Skip to main content

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!

இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக அதிக தலசீமியா சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடினர். அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். 

அப்போலோ
அப்போலோ

தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான இரத்தச்சோகையையும், வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் மருத்துவத் தலையீடும், சிகிச்சையும்  அளிக்காவிட்டால், இந்நிலை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் உறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் தீவிர உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

இந்தியாவில் சுமார் 1–1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் வாழ்ந்து வரும் நிலையில், இந்தியா உலகின் மிக அதிக தலசீமியா பாதிப்பைக் தொடர்ந்து சுமந்து வருகிறது. கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000–15,000 குழந்தைகள் இந்நோயுடன் பிறக்கின்றனர். சுமார் 4.2 கோடி இந்தியர்கள் பீட்டா-தலசீமியா மரபணுவைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல், கேரியர் ஸ்கிரீனிங், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் மீது இந்த பாதிப்பு ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தை உணர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மேம்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) திட்டங்கள், விழிப்புணர்வு முயற்சிகள், ஆரம்பகால நோய் கண்டறிதல், விரிவான நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளுக்கான குழந்தை இரத்தவியல் மற்றும் தலசீமியா சிகிச்சையை தீவிரமாக வலுப்படுத்தி வருகின்றன.  

இந்தத் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்துடன் இணைந்து, 'தலசீமியா பால் சேவா யோஜனா' (டிபிஎஸ்ஒய்) முன்முயற்சியின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைப் பெற ஆதரவளித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நான்காம் கட்டத்தில் இருக்கும் இத்திட்டம், இந்தியா தழுவிய சிகிச்சை அணுகுமுறையின் மூலம் 'தலசீமியா மேஜர்' மற்றும் 'சிவியர் அப்லாஸ்டிக் அனிமியா' கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் முக்கியச் சுகாதார அணுகல் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 

அப்போலோ
அப்போலோ

அப்போலோதலசீமியா மேஜர் பாதிப்புள்ள பல குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மட்டுமே தற்போதுள்ள ஒரே குணப்படுத்தும் சிகிச்சை விருப்பமாகும். அப்போலோவின் சிறப்பு குழந்தை இரத்தவியல் மற்றும் பிஎம்டி உள்கட்டமைப்பு மூலம், தகுதியுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, கொடையாளர் பொருத்த மதிப்பாய்வு, மருத்துவப் பரிசோதனை, மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், முறையான சிகிச்சை ஆதரவு ஆகியவை சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை மேம்படுத்த வழங்கப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனை இதுவரை 500-க்கும் மேற்பட்ட தலசீமியா எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளதுடன், இத்திட்டத்தின் மூலம் 93% தலசீமியா இல்லாத வாழ்நாள் விகிதத்தை எட்டியுள்ளது. முழுமையான தகுதியுள்ள கொடையாளர்கள் இல்லாத குழந்தைகளுக்கு ஹாப்லோ-ஐடென்டிக்கல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட புதுமையான சிகிச்சை முறைகளை அப்போலோ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இது இந்த அரிய இரத்தக் கோளாறை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குக் குணப்படுத்தும் சிகிச்சை கிடைப்பதை மேலும் மேம்படுத்துகிறது. 

“இந்த நோயை முன்னிறுத்தி, Dr. Preetha Reddy கூறுகையில், ‘தலசீமியா இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அமைதியாக பாதித்து வருகிறது. இருப்பினும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. ஆரம்பத்திலேயே பரிசோதனை, சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை கிடைத்தால், பல குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற முடியும்.

அப்போலோவில், மருத்துவ சேவை என்பது மருத்துவமனைகளின் எல்லையைத் தாண்டிய ஒரு சமூகப் பொறுப்பு என நாங்கள் நம்புகிறோம். மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் ஒரே நோக்கத்துடன் இணையும் போது தான் உண்மையான மாற்றம் உருவாகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகளை அதிகமானோருக்கு கொண்டு சேர்க்கவும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் Coal India Limited வழங்கிய ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அப்போலோ
அப்போலோ

வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு அவர்களின் உதவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் பல நிறுவனங்கள் தலசீமியா குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழும் உரிமையும் கிடைக்க வேண்டும்’ என்றார்.”

இந்த நிகழ்வில் பேசிய தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை நலவியல் மற்றும் இரத்தவியல் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ரேவதி ராஜ் அவர்கள் இவ்வாறு கூறினார், "தலசீமியா என்பது குழந்தையை மட்டுமல்ல, முழு குடும்பத்தின் உணர்ச்சியையும், நிதி ரீதியான நல்வாழ்வையும் பாதிக்கிறது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான வாய்ப்புகள் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். இன்று, எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒவ்வொரு தலசீமியா வெற்றியாளரின் துணிச்சலையும் நாங்கள் கொண்டாடுகிறோம்." 

தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை இரத்தவியல் ஆலோசகர் டாக்டர் ரம்யா U, அவர்கள் மேலும் கூறியதாவது, “தலசீமியா என்பது வாழ்நாள் முழுவதுமான ஒரு மருத்துவ நிலை மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு சவாலான பயணமாகும். தாமதமான நோய் கண்டறிதல், குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவற்றால், பல குழந்தைகள் இன்றும் வழக்கமான இரத்த மாற்றத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ உதவும் வகையில் விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், சரியான நேரத்தில் தலையீடுகளை மேற்கொள்வதிலும், மேம்பட்ட சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் இது போன்ற முன்முயற்சிகள் முக்கியமானவை.” 

தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கரண் பூரி அவர்கள் கூறியதாவது, “அப்போலோவில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலசீமியா கண்டறியப்பட்டு நிர்வகிக்கப்படும் விதத்தில் ஒரு படிப்படியான ஆனால் அர்த்தமுள்ள மாற்றத்தைக் காண்கிறோம். அதிகரித்த விழிப்புணர்வு, ஆரம்பகால தலையீடு, மேம்படுத்தப்பட்ட ஸ்கிரீனிங் பரிசோதனைகள், சிறப்பு குழந்தை இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான அணுகல் ஆகியவை, அதிகமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இரத்த மாற்றத்தைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. இன்று தலசீமியாவிலிருந்து மீண்டவர்கள் அதிக நம்பிக்கையுடனும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதைக் காண்பது குடும்பங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிகுந்த ஊக்கமளிக்கிறது. மேலும் இது தொடர்ச்சியான விழிப்புணர்வையும், சரியான நேர சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

அப்போலோ
அப்போலோ

இந்த நிகழ்வில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் ஊக்கமளிக்கும் கலந்துரையாடல்கள், நோயாளிகளின் பயணங்கள் ஆகியவை இடம்பெற்றன. இதில் குழந்தைகள் வெறும் நோயாளிகளாகப் பார்க்கப்படாமல், துணிவு, மனஉறுதி, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளங்களாகக் கொண்டாடப்பட்டனர்.

இந்தியாவில் தலசீமியா தொடர்பான சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்தவும், சுகாதாரச் சுமையைக் குறைக்கவும் சுகாதார நிறுவனங்கள், சிஎஸ்ஆர் கூட்டாளர்கள் மற்றும் அரசு ஆதரவு திட்டங்கள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த முன்முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது. தலசீமியாவைக் கடந்து வரும் குடும்பங்களுக்கு, சரியான நேரத்தில் கண்டறியப்படும் நோய் பாதிப்பு, நிதி உதவி, சிறப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள்  ஆகியவை எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தக் கதைகள் பிரதிபலிக்கின்றன.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...