Skip to main content

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்னர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு?

“அந்தந்த நேரங்களில் கண்டனம் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களை தொடந்து தலைக்குணிவுக்கு ஆளாக்கி வருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்க இருக்கிறது. இதை சாதாரண வீரமணியோ அல்லது அவர் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படிதான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என மார்தட்டி கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும் போதுதான் அதை அம்பலப்படுத்துகிறோம்.”

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருந்துதானே குறிப்பிட்டிருக்கிறார்?

“நாம் இப்போது மனுஸ்மிருதிப்படியா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லது அந்த நூல் பாடத்திட்டங்களில் ஏதும் இருக்கிறதா... அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்து, பெரியவர்கள் ஏதாவது சொல்லி இருந்திருப்பார்கள். அன்றைக்கு அது பொருந்தக்கூடியதாக இருந்திருக்கும். அதையே இன்றைக்கு வரைக்கும் சொல்லி ஏன் மக்கள் உணர்ச்சியையும், இந்துக்களிடையே பிரிவினையையும் தூண்ட வேண்டும்?.”

ஆ.ராசா

ஆ.ராசா வைக்கும் வாதங்களுக்கு ‘விவாதிக்கலாம்’ என்று அழைப்பு விடும்போது, அதை எதிர்கொள்ளாமல் காவல்துறையில் புகார் அளிப்பதெல்லாம், எங்கு விவாதத்துக்குப் போனால் தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்தினாலா?

“விவாதிக்க எங்கள் இந்து மதம்தான் கிடைத்ததா. இது முட்டாள்தனமில்லையா. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற விவாதத்துக்கு வராமல் மதத்தை வைத்து விவாதிக்க அழைப்பது அசிங்கமாக இல்லையா.  தி.மு.க-வில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்களே, `இந்துக்கள் பெற்ற மகன் விபச்சாரியின் மகன்' என்று சொன்னால் என்ன நியாயம். இதை போய் விவாதிக்க வெட்கமாக இருக்காதா. சூடு சொரணை உள்ளவன் விவாதிப்பானா. தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து முன்பு இவர்கள் பேசியதை எல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு மக்கள் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டார்கள்.”

நரேந்திர மோடி, அமித் ஷா

தமிழ்நாட்டில் பா.ஜ.க ரூ.100 கோடி நிதி வசூலிக்கப் போவாதாக செய்திகள் வெளியாகிறதே?

“நிதி வசூல் என்பது எல்லா கட்சிக்கும் பொதுவானது. நிதி என்பது கட்சியின் செயல்பாட்டுக்கு  மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கும் தேவைப்படுகிறது. 100 கோடி ரூபாய் என்பது இலக்கு இல்லை. நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு மாவட்டங்களில் கட்டடங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே அதற்கான நிதி திரட்டும் பணியாக இருக்கலாம். அவ்வாறு வசூல் செய்யும் நிதி, ‘நிதி வசூல் கமிட்டி’ மூலமே பெறப்படும். அதற்கென பொருளாளர் இருக்கிறார். நிதியை மீறி அநீதியாகவும் சில கட்சிகள் நிதி வசூல் செய்கிறார்கள். அப்படி இல்லாமல் முறையான கணக்கு வழக்குகளோடு பா.ஜ.க நிதி வசூல் செய்து வருகிறது.”

அண்ணாமலை

`மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் கட்சியை வளர்க்காமல், விளையாட்டு போட்டிகள் என்று நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள்’ என்று உங்கள் கட்சியினர் சிலரே விமர்சிக்கிறார்களே?

“ஓட்டு வாங்குவோம் என்பது முக்கியம் கிடையாது. நண்பர்களாக நெருங்கி வரும் போதுதானே திட்டங்கள் பற்றி சொல்ல முடியும். நட்பு வட்டத்தில் அவர்களைக் கொண்டு வருவதற்கு விளையாட்டு நிச்சயம் பயன்படும். இளைஞர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைமீது மிகப்பெரிய ஈர்ப்பில் இருக்கிறார்கள். ஒதுங்கி நின்று க்ரேசில் இருப்பவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம். அதன் ஒரு பகுதியாக கபடி போட்டி நடத்தியிருக்கிறோம். திரும்பாத இளைஞர்களை இன்று பா.ஜ.க பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்போகிறது. அதனால் பெரிய மாற்றத்தை தமிழ்நாடு பார்க்கும்.”

சரத்குமார்

எத்தனையோ பேரை பா.ஜ.க-வில் இணைக்கிறீர்கள். உங்களின் உறவுக்காரர் சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் கார்டு கொடுக்கப் போகிறீர்கள்?

“வந்தால் நிச்சயம் வரவேற்போம்... அவர் தனியாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும்போது நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது.”

ராகுல் காந்தி

`சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1,000 சதுர கிலோ மீட்டர் இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி’ என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?

“இதை ராகுல் காந்தி சொல்வதுதான் வேடிக்கை. பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நம் எல்லையில் சீனாவின் அத்துமீறலை துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் இந்தியா, சீனா எல்லையில் போர் மூண்டுவிடுமா என்று உலகமே உற்று நோக்கியது. அப்போது சீன தூதர்கள் இருவர் ராகுல் காந்தியைப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அதை மறுத்த ராகுல், அவர்கள் சீன இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு ஒப்புக்கொண்டார். எனவே இந்த தேசத்தின் துரோக பிம்பம்தான் ராகுல். காங்கிரஸ்காரர்களைப் போல் எல்லை பிரச்னையிலோ, தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கோ பா.ஜ.க அரசு என்றும் `லவ் லெட்டர்' எழுதாது. துணிவான நடவடிக்கையே இருக்கும்.”

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வில் பா.ஜ.க, இ.பி.ஸ் பக்கமா, ஓ.பி.எஸ் பக்கமா?

“இது குறித்து, ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்று தலைவர் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறார். சீக்கிரம் அவர்கள் பிரச்னை எல்லாம் முடியும். அப்போது இது பற்றி கேள்விக்கு பதில் கிடைக்கும்.”

முடியும் என்று உறுதியாக சொல்கிறீர்கள். எப்படி பா.ஜ.க தலையிட்டு முடித்து வைக்கப் போகிறதா?

“தி.மு.க கூட இப்படி ஒரு பழி போடாது. அப்படி எல்லாம் ஏதும் கிடையாது. எங்கள் திட்டத்துக்கான வேலை, அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி  ஓடிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கமிட்டி, மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வது என பரபரப்பாக இருக்கிறோம். எனவே எங்கள் இலக்கை அடையவே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதன் பலன் வரும் தேர்தல்களில் தெரியும்.”


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...