Skip to main content

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? உங்கள் பணத்தை திருடும் `பலே' வைரஸ்... உஷார்!

SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்..

டெக்னாலஜி எந்த அளவுக்கு நம்முடைய வேலைகளை எளிமையாக்கியிருக்கிறதோ அதே நேரம் பல சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக இப்போது எல்லாமே மொபைல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் நம்மை ஏமாற்றுவதற்கு என்றே பல ஹேக்கர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹேக்கிங்

இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினமாம். இந்த வைரஸ் தற்போது 5ம் தலைமுறை வெர்ஷனுக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும். இது இணையத்தில் நடக்கும் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக் செய்வதில்தான் குறியாக இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் என்ன செய்யும்?

இந்த வைரஸ் நம்முடைய மொபைலிலிருந்து பெயர், பாஸ்வேர்ட், நம்முடைய இணைய தேடல்களின் குக்கீஸ், செயலிகளின் விவரங்கள் போன்றவற்றை திருடிவிடுமாம். இந்த வைரஸ் அதிகாரபூர்வ வங்கி, மற்றும் பிற செயலிகள் போலவே தன்னுடைய வடிவமைப்பைக் கொண்டிருக்குமாம். குறிப்பாக குரோம், அமேசான், என் எஃப் டி போன்ற செயலிகளின் லோகோ போலவே இருக்குமாம். கிட்டதட்ட 200க்கும் மேலான மொபைல் ஆப்கள் போல இருக்கும் இந்த வைரஸை மொபைலில் இன்ஸ்டால் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த வைரஸ் அதிகாரப்பூர்வ செயலிகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு மொபைலில் ஊடுருவும் திறன் கொண்டது. மொபைலில் நுழைந்தவுடன் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து செயலிகளின் விவரங்களையும் அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வருக்கு அனுப்புவிடுகிறது. அந்த விவரங்களை XML வடிவத்தில் சேமித்து வைத்துக்கொன்டு செயலிகளை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

பேங்கிங்

நம்முடைய விவரங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், நம்முடைய தட்டச்சு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விடியோ, வாய்ஸ் ஆகியவற்றை ரெக்கார்ட் செய்வது வரை அனைத்தையும் கேப்சர் செய்யும் திறன் இந்த வைரஸுக்கு உள்ளது.

எப்படி சோவா வைரஸிலிருந்து தப்பிப்பது?

வழக்கமாக ஆன்டிவைரஸ் செயலி மூலமாகவோ, மொபைலின் பிரத்யேக செட்டிங் மூலமாகவோ இதுபோன்ற வைரஸ்களையும், தேவையற்ற ஃபைல்களையும் நீக்குவதன் மூலம் வைரஸ்களை நீக்குவோம். ஆனால் இந்த சோவா வைரஸ் இதற்கெல்லாம் அசராது. எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் வரும். எனவே இந்த வைரஸ் மொபைலில் வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

1. பிளேஸ்டோரிலிருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும். இன்ஸ்டால் செய்யப்போகும் செயலியின் விவரங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

2. செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது எல்லாவற்றுக்கும் அனுமதி தரக்கூடாது. தேவையில்லாத செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

பிளே ஸ்டோர்

3. செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மொபைலை 3 மாதத்துக்கு ஒருமுறை ரீசெட் செய்யலாம்.

4. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்கள் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக வரக்கூடிய எந்த லிங்கையும் முழுமையாகப் படித்து பார்க்காமல் க்ளிக் செய்ய வேண்டாம்.

5. செயலிகளைத் தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் எதையும் க்ளிக் செய்ய வேண்டாம். தேவையான செயலிகளை ப்ளேஸ்டோருக்கு சென்று நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...