Skip to main content

Doctor Vikatan: ஓவராகச் சாப்பிட்டாலும் சிலருக்கு மட்டும் உடல் எடை ஏறாதது ஏன்?

Doctor Vikatan: சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை.

அதுவே இன்னும் சிலர், ஒரு நாள் ஆசைக்காகக் கொஞ்சம் பிரியாணி சாப்பிட்டாலும் அடுத்தநாளே வெயிட் மெஷின் எடை ஏறியதாகக் காட்டும்.

இந்த இரண்டுக்கும் என்ன காரணம்...  எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

சிலர் நிறைய சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள், அதே சமயம் சிலர் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடும். இதற்கு நம் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மைதான் (Hormonal Imbalance) முக்கியக் காரணம். இதை 'வளர்சிதை மாற்றம்' (Metabolic Rate) என்று குறிப்பிடுகிறோம்.

சிலருக்கு இயற்கையிலேயே இந்த வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக (High Metabolic Rate)  இருக்கும். இவர்களது உடல், சாப்பிடும் உணவை மிக எளிதாக எரித்துச் செலவழித்துவிடும். இதன் காரணமாக, அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.

இது அவர்களுடைய உடலின் தனித்துவமான வாகு அல்லது அமைப்பு. இப்படிப்பட்டவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடனே ஜீரணமாகி, கலோரிகள் எரிக்கப்படுவதால் அவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னொரு புறம், சிலருக்கு உணவைப் பார்த்தாலே உடல் எடை கூடுவது போன்ற உணர்வு இருக்கும். இவர்களது உடலில் வளர்சிதை மாற்றம் மிகக் குறைவாக (Low Metabolic Rate) இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். பெற்றோரின் உடல்வாகு மற்றும் மெட்டபாலிசம் விகிதம் பிள்ளைகளுக்கும் கடத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக வளர்சிதை மாற்றத்தை படிப்படியாக அதிகரிக்க முடியும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை நாம் சில வழிகளில் மேம்படுத்தலாம். உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக வளர்சிதை மாற்றத்தைப் படிப்படியாக அதிகரிக்க முடியும். உடலின் தசைப்பகுதியை (Muscles) வலிமையாக்கும் போது, தானாகவே மெட்டபாலிக் ரேட் (Metabolic Rate) அதிகரிக்கும். 

எனவே, குறைந்த வளர்சிதை மாற்றம் உள்ளவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட காலகட்டத்துகு மேல், உடல் எடை கூடவே இல்லையே என்ற கவலை ஏற்படும்போது, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில், சில நேரங்களில் தைராய்டு ஹார்மோன் (Thyroid Hormone) குறைபாடுகள் அல்லது பிரச்னைகள் இருந்தாலும், சாப்பிடும் உணவு உடனே ஜீரணமாகி உடல் எடை அதிகரிக்காமல் போகலாம். 

எனவே, மருத்துவரிடம் சென்று ஹார்மோன் பரிசோதனை செய்து, அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது என்பதால் இத்தகைய உடல்வாகு உள்ள சிலர், உடற்பயிற்சி செய்யாமல் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் இவர்களுக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளன. இதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...