Skip to main content

`மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்' - 2024 ஆண்டை குறிப்பிட்டு எச்சரிக்கும் அண்ணாமலை

திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்தை விமர்சித்த காரணத்துக்காக, கோவை பாஜக மாவட்டத் தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து கோவை சிவனந்தாகாலனி பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அடுத்து என்னப் பிரச்னையை கிளப்பலாம் என அறிவாலய தலைவர்கள் ரூம் போட்டு யோசிக்கின்றனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்

ஒருபக்கம் ஆ.ராசா, ஒருபக்கம் பயங்கரவாதிகள், காவல்துறை அடக்குமுறைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். தந்தை பெரியாரின் மரண சாசனம் புத்தகத்தை ராசா மேற்கோள் காட்டுகிறார். அதே புத்தகத்தில் பக்கம் 21இல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் பற்றி பேசியுள்ளார். ‘மனைவியை கூட கொடுத்து ஓட்டு வாங்குவார்கள்.’ என பெரியார் சொல்லியுள்ளார். இதைப்பற்றியும் ராசா பேச வேண்டும். திராவிட மாடல் என்பதற்கு இதுதான் விளக்கம்.

கேரளா மலப்புரத்தில் 90% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. அங்கும் என்.ஐ.ஏ கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு ஐ.பி.சி குறித்தோ, சி.ஆர்.பி.சி பற்றி என்ன தெரியும். நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். முதலமைச்சர்  சி.ஆர்.பி.சி படித்தாரா இல்லையா என தெரியாது. நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன்  11 ஆண்டுகள்.. 5,000 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளேன் ஆக்குவேர் அணியாக சட்டம் தெரியும்.

பாஜக ஆர்ப்பாட்டம்

முதல்வர் தினசரி கண்ணாடியில் அவரின் முகத்தை பார்த்து அவரே 'நான் கடவுள்' என சொல்கிறார். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர்களுக்கு பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பவர்கள் தான் கிச்சன் கேபினட்களாக உள்ளனர். பெண் மேயர்களை, திமுக அமைச்சர்கள் தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல அடிமையாக நடத்துகின்றனர். பட்டியலின மக்கள் குறித்து தொடர்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ்.பாரதியை ஏன் கைது செய்யவில்லை. பெண்களை பார்த்து, ஓ.சியில் பயணிப்பதாக சொல்கிறார் பொன்முடி. நீங்கள் தான் ஓ.சியில் பிறந்து.. ஓ.சியில் ஆட்சி நடத்துகின்றீர்கள்.

தமிழக முதல்வரும், கேரளா முதல்வரும் கேடிக்கள். பினராயி விஜயன் தங்க கடத்தல் கே.டி. இவர்களுக்குள் டீல் உள்ளது. 70 ஆண்டுகளாக உடையாத பரம்பிக்குளம் அணை மதகுகள் உடைந்து 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகியுள்ளது. திருப்பூருக்கு எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் பிரச்னை வெடிக்கும். சிறுவாணியில் இருந்து கொடுக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. உங்களுக்கும், விஜயனுக்கும் என்னதான் உடன்பாடு. பொதுவாக மனிதர்களுக்கு முதுகெலும்பு நேராகத்தான் இருக்கும். திமுக அமைச்சர்களுக்கு மட்டும் 90% வளைந்தே இருக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

எப்போதும் குனிந்து கும்பிடு போடும் கோவை பொறுப்பு அமைச்சர் டாஸ்மாக் தொடங்கி சோலார் வரை அனைத்திலும் கமிஷன் அடிக்கிறார். மின்சார கட்டணம் முதல் கட்சி பதவி தேர்தல் வரை அனைத்திலும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறார். கோவையின் வளத்தை கொள்ளையடித்து, அதை கோபாலபுரத்துக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

முதல்வர் நாத்து நட வேண்டும் என்றால் நவ இந்தியாவிற்கு வர வேண்டும்...எங்கள் நிர்வாகிகள் மீது கைவைத்த காவல்துறையை பார்த்து சொல்கிறேன், திடீரென்று உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தாலோ, ஓய்வு பெறும்போது பி.எஃப் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்றாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடந்தாலும் நாங்கள் பொறுப்பில்லை.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். அடுத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை முதல்வரின் செயல்தான் முடிவு செய்யும். நல்லபடியாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தி முடியுங்கள். நாங்கள்.எதற்கும் தயாராக இருக்கிறோம் என முதல்வரிடம் சொல்லி கொள்கிறோம்” என்றார்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...