Skip to main content

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்னர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு?

“அந்தந்த நேரங்களில் கண்டனம் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களை தொடந்து தலைக்குணிவுக்கு ஆளாக்கி வருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்க இருக்கிறது. இதை சாதாரண வீரமணியோ அல்லது அவர் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படிதான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என மார்தட்டி கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும் போதுதான் அதை அம்பலப்படுத்துகிறோம்.”

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருந்துதானே குறிப்பிட்டிருக்கிறார்?

“நாம் இப்போது மனுஸ்மிருதிப்படியா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லது அந்த நூல் பாடத்திட்டங்களில் ஏதும் இருக்கிறதா... அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்து, பெரியவர்கள் ஏதாவது சொல்லி இருந்திருப்பார்கள். அன்றைக்கு அது பொருந்தக்கூடியதாக இருந்திருக்கும். அதையே இன்றைக்கு வரைக்கும் சொல்லி ஏன் மக்கள் உணர்ச்சியையும், இந்துக்களிடையே பிரிவினையையும் தூண்ட வேண்டும்?.”

ஆ.ராசா

ஆ.ராசா வைக்கும் வாதங்களுக்கு ‘விவாதிக்கலாம்’ என்று அழைப்பு விடும்போது, அதை எதிர்கொள்ளாமல் காவல்துறையில் புகார் அளிப்பதெல்லாம், எங்கு விவாதத்துக்குப் போனால் தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்தினாலா?

“விவாதிக்க எங்கள் இந்து மதம்தான் கிடைத்ததா. இது முட்டாள்தனமில்லையா. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற விவாதத்துக்கு வராமல் மதத்தை வைத்து விவாதிக்க அழைப்பது அசிங்கமாக இல்லையா.  தி.மு.க-வில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்களே, `இந்துக்கள் பெற்ற மகன் விபச்சாரியின் மகன்' என்று சொன்னால் என்ன நியாயம். இதை போய் விவாதிக்க வெட்கமாக இருக்காதா. சூடு சொரணை உள்ளவன் விவாதிப்பானா. தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து முன்பு இவர்கள் பேசியதை எல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு மக்கள் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டார்கள்.”

நரேந்திர மோடி, அமித் ஷா

தமிழ்நாட்டில் பா.ஜ.க ரூ.100 கோடி நிதி வசூலிக்கப் போவாதாக செய்திகள் வெளியாகிறதே?

“நிதி வசூல் என்பது எல்லா கட்சிக்கும் பொதுவானது. நிதி என்பது கட்சியின் செயல்பாட்டுக்கு  மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கும் தேவைப்படுகிறது. 100 கோடி ரூபாய் என்பது இலக்கு இல்லை. நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு மாவட்டங்களில் கட்டடங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே அதற்கான நிதி திரட்டும் பணியாக இருக்கலாம். அவ்வாறு வசூல் செய்யும் நிதி, ‘நிதி வசூல் கமிட்டி’ மூலமே பெறப்படும். அதற்கென பொருளாளர் இருக்கிறார். நிதியை மீறி அநீதியாகவும் சில கட்சிகள் நிதி வசூல் செய்கிறார்கள். அப்படி இல்லாமல் முறையான கணக்கு வழக்குகளோடு பா.ஜ.க நிதி வசூல் செய்து வருகிறது.”

அண்ணாமலை

`மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் கட்சியை வளர்க்காமல், விளையாட்டு போட்டிகள் என்று நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள்’ என்று உங்கள் கட்சியினர் சிலரே விமர்சிக்கிறார்களே?

“ஓட்டு வாங்குவோம் என்பது முக்கியம் கிடையாது. நண்பர்களாக நெருங்கி வரும் போதுதானே திட்டங்கள் பற்றி சொல்ல முடியும். நட்பு வட்டத்தில் அவர்களைக் கொண்டு வருவதற்கு விளையாட்டு நிச்சயம் பயன்படும். இளைஞர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைமீது மிகப்பெரிய ஈர்ப்பில் இருக்கிறார்கள். ஒதுங்கி நின்று க்ரேசில் இருப்பவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம். அதன் ஒரு பகுதியாக கபடி போட்டி நடத்தியிருக்கிறோம். திரும்பாத இளைஞர்களை இன்று பா.ஜ.க பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்போகிறது. அதனால் பெரிய மாற்றத்தை தமிழ்நாடு பார்க்கும்.”

சரத்குமார்

எத்தனையோ பேரை பா.ஜ.க-வில் இணைக்கிறீர்கள். உங்களின் உறவுக்காரர் சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் கார்டு கொடுக்கப் போகிறீர்கள்?

“வந்தால் நிச்சயம் வரவேற்போம்... அவர் தனியாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும்போது நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது.”

ராகுல் காந்தி

`சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1,000 சதுர கிலோ மீட்டர் இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி’ என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?

“இதை ராகுல் காந்தி சொல்வதுதான் வேடிக்கை. பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நம் எல்லையில் சீனாவின் அத்துமீறலை துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் இந்தியா, சீனா எல்லையில் போர் மூண்டுவிடுமா என்று உலகமே உற்று நோக்கியது. அப்போது சீன தூதர்கள் இருவர் ராகுல் காந்தியைப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அதை மறுத்த ராகுல், அவர்கள் சீன இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு ஒப்புக்கொண்டார். எனவே இந்த தேசத்தின் துரோக பிம்பம்தான் ராகுல். காங்கிரஸ்காரர்களைப் போல் எல்லை பிரச்னையிலோ, தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கோ பா.ஜ.க அரசு என்றும் `லவ் லெட்டர்' எழுதாது. துணிவான நடவடிக்கையே இருக்கும்.”

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வில் பா.ஜ.க, இ.பி.ஸ் பக்கமா, ஓ.பி.எஸ் பக்கமா?

“இது குறித்து, ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்று தலைவர் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறார். சீக்கிரம் அவர்கள் பிரச்னை எல்லாம் முடியும். அப்போது இது பற்றி கேள்விக்கு பதில் கிடைக்கும்.”

முடியும் என்று உறுதியாக சொல்கிறீர்கள். எப்படி பா.ஜ.க தலையிட்டு முடித்து வைக்கப் போகிறதா?

“தி.மு.க கூட இப்படி ஒரு பழி போடாது. அப்படி எல்லாம் ஏதும் கிடையாது. எங்கள் திட்டத்துக்கான வேலை, அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி  ஓடிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கமிட்டி, மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வது என பரபரப்பாக இருக்கிறோம். எனவே எங்கள் இலக்கை அடையவே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதன் பலன் வரும் தேர்தல்களில் தெரியும்.”


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...