Skip to main content

Doctor Vikatan: காலப்போக்கில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா கொழுப்பக்கட்டி?

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நெற்றிப் பகுதியில் லேசான புடைப்பு போல வந்தது. சரியாகவே இல்லை.  மருத்துவரைப் பார்த்தபோது, அது  கொழுப்புக்கட்டி என்று சொன்னார். உடலில் கொழுப்புக் கட்டி ஏன் ஏற்படுகிறது... அது பிற்காலத்தில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

கொழுப்புக்கட்டிகள் (Lipomas) ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால், இது முக்கியமாக மரபணு ரீதியான பாதிப்புகள் மற்றும் கொழுப்பு செல்கள் அசாதாரணமாக, அளவுக்கு அதிகமாக வளர்வதோடு தொடர்புடையது. இவை புற்றுநோய் அல்லாத, பொதுவாக உடலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத கட்டிதான். கொழுப்புக்கட்டிகள் என்பவை சாதாரண கொழுப்பு வளர்ச்சியே தவிர, இவை ஒருபோதும் புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதில்லை.

சாதாரண கொழுப்புக்கட்டிகள் மென்மையாகவும், வலியற்றதாகவும், சருமத்துக்கு அடியில் தொட்டால் எளிதாக நகரக்கூடியதாகவும் இருக்கும். இருப்பினும்,  சில எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு பொது மருத்துவர் அல்லது  சரும மருத்துவரை (Dermatologist) அணுக வேண்டும். அவை...

வேகமான வளர்ச்சி: சில வாரங்கள் அல்லது மாதங்களில் கட்டியின் அளவு கணிசமாக அதிகரிப்பது.

வலி: கட்டியைத் தொடும்போது மென்மையாக மாறுவது அல்லது வலி ஏற்படுவது.

கட்டியின் தன்மையில் மாற்றம்: கட்டி மிகவும் கெட்டியாக, கடினமாக மாறுவது அல்லது ஒரே இடத்தில் நிலையாக நிற்பது (அழுத்தும்போது நகராமல் இருப்பது).

சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்: கட்டி இருக்கும் இடத்தின் மேல் உள்ள சருமப்பகுதியில் புண்கள், சிவந்து போதல் அல்லது அசாதாரணமான பள்ளங்கள்  ஏற்படுவது.

சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது.

கொழுப்புக்கட்டிகள் தானாகவே மறைந்துவிடாது. அவை சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது. உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சியால் சுருங்காது மற்றும் தானாகவே மறைந்தும் போகாது. பல கட்டிகள் ஒரே அளவிலேயே இருக்கும் என்றாலும், சில கட்டிகள் காலப்போக்கில் மெதுவாக வளரக்கூடும்.

இவை பாதிப்பில்லாதவை என்பதால், இவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது பொதுவாக அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இருப்பினும், கட்டி, வலியை ஏற்படுத்தினாலோ, உடலின் அசைவுகளைத் தடுத்தாலோ அல்லது தோற்றப் பொலிவைக் கெடுப்பதாக இருந்தாலோ அதனை அகற்றிவிடலாம்.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் என்பது மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள முறை. மயக்க மருந்து (anesthesia) அளித்து, கொழுப்புக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்படும். கொழுப்புக்கட்டிகள் மிகவும் சகஜமானவை. சராசரியாக 1,000 பேரில் ஒருவருக்கு கொழுப்புக்கட்டி உள்ளது. கொழுப்புக்கட்டிகள் பெரும்பாலும் 40 முதல் 60 வயதிற்குள் தோன்றும், ஆனால், அவை எந்த வயதிலும் வரலாம்.  பிறக்கும்போதே கூட  இருக்கலாம்.

கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் உருவாகலாம். அரிதான சந்தர்ப்பங்களில், கொழுப்புக்கட்டிகள் தசைகள், உள் உறுப்புகள் அல்லது மூளையில் கூட வளரக்கூடும். கொழுப்புக்கட்டி உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரே ஒரு கட்டி மட்டுமே இருக்கும், இருப்பினும் சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் வரவும் வாய்ப்புள்ளது.  கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என 
கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...