Skip to main content

Posts

Doctor Vikatan: 3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்... தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் 3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint) மாறினால், உடனடியாக கண் மருத்துவரிடம் (Ophthalmologist) அழைத்துச் சென்று காட்ட வேண்டும். கண் மருத்துவர், குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, ஏதேனும் பவர் குறைபாடு (Refractive Error) உள்ளதா என்று பார்ப்பார். கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா  (Hypermetropia) எனப்படும்  தூரப்பார்வையோ  அல்லது  சிதறல் பார்வையோ  (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார். அப்படி  ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த  அறிவுறுத்துவார்.  மாறுகண்ணோடு தொடர்புட...

Doctor Vikatan: மாத்திரை எடுக்காவிட்டால் அரிப்பு, தடிப்பு, மார்பில் அழுத்தம்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: நான் கடந்த 13 வருடங்களாக மூன்று நாள்களுக்கு ஒருமுறை moteclc என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். நான் மத்திரை எடுக்கவில்லை என்றால் உடலில் ஆங்காங்கே சிறிய தடிப்புகளுடன் நமைச்சல் வருகிறது. மார்புக்குள் அழுத்தமும் லேசான மூச்சு வாங்குதலும் ஏற்படுவதையும் உணர்கிறேன். இது என்ன பிரச்னை... இதற்கு என்ன தான் தீர்வு? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   மருத்துவர் கே. பாஸ்கர் உங்கள் கேள்வியிலிருந்துரு, உங்களுக்கு 'கிரானிக் ஸ்பான்டேனியஸ் அர்டிகேரியா' (Chronic Spontaneous Urticaria) எனப்படும் பிரச்னை இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். அதாவது விட்டுவிட்டு வரும் நாள்பட்ட படைநோய் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை மான்டெக் எல்சி எனப்படும் மாத்திரையைச் சாப்பிடுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மாத்திரை படை நோய், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்காகக் கொடுக்கப்படும். இந்த மாத்திரையைச் சாப்பிட்டும் உங்களுக்குப் பிரச்னை தீரவில்லை என்றால், நீங்கள் அனுபவம் வாய்ந்த சருமநல மருத்துவரை (MD Dermatologist) அணுக...

Doctor Vikatan: மாத்திரை எடுக்காவிட்டால் அரிப்பு, தடிப்பு, மார்பில் அழுத்தம்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: நான் கடந்த 13 வருடங்களாக மூன்று நாள்களுக்கு ஒருமுறை moteclc என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். நான் மத்திரை எடுக்கவில்லை என்றால் உடலில் ஆங்காங்கே சிறிய தடிப்புகளுடன் நமைச்சல் வருகிறது. மார்புக்குள் அழுத்தமும் லேசான மூச்சு வாங்குதலும் ஏற்படுவதையும் உணர்கிறேன். இது என்ன பிரச்னை... இதற்கு என்ன தான் தீர்வு? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   மருத்துவர் கே. பாஸ்கர் உங்கள் கேள்வியிலிருந்துரு, உங்களுக்கு 'கிரானிக் ஸ்பான்டேனியஸ் அர்டிகேரியா' (Chronic Spontaneous Urticaria) எனப்படும் பிரச்னை இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். அதாவது விட்டுவிட்டு வரும் நாள்பட்ட படைநோய் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை மான்டெக் எல்சி எனப்படும் மாத்திரையைச் சாப்பிடுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மாத்திரை படை நோய், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்காகக் கொடுக்கப்படும். இந்த மாத்திரையைச் சாப்பிட்டும் உங்களுக்குப் பிரச்னை தீரவில்லை என்றால், நீங்கள் அனுபவம் வாய்ந்த சருமநல மருத்துவரை (MD Dermatologist) அணுக...

