பாலை கலக்கும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பவுடர் பாலை பாலாடையில் ஏன் கொடுக்க வேண்டும், புட்டிப்பால் ஏன் கொடுக்கக் கூடாது, தாய்ப்பால் தானம் என்றால் என்ன போன்றவை குறித்து, அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக அலசுவோம்.

பராமரிப்போம்…


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...