Skip to main content

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்... ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆரோக்கியமானதா... அது சத்தான உணவாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

``உணவுக்கு மாற்றாக நீங்கள் மில்க் ஷேக் கொடுக்கிறீர்கள் என்றால், அதை அதிகபட்ச ஊட்டச்சத்து நிறைந்ததாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். உதாரணத்துக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்களில் செய்யப்படும் மில்க் ஷேக், காய்கறிகள் மற்றும் பாலக் கீரையில் செய்யப்படுகிற ஸ்மூத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொடுப்பதோடு, நார்ச்சத்துக்கும் உதவும்.

உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக்  செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து  அதிகரிக்கும். குழந்தைகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வோடும் இருப்பார்கள். பாலை காய்ச்சாமல் பயன்படுத்தாமல், காய்ச்சி ஆற வைத்து அதையே மில்க் ஷேக் செய்யப் பயன்படுத்த வேண்டும். சரிவிகித உணவு  கொடுக்க  முடியாத நிலையில், புரதச்சத்தும், ஆற்றலும் நிறைந்த மில்க் ஷேக்  நிச்சயம் குழந்தைகளுக்கு உதவும்.  

குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக செயற்கை மணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டிகள், இனிப்புகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். 

ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு என்பதால், உணவுக்கு மாற்றாக அதையே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாவகையான உணவுகளையும் உண்பதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளே கொடுக்காமல் இருக்க முடியாது. அதனால் அவற்றை அளவில் குறைத்துக் கொடுக்கலாம். ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம். "

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...