Doctor Vikatan: வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவது என்பது யாருக்குமே பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்படுது இதயநலலைப் பாதிக்குமா.... இதற்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இப்படிச் சொல்லப்படுவதை ஒரேயடியாகத் தவறான கருத்து என ஒதுக்க முடியாது. மாறாக, இதன் பின்னணியில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உடற்பயிற்சிகள் செய்யும்போதும், ஸ்ட்ரெஸ் அளவு கூடுதலாகத்தான் இருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அந்த நிலையில் மாரடைப்புக்கான ரிஸ்க் ஓரளவு இருக்கும். இது ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புகள் உள்ளவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, எல்லோருக்கும் அல்ல. வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் சரியல்ல. ஏற்கெனவே இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்கள...