Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், ஹார்ட் அட்டாக் வரலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவது என்பது யாருக்குமே பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்படுது இதயநலலைப் பாதிக்குமா....  இதற்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இப்படிச் சொல்லப்படுவதை ஒரேயடியாகத் தவறான கருத்து என ஒதுக்க முடியாது. மாறாக, இதன் பின்னணியில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உடற்பயிற்சிகள் செய்யும்போதும், ஸ்ட்ரெஸ் அளவு கூடுதலாகத்தான் இருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அந்த நிலையில் மாரடைப்புக்கான ரிஸ்க் ஓரளவு இருக்கும்.

இது ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புகள் உள்ளவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, எல்லோருக்கும் அல்ல. வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் சரியல்ல. ஏற்கெனவே இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ஆகும்போது அந்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. 

இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ஆகும்போது அந்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு.

எனவே, முடிந்தவரை ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முயலலாம். மாரடைப்பு ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகளான புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்ப்பதும், அவ்வப்போது பரிசோதனைகள் செய்து பார்ப்பதும், நோய்க்கு முறையான சிகிச்சை எடுப்பதும் மிக முக்கியம்.

முறையான தூக்கத்தின் அவசியத்தை இந்தத் தலைமுறையினர் உணர்வதே இல்லை. நள்ளிரவு வரையிலோ, விடியும்வரையிலோ விழித்திருந்துவிட்டு, பிறகு ஏழெட்டு மணி நேரம் தூங்கினால் போதும் என நினைக்கிறார்கள். இது தவறு.  சரியான நேரத்துக்குச் சரியான அளவு தூங்க வேண்டியது அவசியம்.

இரவில் தாமதமாகத் தூங்குவது தவிர்க்கப்பட வேண்டும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...