Skip to main content

Posts

புதுச்சேரி: தேர்வை நிறுத்தச் சொன்ன பாஜக-வினர்... `வெளியே போ' என எதிர்த்த பெற்றோர்கள்

தமிழக எம்.பி ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலியாக இதுவரை 5 தமிழக அரசுப் பேருந்துகள், இரண்டு தனியார் கல்லூரிகளின் மாணவர் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பயணியர் பேருந்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த் அறிவிப்பின் தொடர்ச்சியாக இன்று ஒருசில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அதில் உப்பளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளி, 1 முதல் 10-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துவிட்டு +1 மற்றும் +2 மாணவிகளுக்கு மட்டும் இன்று காலாண்டு தேர்வு நடத்தியது. பா.ஜ.கவினரை வெளியேற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் அதை கேள்விப்பட்டு தனது ஆதரவாளர்களுடன் அந்த பள்ளிக்குள் நுழைந்த முதலியார்பேட்டை பா.ஜ.க பிரமுகர் வெற்றிச்செல்வன் என்பவர், தேர்வை நிறுத்தும்படி கூறினார். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட 500-க்கும் மேற்பட்...

`மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்' - 2024 ஆண்டை குறிப்பிட்டு எச்சரிக்கும் அண்ணாமலை

திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்தை விமர்சித்த காரணத்துக்காக, கோவை பாஜக மாவட்டத் தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து கோவை சிவனந்தாகாலனி பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அடுத்து என்னப் பிரச்னையை கிளப்பலாம் என அறிவாலய தலைவர்கள் ரூம் போட்டு யோசிக்கின்றனர். பாஜக ஆர்ப்பாட்டம் ``சுய விளம்பரத்துக்குச் செய்தாலும் நடவடிக்கை எடுங்கள், ஆனால்..!" - வானதி சீனிவாசன் ஒருபக்கம் ஆ.ராசா, ஒருபக்கம் பயங்கரவாதிகள், காவல்துறை அடக்குமுறைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். தந்தை பெரியாரின் மரண சாசனம் புத்தகத்தை ராசா மேற்கோள் காட்டுகிறார். அதே புத்தகத்தில் பக்கம் 21இல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் பற்றி பேசியுள்ளார். ‘மனைவியை கூட கொடுத்து ஓட்டு வாங்குவார்கள்.’ என பெரியார் சொல்லியுள்ளார். இதைப்பற்றியும் ராசா பேச வேண்டும். திராவிட மாடல் என்பதற்கு இதுதான் விளக்கம். கேரளா மலப்புரத்தில் 90% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. அங்கும் என்.ஐ.ஏ கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு ஐ.பி.சி குறித்...

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? உங்கள் பணத்தை திருடும் `பலே' வைரஸ்... உஷார்!

SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்.. டெக்னாலஜி எந்த அளவுக்கு நம்முடைய வேலைகளை எளிமையாக்கியிருக்கிறதோ அதே நேரம் பல சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக இப்போது எல்லாமே மொபைல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் நம்மை ஏமாற்றுவதற்கு என்றே பல ஹேக்கர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கிங் 1.25 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை! - சாஃப்ட்வேர் ஹேக்கிங் மூலம் அதிரவைத்த இளைஞர் இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினமாம். ...

Doctor Vikatan: கொரோனா தடுப்பூசி, ஃப்ளு தடுப்பூசிக்கு இடையே எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்?

Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பிறந்து 6 மாதங்களைக் கடந்த குழந்தை முதல், யார் வேண்டுமானாலும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், நீரிழிவு, இதயநோய்கள், ஆட்டோஇம்யூன் நோய்கள் உள்ளவர்கள் அவசியம் ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள், ஃப்ளு தடுப்பூசியில் சேர்க்கப்படும் கெமிக்கல்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள், ஆபத்தான அலர்ஜி பாதிப்ப...

சென்னை: அமைச்சர் சேகர்பாபு சகோதரர் தற்கொலை!: போலீஸார் விசாரணை

அமைச்சர் சேகர்பாபு அண்ணன் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பி.கே.சேகர்பாபு. இவர் அண்ணன் பெயர் தேவராஜ், சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தேவராஜ் தேவராஜ் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவராஜ் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கீழ்பாக்கம் ஆயிஷா மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் ராஜபாளையம்: திமுக எம்.எல்.ஏ மணல் கொள்ளைக்கு உடந்தையா? - சர்ச்சை ஆடியோவும், விளக்கமும்!

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்னர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு? “அந்தந்த நேரங்களில் கண்டனம் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களை தொடந்து தலைக்குணிவுக்கு ஆளாக்கி வருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்க இருக்கிறது. இதை சாதாரண வீரமணியோ அல்லது அவர் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படிதான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என மார்தட்டி கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும் போதுதான் அதை அம்பலப்படுத்துகிறோம்.” இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருந்துதானே குறிப்பிட்டிருக்கிறார்? “நாம் இப்போது மனு...

Karunanidhi Pen memorial: சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துமா? - காரசார விவாதம்