Skip to main content

`மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்' - 2024 ஆண்டை குறிப்பிட்டு எச்சரிக்கும் அண்ணாமலை

திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்தை விமர்சித்த காரணத்துக்காக, கோவை பாஜக மாவட்டத் தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து கோவை சிவனந்தாகாலனி பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அடுத்து என்னப் பிரச்னையை கிளப்பலாம் என அறிவாலய தலைவர்கள் ரூம் போட்டு யோசிக்கின்றனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்

ஒருபக்கம் ஆ.ராசா, ஒருபக்கம் பயங்கரவாதிகள், காவல்துறை அடக்குமுறைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். தந்தை பெரியாரின் மரண சாசனம் புத்தகத்தை ராசா மேற்கோள் காட்டுகிறார். அதே புத்தகத்தில் பக்கம் 21இல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் பற்றி பேசியுள்ளார். ‘மனைவியை கூட கொடுத்து ஓட்டு வாங்குவார்கள்.’ என பெரியார் சொல்லியுள்ளார். இதைப்பற்றியும் ராசா பேச வேண்டும். திராவிட மாடல் என்பதற்கு இதுதான் விளக்கம்.

கேரளா மலப்புரத்தில் 90% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. அங்கும் என்.ஐ.ஏ கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு ஐ.பி.சி குறித்தோ, சி.ஆர்.பி.சி பற்றி என்ன தெரியும். நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். முதலமைச்சர்  சி.ஆர்.பி.சி படித்தாரா இல்லையா என தெரியாது. நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன்  11 ஆண்டுகள்.. 5,000 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளேன் ஆக்குவேர் அணியாக சட்டம் தெரியும்.

பாஜக ஆர்ப்பாட்டம்

முதல்வர் தினசரி கண்ணாடியில் அவரின் முகத்தை பார்த்து அவரே 'நான் கடவுள்' என சொல்கிறார். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர்களுக்கு பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பவர்கள் தான் கிச்சன் கேபினட்களாக உள்ளனர். பெண் மேயர்களை, திமுக அமைச்சர்கள் தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல அடிமையாக நடத்துகின்றனர். பட்டியலின மக்கள் குறித்து தொடர்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ்.பாரதியை ஏன் கைது செய்யவில்லை. பெண்களை பார்த்து, ஓ.சியில் பயணிப்பதாக சொல்கிறார் பொன்முடி. நீங்கள் தான் ஓ.சியில் பிறந்து.. ஓ.சியில் ஆட்சி நடத்துகின்றீர்கள்.

தமிழக முதல்வரும், கேரளா முதல்வரும் கேடிக்கள். பினராயி விஜயன் தங்க கடத்தல் கே.டி. இவர்களுக்குள் டீல் உள்ளது. 70 ஆண்டுகளாக உடையாத பரம்பிக்குளம் அணை மதகுகள் உடைந்து 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகியுள்ளது. திருப்பூருக்கு எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் பிரச்னை வெடிக்கும். சிறுவாணியில் இருந்து கொடுக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. உங்களுக்கும், விஜயனுக்கும் என்னதான் உடன்பாடு. பொதுவாக மனிதர்களுக்கு முதுகெலும்பு நேராகத்தான் இருக்கும். திமுக அமைச்சர்களுக்கு மட்டும் 90% வளைந்தே இருக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

எப்போதும் குனிந்து கும்பிடு போடும் கோவை பொறுப்பு அமைச்சர் டாஸ்மாக் தொடங்கி சோலார் வரை அனைத்திலும் கமிஷன் அடிக்கிறார். மின்சார கட்டணம் முதல் கட்சி பதவி தேர்தல் வரை அனைத்திலும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறார். கோவையின் வளத்தை கொள்ளையடித்து, அதை கோபாலபுரத்துக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

முதல்வர் நாத்து நட வேண்டும் என்றால் நவ இந்தியாவிற்கு வர வேண்டும்...எங்கள் நிர்வாகிகள் மீது கைவைத்த காவல்துறையை பார்த்து சொல்கிறேன், திடீரென்று உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தாலோ, ஓய்வு பெறும்போது பி.எஃப் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்றாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடந்தாலும் நாங்கள் பொறுப்பில்லை.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். அடுத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை முதல்வரின் செயல்தான் முடிவு செய்யும். நல்லபடியாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தி முடியுங்கள். நாங்கள்.எதற்கும் தயாராக இருக்கிறோம் என முதல்வரிடம் சொல்லி கொள்கிறோம்” என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...