Skip to main content

Doctor Vikatan: இதயத்துக்கு ஸ்டென்ட் ஓகே, கிட்னிக்கும் ஸ்டென்ட் வைக்கப்படும் என்பது உண்மையா?

Doctor Vikatan: பொதுவாக, இதயப் பிரச்சனைகளுக்காக ஸ்டென்ட் வைப்பதைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிறுநீரகப் (கிட்னி) பிரச்சனைகளுக்காகவும் ஸ்டென்ட் வைக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் அவருடைய உறவினருக்குக் கிட்னி ஸ்டென்ட் வைத்ததாகக் கூறினார். கிட்னி ஸ்டென்ட் என்றால் என்ன? இது யாருக்குத் தேவைப்படும், மற்றும் இது ஏன் வைக்கப்படுகிறது?  

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

ஸ்டென்ட் என்பது சிறுநீரகம், இதயம் என ரத்த நாளங்களில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் வைக்கப்படும். கழுத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும், வயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும்கூட ஸ்டென்ட் வைப்பார்கள். கிட்னியையும், சிறுநீர்க் குழாயையும், சிறுநீர்ப்பையோடு கனெக்ட் செய்வதுதான் கிட்னியில் பொருத்தப்படுகிற ஸ்டென்ட்டின் நோக்கம். இதை வைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாக, வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients), நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் சிறுநீரகத் தொற்று (Infection) ஏற்படும், இதனை மருத்துவ மொழியில் 'பைலோனெப்ரிடிஸ்' (Pyelonephritis) என்று  சொல்வோம். இப்படி இன்பெக்ஷன் (தொற்று) வரும்போது, சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய  சளி போன்ற திரவம் உலர்ந்து போய்  அடைத்துக் கொள்ளும். அப்படி அது அடைக்காமல் இருப்பதற்காகத்தான்  ஸ்டென்ட்  போடுகிறோம். இந்த  ஸ்டென்ட், சிறுநீரை (Urine) ஒரு பக்கமாக வழிமாற்றிக் கொண்டே இருக்கும். இதனால் அடைப்பு ஏற்படாது.

நம் உடலில் எங்கு இன்பெக்ஷன் வருமோ அங்கு சளி போன்ற திரவப்படலம் உண்டாகும்.உதாரணத்துக்கு,  நுரையீரலில் இன்பெக்ஷன் ஆகும்போது சளி உண்டாகிறது. அந்தச் சளியை நாம் இருமி, காரித் துப்பிவிடுகிறோம். சில நேரம் அந்தச் சளியே அடைத்துக் கொண்டு, பயங்கரமான, கடுமையான இருமலாக வெளிப்படும். அப்படியும் சளி வெளியே வராமல் இருந்தால், அதற்கு நாம்  ஊசி மற்றும் ஆன்டிபயாடிக்  மருந்துகள் கொடுத்துச் சரி செய்வோம்.

சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் இன்பெக்ஷன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால் 'பேபிலரி நெக்ரோசிஸ்' (Papillary necrosis) என்ற நிலை ஏற்படும்.

ஆனால், சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் இன்பெக்ஷன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால்  'பேபிலரி நெக்ரோசிஸ்' (Papillary necrosis) என்ற நிலை ஏற்படும்.  இன்பெக்ஷன் ஆவதால், எப்படி நுரையீரலில் சளி வருகிறதோ, அதேபோல சிறுநீரகத்திலும் இன்பெக்ஷன் ஆகி சளி (கழிவு) வரும்போது, அது  கட்டியாகி அடைத்துக் கொண்டால், சேகரமாகும் சிறுநீர் உடனுக்குடன் அடைப்பின் காரணமாக உடலிலேயே தங்கிவிடும். இதனால்  தொற்றானது  மேல்நோக்கி ஏறிவிடும். அப்படி  ஏறுவதால்   ரத்தத்தில் நச்சு பரவும் செப்சிஸ் நிலை ஏற்பட்டுவிடும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், கிட்னி இன்பெக்ஷனைக் கண்டறியும்போது நாம்  ஸ்டென்ட்   போடுகிறோம்.

பொதுவாக வயதானவர்களுக்குப் போடக்கூடிய  ஸ்டென்ட்டிற்கு இதுதான் முதன்மைக் காரணம்.  சில சமயம் இளவயதினருக்கும் போடப்படுகிறது. சமீபத்தில் திருமணமானவர்களுக்கு, தாம்பத்ய உறவால் ஏற்படக்கூடிய தொற்றான  'ஹனிமூன் சிஸ்டைடிஸ்' (Honeymoon cystitis)  வரும். அதற்கும்  ஸ்டென்ட் போடுவதுண்டு. மற்றபடி, சிறுநீரக கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு  ஸ்டென்ட்   போடுவதுண்டு. புற்றுநோய் ஆபரேஷனுக்குப் பிறகும்  ஸ்டென்ட்   போடுவோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கூட  ஸ்டென்ட்   போடலாம். பெரும்பாலான ஸ்டென்ட்டுகளை நான்கு மாதங்களில் எடுத்துவிட வேண்டும்.  குறிப்பிட்ட சில மருத்துவக் காரணங்களுக்காக  சில ஸ்டென்ட்டுகளை ஒரு வருடம் வரை கூட வைத்திருக்கலாம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...