Skip to main content

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில்  உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய்  இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தக் கருமை நிறப் படலம் மாறுமா?

பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   

மருத்துவர் கே. பாஸ்கர்

நீங்கள் சொல்லும் இந்ப் பிரச்னையை ஆங்கிலத்தில்  'அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ்' (Acanthosis Nigricans) என்றும்,  தமிழில்  'கறுப்பு வெல்வெட் திட்டு' என்றும் சொல்கிறோம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும்போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
2024-ல் வெளிவந்த இந்திய மருத்துவச் சங்கத்தின் ஓர் ஆய்விதழ் கட்டுரைப்படி, தென்னிந்தியாவில் இத்தகைய கறுப்பு வெல்வெட் திட்டுகள் பெண்களிடையே 20 சதவிகிதமும், ஆண்களிடையே 16 சதவிகிதமும் உள்ளதாகத் தெரிகிறது. இது உச்சபட்சமாக 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. மேலும், 60 வயதுக்குப் பிறகு இது குறைந்துவிடுகிறது.

இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும் போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த பாதிப்பு ஒரு தொற்றுநோயோ அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடியதோ அல்ல. உடலின் ஏதோ ஒரு மருத்துவப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம். உடல் பருமன், நீரிழிவு நோய், பெண்களில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) போன்ற பிரச்னைகளுடன் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. கருத்தடை மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் இது வரலாம்.
அரிதாக, மரபணு காரணமாக சில குடும்பங்களில் எல்லோரையும் இது பாதிக்கலாம். மேலும், சிலருக்கு குறிப்பாக அடர்ந்த கறுப்பு நிற சருமம் கொண்டவர்களுக்கு முழங்கைகள், முழங்கால்கள், கன்னங்கள், நெற்றி போன்ற இடங்களில்கூட கறுப்புத் திட்டுகள் ஏற்படலாம்.
மிகவும் அரிதாக, இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாகவும் இது இருக்கலாம்.

இது உடலின் மடிப்புகள் அல்லது சருமத்தில் உராய்வு ஏற்படும் பகுதிகளில்,  அதாவது அக்குள், இடுப்புப்பகுதி,   கழுத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில்  ஏற்படுவதால், ஈரப்பதத்தால் மென்மையடைந்து துர்நாற்றம் வீசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சிலருக்கு இது தோற்றத்தை  பாதிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். மேலும், இதனுடன் தொடர்புடைய  நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கான சிக்கல்கள் ஏற்படலாம்.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கோ, சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கோ இது உடலில் திடீரென்று ஏற்பட்டால், இது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று மருத்துவர் பரிசீலிப்பார். அரிப்பு நோய் (eczema) உள்ளவர்கள் அடிக்கடி சொரிந்து கொள்வதால், சருமம் கறுப்பு நிறமாக மாறக்கூடும். அதுவும் அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸும் வேறு வேறு.

உடல் பருமன் இருந்தால் அந்த எடையை உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகளில் குறைக்கச் சொல்வார்.

அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ் கறுப்பு வெல்வெட் திட்டுகளை மருத்துவர் பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விடுவார்.
உங்கள் உயரம், எடை ஆகியவற்றைக் கணக்கெடுத்து, உடல் பருமன் இருந்தால் அந்த எடையை உடற்பயிற்சி மற்றும்  உணவுக்கட்டுப்பாட்டு முறைகளில் குறைக்கச் சொல்வார். அதுவே இதற்கான சிகிச்சை.
உங்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து நீரிழிவு, தைராய்டு உள்ளனவா என்று பரிசோதிப்பார். அடிப்படை உடல்நலப் பரிசோதனைகளான கொழுப்பு அளவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாடுகளை சோதிக்கும் ரத்தப் பரிசோதனைகளும் இதில் அடங்கும். குறிப்பிட்ட சில பேருக்கு ஹார்மோன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

உங்கள் குடும்ப மருத்துவருக்கு நோய் கண்டுபிடிப்பதில் குழப்பம் இருந்தால் அல்லது புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று சந்தேகித்தால், சருமநோய் மருத்துவரின் ஆலோசனைக்குப் பரிந்துரைப்பார். அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸுடன் தொடர்புடைய நோய்களுக்குத் தான் மருத்துவம் செய்ய வேண்டும். மற்றபடி அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸுக்கு மருத்துவம் தேவையில்லை.
ஆனால், இது அழகு சார்ந்த பிரச்னையை ஏற்படுத்துவதால், சரும நோய் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்பூச்சுக்கான களிம்புகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...