Skip to main content

Doctor Vikatan: 60 வயதில் முகம், கழுத்தில் மருக்கள்... நீக்க முடியாத நிலையில் என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு  நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன.

டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

'ஸ்கின் டேக்' (Skin Tag) என்று சொல்லப்படும் மருக்கள், நமது உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்திறன் (Insulin Resistance) காரணமாக ஏற்படுகின்றன.

மருத்துவ மொழியில் இவற்றை 'ஆக்ரோகார்டன்ஸ்' (Acrochordons) என்று  சொல்வோம். இது வருங்காலத்தில் நமக்குச் சர்க்கரை நோய் (Sugar) வரப்போவதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

நமது சருமத்தில் ஏற்படும் தடிமன் (Skin Thickening) என்ற செயல்முறையினால்தான் கழுத்துப் பகுதியில் கருமை நிறம் மற்றும் மருக்கள் போன்றவை தோன்றுகின்றன. பலரும் இதனை வைரஸ் தொற்றினால் (Viral Etiology) ஏற்படுவதாகக் குழப்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், வைரஸ் தொற்றின் காரணமாகவும் மருக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, இவை இரண்டையும் சரியாகப் பிரித்தறிந்து, கண்டறிவதற்கு முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

மருவின் அளவு, அது இருக்கும் விதம் மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மருவின் அளவு, அது இருக்கும் விதம், மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) என்ற சிகிச்சை முறையில் வெப்ப ஆற்றல் (Heat Energy) மூலம் மருக்கள் அகற்றப்படும். எக்சிஷன் (Excision) என்ற முறையில் மருக்கள் சாதாரணமாக வெட்டி அகற்றப்படும். லேசர் (Laser) மூலமும் அகற்றலாம். கிரையோதெரபி (Cryotherapy) என்ற சிகிச்சையில் திரவ நைட்ரஜனை (Liquid Nitrogen) பயன்படுத்தி, மருக்கள் அகற்றப்படும்.

மருக்களைக் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை இருப்பதால் உடலுக்கு எந்தவித பாதிப்போ அல்லது ஆபத்தோ ஏற்படாது.

இருப்பினும், கழுத்தில் சங்கிலி (Chain) அணியும்போது அதில் மாட்டி புண் ஏற்பட்டாலோ, உராய்வு காரணமாக ஏற்படும் அசௌகர்யம் ஏற்பட்டாலோ, தோற்றம் காரணமாகவோ சிலர் அவற்றை அகற்றிக்கொள்கிறார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...