Skip to main content

``உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா பங்களிப்பு 50% இருக்கும்...” ஆய்வறிக்கை சொல்வதென்ன?

நடப்பு 2023-ம் ஆண்டில், உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு பாதிஅளவுக்கு இருக்கும் என்று, சீனாவை சேர்ந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவா என்ற இடத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் வருடாந்திர அமர்வின்போது, பெய்ஜிங்கை சேர்ந்த அதிகாரபூர்வ சிந்தனைக்குழுவான Boao Forum for Asia (BFA), ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.Boao யு.பி.ஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிக்கவில்லை..! மத்திய அரசு நிறுவனம் விளக்கம்! அந்த அறிக்கையில், `உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆசியா, ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரமாக, 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் உலக வளர்ச்சியில் பாதியளவு பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் கொண்டிருக்கும். நடப்பு 2023-ம் ஆண்டில், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் வேகத்தை, ஆசியப் பொருளாதாரமானது விரைவுபடுத்துகிறது. உலகப் பொருளாதார மந்தநிலையில் ஆசியப் பொருளாதாரம் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும்' என்று `ஆசியப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு முன்னேற்றம்' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Boao Forum for Asia Annual Conference 2023 (BFA 2023)மாறிவரும் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 வணிகத் துறைகள்..! இந்த ஆண்டு உலக வளர்ச்சியில் பாதி பங்களிப்பை சீனாவும் இந்தியாவும் மட்டுமே வழங்கும் எனவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு 1 சதவிகித அதிகரிப்பும் ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கான உற்பத்தியில் தோராயமாக 0.3 சதவீதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆசியாவின் பிற பகுதிகளும் உலக வளர்ச்சியில் கால் பங்கு அளவுக்கு பங்களிப்பு செய்யக்கூடும் என்று, வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SlmK38

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...