Skip to main content

Doctor Vikatan: யாரையும் தாக்கும் புற்றுநோய்... முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா?

Doctor Vikatan: இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்றே கணிக்க முடிவதில்லை. ஒருவருக்குப் புற்றுநோய் வருமா என்பதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் டெஸ்ட் இருக்கிறதா?  அதை எத்தனை நாள்களுக்கொரு முறை செய்யலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும்,  குறிப்பிட்ட சில  பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். சில வகையான புற்றுநோய்களை வழக்கமான பரிசோதனைகள் (Screening) மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அவற்றை வருடத்திற்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.

வாய் புற்றுநோய் (Oral Cancer): வருடத்திற்கு ஒருமுறை வாய்வழிப் பரிசோதனை (Oral Examination) செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

தொண்டைப் புற்றுநோய் (Throat Cancer): வருடத்திற்கு ஒருமுறை இ.என்.டி (காது, மூக்கு, தொண்டை) மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

மார்பகப் புற்றுநோய் (Breast Cancer): பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் (mammogram) பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Uterus / Cervical Cancer):
பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap Smear) பரிசோதனை செய்துகொள்வது கர்ப்பப்பை  வாயில் ஏற்படும் புற்றுநோய் மாற்றங்களைக் கண்டறிய உதவும்.

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer): புகைப்பழக்கம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒருமுறை சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

குடல் புற்றுநோய் (Colon Cancer): மலத்தில் ரத்தம் கலந்து வருகிறதா என்பதைக் கண்டறியும் மலப் பரிசோதனை (Faecal Blood Test) மூலம் குடல் புற்றுநோயைக் கண்டறியலாம்.

புராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer):
ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறை பி.எஸ்.ஏ (PSA - Prostate-Specific Antigen) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), கணையப் புற்றுநோய் (Pancreas Cancer), கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) போன்றவை...

உடலில் அசாதாரண மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம்.

உணவு முறையையோ அல்லது உடற்பயிற்சியையோ மாற்றாத நிலையிலும், எதிர்பாராத விதமாக உடல் எடை திடீரென குறைவது...
சருமத்தின் கீழ் புதிதாகத் தோன்றும், வலியற்ற அல்லது நாளுக்கு நாள் அளவில் பெரிதாகி வரும் கட்டிகள் மற்றும் தடிப்புகள்...
நீண்ட நாள்களாக இருக்கும் விவரிக்க முடியாத வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலம் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து போதல்... நீண்ட நாள்களாகக் குணமாகாத இருமல் அல்லது குரலில் ஏற்படும் தொடர்ச்சியான கரகரப்பு... உடலில் புதிய மச்சங்கள் தோன்றுவது அல்லது ஏற்கெனவே உள்ள மச்சங்களின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுவது... பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாள்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, அசாதாரண ரத்தப்போக்கு... போன்ற அறிகுறிகள் இருந்தால் அலர்ட் ஆகி, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெல்ல, தகுந்த இடைவெளியில் (வருடத்திற்கு ஒருமுறை) மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், உடலின் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடி கவனம் கொடுப்பதும் மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...