Skip to main content

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம்.

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.  

எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச்சுரப்பிற்கு முக்கியக் காரணமாகும். எனவே, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் அல்சரைக் குறைக்க உதவும். வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது, தண்ணீர் அல்லது சில பழச்சாறுகளைக் குடிப்பதால் அந்த அமிலம் நீர்த்துப்போய் (Dilute), வயிறு மேலும் புண்ணாகாமல் தடுக்கப்படும்.

அல்சர் பாதிப்புள்ளவர்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, பாட்டில் பானங்கள், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுரக் குடிநீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.

அல்சர் பாதிப்புள்ளவர்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, பாட்டில் பானங்கள், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுரக் குடிநீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்களும் இவற்றைக் குடித்தால் அல்சர் வரக்கூடும். 

ஏற்கெனவே அல்சர் உள்ளவர்கள் குடித்தால், புண்ணின் மீது எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்தால் எப்படி எரியுமோ, அதேபோல வயிற்றின் உள்ளேயும் கடுமையான எரிச்சல் ஏற்படும். எனவே, சிட்ரஸ் (புளிப்புச் சுவை கொண்ட) பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்ற பழச்சாறுகளைக் குடிப்பதில் தவறில்லை.

பழச்சாறுகள் அல்சரைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.  முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே அல்சரை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார்.

பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...