Doctor Vikatan: முதல் குழந்தை பிறந்த பிறகும் மலட்டுத்தன்மை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 37.  நான்கு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். ஆனால், கரு தங்கவில்லை.  இந்நிலையில் என் தோழி ஒருத்தி, முதல் குழந்தை பிறந்த பிறகும்கூட மலட்டுத்தன்மை எனப்படும் குழந்தையின்மை பிரச்னை பாதிக்கலாம் என்கிறாள். ஒருமுறைகூட கருத்தரிக்கவே முடியாத நிலையைத்தானே மலட்டுத்தன்மை என்போம்... எனக்கு இரண்டாவது குழந்தையைக் கருத்தரிப்பதில் உள்ள சிக்கலையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இதை விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி உங்கள் தோழி சொன்னது மிகவும் சரியானதுதான். இதை 'செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி' (Secondary Infertility) என்று சொல்வோம். செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி என்பது ஏற்கெனவே ஒருமுறை எளிதாகக் கருத்தரித்து குழந்தைப் பேறு அடைந்த தம்பதியினருக்கு, இரண்டாவது முறை கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறிப்பது. ஒரு வருடம் முயற்சி செய்தும் இரண்டாவது முறை கருத்தரிக்க இயலவில்லை என்றால், அதுவும் 'செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி' எ...

Doctor Vikatan: முதல் குழந்தை பிறந்த பிறகும் மலட்டுத்தன்மை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 37.  நான்கு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். ஆனால், கரு தங்கவில்லை.  இந்நிலையில் என் தோழி ஒருத்தி, முதல் குழந்தை பிறந்த பிறகும்கூட மலட்டுத்தன்மை எனப்படும் குழந்தையின்மை பிரச்னை பாதிக்கலாம் என்கிறாள். ஒருமுறைகூட கருத்தரிக்கவே முடியாத நிலையைத்தானே மலட்டுத்தன்மை என்போம்... எனக்கு இரண்டாவது குழந்தையைக் கருத்தரிப்பதில் உள்ள சிக்கலையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இதை விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி உங்கள் தோழி சொன்னது மிகவும் சரியானதுதான். இதை 'செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி' (Secondary Infertility) என்று சொல்வோம். செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி என்பது ஏற்கெனவே ஒருமுறை எளிதாகக் கருத்தரித்து குழந்தைப் பேறு அடைந்த தம்பதியினருக்கு, இரண்டாவது முறை கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறிப்பது. ஒரு வருடம் முயற்சி செய்தும் இரண்டாவது முறை கருத்தரிக்க இயலவில்லை என்றால், அதுவும் 'செகண்டரி இன்ஃபெர்டிலிட்டி' எ...

Doctor Vikatan: 60 வயதில் முகம், கழுத்தில் மருக்கள்... நீக்க முடியாத நிலையில் என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு  நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன. டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. 'ஸ்கின் டேக்' (Skin Tag) என்று சொல்லப்படும் மருக்கள், நமது உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்திறன் (Insulin Resistance) காரணமாக ஏற்படுகின்றன. மருத்துவ மொழியில் இவற்றை 'ஆக்ரோகார்டன்ஸ்' (Acrochordons) என்று  சொல்வோம். இது வருங்காலத்தில் நமக்குச் சர்க்கரை நோய் (Sugar) வரப்போவதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். நமது சருமத்தில் ஏற்படும் தடிமன் (Skin Thickening) என்ற செயல்முறையினால்தான் கழுத்துப் பகுதியில் கருமை நிறம் மற்றும் மருக்கள் போன்றவை தோன்றுகின்றன. பலரும் இதனை வைரஸ் தொற்றினால் (Viral Etiology) ஏற்படுவதாகக் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால், வைரஸ் தொற்றி...

Doctor Vikatan: 60 வயதில் முகம், கழுத்தில் மருக்கள்... நீக்க முடியாத நிலையில் என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு  நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன. டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. 'ஸ்கின் டேக்' (Skin Tag) என்று சொல்லப்படும் மருக்கள், நமது உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்திறன் (Insulin Resistance) காரணமாக ஏற்படுகின்றன. மருத்துவ மொழியில் இவற்றை 'ஆக்ரோகார்டன்ஸ்' (Acrochordons) என்று  சொல்வோம். இது வருங்காலத்தில் நமக்குச் சர்க்கரை நோய் (Sugar) வரப்போவதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். நமது சருமத்தில் ஏற்படும் தடிமன் (Skin Thickening) என்ற செயல்முறையினால்தான் கழுத்துப் பகுதியில் கருமை நிறம் மற்றும் மருக்கள் போன்றவை தோன்றுகின்றன. பலரும் இதனை வைரஸ் தொற்றினால் (Viral Etiology) ஏற்படுவதாகக் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால், வைரஸ் தொற்றி...