Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான். அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும...