Skip to main content

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? உங்கள் பணத்தை திருடும் `பலே' வைரஸ்... உஷார்!

SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்..

டெக்னாலஜி எந்த அளவுக்கு நம்முடைய வேலைகளை எளிமையாக்கியிருக்கிறதோ அதே நேரம் பல சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக இப்போது எல்லாமே மொபைல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் நம்மை ஏமாற்றுவதற்கு என்றே பல ஹேக்கர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹேக்கிங்

இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினமாம். இந்த வைரஸ் தற்போது 5ம் தலைமுறை வெர்ஷனுக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும். இது இணையத்தில் நடக்கும் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக் செய்வதில்தான் குறியாக இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் என்ன செய்யும்?

இந்த வைரஸ் நம்முடைய மொபைலிலிருந்து பெயர், பாஸ்வேர்ட், நம்முடைய இணைய தேடல்களின் குக்கீஸ், செயலிகளின் விவரங்கள் போன்றவற்றை திருடிவிடுமாம். இந்த வைரஸ் அதிகாரபூர்வ வங்கி, மற்றும் பிற செயலிகள் போலவே தன்னுடைய வடிவமைப்பைக் கொண்டிருக்குமாம். குறிப்பாக குரோம், அமேசான், என் எஃப் டி போன்ற செயலிகளின் லோகோ போலவே இருக்குமாம். கிட்டதட்ட 200க்கும் மேலான மொபைல் ஆப்கள் போல இருக்கும் இந்த வைரஸை மொபைலில் இன்ஸ்டால் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த வைரஸ் அதிகாரப்பூர்வ செயலிகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு மொபைலில் ஊடுருவும் திறன் கொண்டது. மொபைலில் நுழைந்தவுடன் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து செயலிகளின் விவரங்களையும் அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வருக்கு அனுப்புவிடுகிறது. அந்த விவரங்களை XML வடிவத்தில் சேமித்து வைத்துக்கொன்டு செயலிகளை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

பேங்கிங்

நம்முடைய விவரங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், நம்முடைய தட்டச்சு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விடியோ, வாய்ஸ் ஆகியவற்றை ரெக்கார்ட் செய்வது வரை அனைத்தையும் கேப்சர் செய்யும் திறன் இந்த வைரஸுக்கு உள்ளது.

எப்படி சோவா வைரஸிலிருந்து தப்பிப்பது?

வழக்கமாக ஆன்டிவைரஸ் செயலி மூலமாகவோ, மொபைலின் பிரத்யேக செட்டிங் மூலமாகவோ இதுபோன்ற வைரஸ்களையும், தேவையற்ற ஃபைல்களையும் நீக்குவதன் மூலம் வைரஸ்களை நீக்குவோம். ஆனால் இந்த சோவா வைரஸ் இதற்கெல்லாம் அசராது. எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் வரும். எனவே இந்த வைரஸ் மொபைலில் வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

1. பிளேஸ்டோரிலிருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும். இன்ஸ்டால் செய்யப்போகும் செயலியின் விவரங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

2. செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது எல்லாவற்றுக்கும் அனுமதி தரக்கூடாது. தேவையில்லாத செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

பிளே ஸ்டோர்

3. செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மொபைலை 3 மாதத்துக்கு ஒருமுறை ரீசெட் செய்யலாம்.

4. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்கள் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக வரக்கூடிய எந்த லிங்கையும் முழுமையாகப் படித்து பார்க்காமல் க்ளிக் செய்ய வேண்டாம்.

5. செயலிகளைத் தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் எதையும் க்ளிக் செய்ய வேண்டாம். தேவையான செயலிகளை ப்ளேஸ்டோருக்கு சென்று நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...