Skip to main content

Doctor Vikatan: கொரோனா தடுப்பூசி, ஃப்ளு தடுப்பூசிக்கு இடையே எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்?

Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பிறந்து 6 மாதங்களைக் கடந்த குழந்தை முதல், யார் வேண்டுமானாலும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், நீரிழிவு, இதயநோய்கள், ஆட்டோஇம்யூன் நோய்கள் உள்ளவர்கள் அவசியம் ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

6 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள், ஃப்ளு தடுப்பூசியில் சேர்க்கப்படும் கெமிக்கல்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள், ஆபத்தான அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், முன்பு ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

இவை தவிர நரம்புகளை பாதிக்கும் 'குலியன் பாரி சிண்ட்ரோம்' பிரச்னை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி ஃப்ளு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம். 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள், 50 வயதுக்கு மேலானவர்கள், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், நரம்பியல் பாதிப்பு உள்ளவர்கள், ரத்தம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், உதாரணத்துக்கு ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் போன்றோர் அவசியம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

Vaccination

பொதுவாக ஒரு தடுப்பூசிக்கும் இன்னொரு தடுப்பூசிக்கும் இடையில் 4 வார இடைவெளி இருக்குமாறு அறிவுறுத்துவோம். ஆனால் ஃப்ளு தடுப்பூசியையும் கொரோனா தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். இரண்டையும் அப்படிப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதற்கான ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை என்பதால் ஒரே நேரத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...