Skip to main content

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? உங்கள் பணத்தை திருடும் `பலே' வைரஸ்... உஷார்!

SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்..

டெக்னாலஜி எந்த அளவுக்கு நம்முடைய வேலைகளை எளிமையாக்கியிருக்கிறதோ அதே நேரம் பல சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக இப்போது எல்லாமே மொபைல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் நம்மை ஏமாற்றுவதற்கு என்றே பல ஹேக்கர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹேக்கிங்

இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினமாம். இந்த வைரஸ் தற்போது 5ம் தலைமுறை வெர்ஷனுக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும். இது இணையத்தில் நடக்கும் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக் செய்வதில்தான் குறியாக இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் என்ன செய்யும்?

இந்த வைரஸ் நம்முடைய மொபைலிலிருந்து பெயர், பாஸ்வேர்ட், நம்முடைய இணைய தேடல்களின் குக்கீஸ், செயலிகளின் விவரங்கள் போன்றவற்றை திருடிவிடுமாம். இந்த வைரஸ் அதிகாரபூர்வ வங்கி, மற்றும் பிற செயலிகள் போலவே தன்னுடைய வடிவமைப்பைக் கொண்டிருக்குமாம். குறிப்பாக குரோம், அமேசான், என் எஃப் டி போன்ற செயலிகளின் லோகோ போலவே இருக்குமாம். கிட்டதட்ட 200க்கும் மேலான மொபைல் ஆப்கள் போல இருக்கும் இந்த வைரஸை மொபைலில் இன்ஸ்டால் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த வைரஸ் அதிகாரப்பூர்வ செயலிகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு மொபைலில் ஊடுருவும் திறன் கொண்டது. மொபைலில் நுழைந்தவுடன் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து செயலிகளின் விவரங்களையும் அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வருக்கு அனுப்புவிடுகிறது. அந்த விவரங்களை XML வடிவத்தில் சேமித்து வைத்துக்கொன்டு செயலிகளை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

பேங்கிங்

நம்முடைய விவரங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், நம்முடைய தட்டச்சு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விடியோ, வாய்ஸ் ஆகியவற்றை ரெக்கார்ட் செய்வது வரை அனைத்தையும் கேப்சர் செய்யும் திறன் இந்த வைரஸுக்கு உள்ளது.

எப்படி சோவா வைரஸிலிருந்து தப்பிப்பது?

வழக்கமாக ஆன்டிவைரஸ் செயலி மூலமாகவோ, மொபைலின் பிரத்யேக செட்டிங் மூலமாகவோ இதுபோன்ற வைரஸ்களையும், தேவையற்ற ஃபைல்களையும் நீக்குவதன் மூலம் வைரஸ்களை நீக்குவோம். ஆனால் இந்த சோவா வைரஸ் இதற்கெல்லாம் அசராது. எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் வரும். எனவே இந்த வைரஸ் மொபைலில் வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

1. பிளேஸ்டோரிலிருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும். இன்ஸ்டால் செய்யப்போகும் செயலியின் விவரங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

2. செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது எல்லாவற்றுக்கும் அனுமதி தரக்கூடாது. தேவையில்லாத செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

பிளே ஸ்டோர்

3. செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மொபைலை 3 மாதத்துக்கு ஒருமுறை ரீசெட் செய்யலாம்.

4. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்கள் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக வரக்கூடிய எந்த லிங்கையும் முழுமையாகப் படித்து பார்க்காமல் க்ளிக் செய்ய வேண்டாம்.

5. செயலிகளைத் தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் எதையும் க்ளிக் செய்ய வேண்டாம். தேவையான செயலிகளை ப்ளேஸ்டோருக்கு சென்று நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...