Skip to main content

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக மாறிவிடுவாள். இது சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறியா அல்லது அவளுக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

 மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்


மனது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் போகாது. திடீரென உற்சாகம் கொள்ளும். அடுத்து அது மட்டுப்படும். தொடர்ந்து அதற்கு நேரெதிராக ஏதோ ஒரு கவலை வரும். 

மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அதிலிருந்து விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப்போய் கிடப்பார்கள். தற்கொலை எண்ணம் துரத்தும். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை எனத் தோன்றும். எந்த விஷயத்திலும் நம்பிக்கை இருக்காது. இது சில நாள்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம். இதை மருந்து, மாத்திரைகளால் மட்டும்தான் சரிப்படுத்த முடியும்.

கவலை வரும். அதிலிருந்து விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப்போய் கிடப்பது தீவிர மன அழுத்தம். தற்கொலை எண்ணம் துரத்தும்.

இந்த மூன்றுநிலைகள் தவிர, யூனிபோலார் டிப்ரெஷன் (Unipolar Depression), பைபோலார் டிப்ரெஷன் (Bipolar depression) என மேலும் இரண்டு வகையான மன அழுத்தம் உள்ளன.

வருத்தமோ, கவலையோ இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் அவற்றைக் கடந்து சாதாரண மனநிலைக்கு வருவார்கள். மீண்டும் மன அழுத்தத்துக்குள் போவார்கள். மறுபடி மீள்வார்கள். இது சில நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என நீடிக்கலாம். இதுதான் யூனிபோலார் டிப்ரெஷன்.

இன்னொருவகை... பைபோலார் டிப்ரெஷன். இந்த வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலை அதீதமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவார்கள். உடனடியாக சந்தோஷ மனநிலைக்குப் போவார்கள். அதற்குக் காரணமே இருக்காது. அதுவும் உச்சத்தில் இருக்கும். கவலையோ, மகிழ்ச்சியோ, இரண்டுமே இவர்களுக்கு அதீதமாக இருக்கும். ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி அல்லது 15 நாள்கள் கவலை, அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சி என இருப்பார்கள். எனவே, உங்களுடைய மேலோட்டமான கேள்வியை வைத்து இதற்கான முழுமையான தீர்வைச் சொல்வது கடினம். உங்கள் தோழியை மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...